Thursday, February 7, 2013

இந்தியா எங்கள் தாய் நாடு ! இஸ்லாம் எங்கள் வழிபாடு ! யாரடா சொன்னது எங்களை(முஸ்லிம்கள் ) அந்நியன் என்று !

இந்தியா எங்கள் தாய் நாடு ! இஸ்லாம் எங்கள் வழிபாடு !
தமிழே எங்கள் மொழியாகும் தன் மானம் எங்கள் உயிராகும் !
யாரடா சொன்னது எங்களை(முஸ்லிம்கள் ) அந்நியன் என்று !
யாரடா சொன்னது எங்களை அந்நியன்என்று !
சுய நலம் இன்றி சுதந்திரம் வாங்க உழைத்தவர்கள் எங்கள் முன்னோர்கள்,
நாட்டின் துயரை ஒட்டிடவே தினம் நாட்டம் கொண்டவர்கள் முஸ்லிம்கள்
மறைத்து விட்டார்கள் (வரலாறுகளை ) நன்றியை மறந்து விட்டார்கள்
இதுதான் துரோகமா ! நாங்கள் செய்த பாவமா !
இதுதான் துரோகமா ! நாங்கள் செய்த பாவமா !
இந்தியா எங்கள் தாய் நாடு ! இஸ்லாம் எங்கள் வழிபாடு !
தமிழே எங்கள் மொழியாகும் தன் மானம் எங்கள் உயிராகும் !
கேரளா கரையில் மாப்பிள்ளை மார்கள் சிந்திய ரத்தம் இன்னும் காய வில்லை !வங்காளத்தில் நாங்கள் பட்ட காயங்கள் இன்னும் மாறவில்லை !
மறைத்து விட்டார்கள் (வரலாறுகளை ) நன்றியை மறந்து விட்டார்கள்
மைசூர் சிங்கம் திப்புவின் வீரம் மனதில் என்றும் மாறாது !
பகதூர் சாவுக்கு விளைத்த துன்பம் நினைத்தல் நெஞ்சம் தாங்கது !
இதுதான் துரோகமா ! நாங்கள் செய்த பாவமா 1
எண்ணுரு ஆண்டுகள் இந்திய நாட்டை ஆண்டவர்கள் நாங்கள் அறிந்திரா !
தாஜ்மஹாலும் குதுப்பிமனரும் சாட்சிக ள் கூறும் மறந்திரா !
மறுக்க முடியாது ! மறக்க முடியாது !
இதுதான் துரோகமா ! நாங்கள் செய்த பாவமா !
இதுதான் துரோகமா ! நாங்கள் செய்த பாவமா !
இந்தியா எங்கள் தாய் நாடு ! இஸ்லாம் எங்கள் வழிபாடு !
தமிழே எங்கள் மொழியாகும் தன் மானம் எங்கள் உயிராகும் !
யாரடா சொன்னது எங்களை(முஸ்லிம்கள் ) அந்நியன் என்று !
யாரடா சொன்னது எங்களை அந்நியன்என்று !

No comments:

Post a Comment