Wednesday, March 20, 2013

பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவியரின் பெற்றோருக்கு எச்சரிக்கை



பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவியரின் பெற்றோருக்கு எச்சரிக்கை
தமிழகத்தில் தற்போது நடந்து வரும் பிளஸ் 2 தேர்வு இறுதி கட்டத்தை நெருங்கி வருவதால், தேர்வு எழுதும் மாணவ, மாணவியரின் பெற்றோர் உஷாராக இருக்க வேண்டும்’ என, போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் ப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வு முடியும் நிலையில், மாணவ, மாணவியர் வீட்டை விட்டு ஓடுவது, சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. மாணவியர், தங்களின் காதலர்களாகிய மாணவர்கள், இளைஞர்களின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி வீட்டை விட்டும், பெற்றோரை தவிக்க விட்டும், சென்று விடுகின்றனர். போலீசாரின் கணக்கெடுப்பின் படி, கடந்த ஆண்டில் பொதுத் தேர்வு முடிவுற்ற நிலையில், தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளி மாணவியரில், 125 பேர், காதலர்களுடன் ஓட்டம் பிடித்தனர். இதில், பல மாணவியர், போலீஸ் வலையில் சிக்கினர். இவ்வாறு சிக்கியவர்களின் பெற்றோரை அழைத்து, பேச்சுவார்த்தை மட்டுமின்றி, மாணவியருக்கு ஆலோசனை வழங்கிய நிலையில், அவர்கள் மீண்டும், பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அந்த வகையில், கடந்த ஆண்டில், சேலம், தர்மபுரி, நாமக்கல், கரூர், திருச்சி, விழுப்புரம், சென்னை, கோவை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பள்ளி பொதுத் தேர்வு முடிந்த நிலையில், வீட்டை விட்டு, வெளியேரிய, மாணவ, மாணவியரின் எண்ணிக்கை அதிகரித்தது. அதில், திருச்சி முதலிடத்தை பெற்றது. தற்போது, பிளஸ் 2 பொதுத் தேர்வு, இறுதி கட்டத்தை நெருங்கி விட்ட நிலையில், மார்ச் 27ம் தேதி, தேர்வு, முடிவுக்கு வருகிறது. அன்றே, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு துவங்குகிறது. தேர்வு முடியும் நிலையில், காதலர்களுடன் தலைமறைவாகும் மாணவியரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக, உளவுத்துறை போலீசார், அரசுக்கு அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த எச்சரிக்கையை அடுத்து, தமிழகம் முழுவதும், போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். இதில், தேர்வு மையங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்துவதோடு, ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டுகளில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித் திரியும் இளம் ஜோடிகளிடம், விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா தலங்கள், அங்குள்ள தங்கும் விடுதிகள், கோவில்கள், சார்-பதிவாளர் அலுவலகங்கள் ஆகியவற்றையும் கண்காணிக்க, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களுக்கு வரும் இளம் ஜோடிகளிடம், தெளிவாக விசாரணை நடத்தி, அவர்கள் குறித்த முழு விவரங்களை சேகரிக்க வேண்டும் எனவும், தேவைப்படும் பட்சத்தில் அவர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து, பெற்றோரை அழைத்து ஒப்படைக்கலாம் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த ஆண்டு பொதுத் தேர்வு முடிந்த நிலையில் காதலர்களுடன், "எஸ்கேப்’ ஆன மாணவியரின் எண்ணிக்கை அதிகரிப்பு ஏற்பட்டது. சில இடங்களில், இளசுகளின் நடவடிக்கையால், ஜாதி, மத ரீதியிலான மோதல் வெடிக்கும் அபாயமும் ஏற்பட்டது. அதை அடுத்து, நடப்பாண்டில் இது போன்றவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம். மாணவ, மாணவியர் தேர்வு எழுதி முடிக்கும் நிலையில், அவர்களின் பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும். குறிப்பாக அவர்களுக்கு, பிரத்தியேகமாக வீடுகளில் அறைகள் இருக்கும் பட்சத்தில், அவற்றை கண்காணிக்க வேண்டும். விலை உயர்ந்த நகைகள், பணம், வங்கியின் ஏ.டி.எம்., கார்டு, செக் புத்தகம் ஆகியவற்றை பத்திரமாக மாணவ, மாணவியருக்கு தெரியாத வகையில் வைத்துக் கொள்ள வேண்டும். தேர்வு முடியும் நிலையிலும், முடிந்த பின்னரும் அவர்களின் தோழிகள், பழக்கமானவர்களையும் தொடர்ந்து கண்காணிக்கலாம். மாணவ, மாணவியர் பணம் கேட்கும் பட்சத்தில், அந்த பணத்துக்கான தேவை குறித்தும், அதன் அவசியம் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும்.
மாணவனோ, மாணவியோ காணவில்லை என்றால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவிப்பதோடு, அவர்களின் புகைப்படங்களை வழங்கி உதவலாம். அவர்களின் பழக்க வழக்கங்கள், தொடர்புகள் குறித்து முழு விவரங்களையும், போலீசாரிடம், எவ்வித தயக்கமும் இன்றி தெரிவித்தால், நடவடிக்கை எடுக்க உதவி கரமாக இருக்கும். பள்ளி தேர்வு முடிவுக்கு வரும் நிலையில், மாணவ, மாணவியரின் பெற்றோர் உஷாராக இருந்தால் மட்டுமே, பிரச்னைகளை தவிர்க்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

அன்பான கிறிஸ்தவர்களே. . .


கிறிஸ்தவர்கள் தங்கள் மதத்தினால் பலவிஷயங்களில் ஏமாற்றத்திற்கு ஆளாகிறார்கள். அதில் ஒன்றுதான்ஜெபக்கூட்டம். இந்த ஜெபக்கூட்டத்தை நடத்தும் இரண்டு முக்கிய
புள்ளிகள் -டி.ஜி.எஸ் தினகரன் மற்றும் நாலுமாவடி மோசரஸ். . . பல இலட்சங்கள்செலவு செய்து பொதுமேடைகளை அமைத்து பிறவிக் குருடனை குணப்படுத்துகிறேன், சப்பானியை நடக்க வைக்கிறேன், செவிடனை கேட்கவைக்கிறேன்என்ற பொய்யான வாக்குறுதிகளை ஜெபத்தின் பெயரால் அரங்கேற்றுகிறார்கள்.இப்படிப்பட்ட ஜெபத்தினால் உங்கள் பகுதியிலுள்ள 1 மாற்றுத்திரணாளியாவது குணமடைந்ததுண்டா? நீங்கள் சுத்தமானஇருதயமுள்ளவராக இருந்தால்சிந்தித்துப்பாருங்கள் மக்கள் முன் அரங்கேற்றப்படும் ஜெபங்கள்வீண் பகட்டுமேனிக்கு செய்யப்படும் ஜெபங்கள் இல்லையா?ஒருகிருத்தவன் எவ்வாறு ஜெபத்தைஎவ்வாறு மேற்கொள்ளவேண்டும் என்பதை பைபிள்

தெளிவாகசொல்கிறது. .

"இதோ ஒரு சுத்தமானஇருதயமுள்ளவன் கீழ்கண்டவாறுதான் தன் சேனைகளின்

கர்த்தரிடம் ஜெபம் பண்ணி முறையிடுவான், நேர்வழியை கேட்பான்!நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப்
பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிறஉன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப்பலனளிப்பார்"
(மத்தேயு 6:5-6)

 இன்றைக்குகிருத்தவர்கள் அனைவரும் கீழ்கண்ட பைபிள் வரிகளுக்கு உகந்தாற்போன்றேஜெபம் பண்ணுகிறார்கள். காட்டுக் கூச்சலுடன் அல்லேலூயா! அல்லேலூயா!அல்லேலூயா! என்று கூத்தடிப்பது, ஜீஸஸ் காப்பாத்து! ஜீஸஸ் காப்பாத்து!ஓ காட்! ஓ காட்! என்று கும்மாங்குத்து ஸ்டைலில் கொக்கறிக்கிறார்கள்இது அஞ்ஞானமில்லையா? சுத்தமான இருதயமுள்ள கிருத்தவர்களேஉங்கள் ஜெபம் இன்றைக்கு அஞ்ஞான வீண் வார்த்தைகளால் அலைபாய்ந்துக்கொள்டிருக்க வில்லையா? இதோ உங்கள் பைபிள் என்னகூறுகிறது

என்பதைகவனமாகபடியுங்கள்!

 "அன்றியும்நீங்கள் ஜெபம்பண்ணும்போது,அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்குமுன்னமே உங்களுக்கு இன்னது தேவைஎன்று அவர் அறிந்திருக்கிறார். (மத்தேயு 6:7-8).

. . ஆன்லைன் ஜெபம், 24 மணிநேர ஜெபம், தொலைபேசி ஜெபம் ஆகியவற்றில் கண்ணியம்இருக்கிறதா? யாரோ ஒருவன் உங்களுக்காகஜெபிக்கிறானாம் அதற்காக
நீங்கள் கூலிகொடுக்கிறீர்கள்.

நீங்கள்செய்த பாவத்திற்கும் உங்கள்குடும்ப கஷ்டங்களுக்கும் யாரோ ஒருவன் ஜெபிப்பானா? இது ஜோசியக் காரனுடைய கதை போன்றல்லவா காணப்படுகிறது.

ஒருவன்ஜோசியக்காரனிடம் சென்று குறிகேட்பானாம் அவன் குறி கூறி சொன்னால்குறைகள்நீங்குமாம். அட முட்டாள் மனிதா அந்த ஜோசியக்காரன் தன் குறைகளைக்காண யாரிடம் போய் குறி கேட்பான்?

தொலைபேசி ஜெபம்!

தொலைபேசியில்ஜெபம் செய்கிறோம் என்கிறார்கள் இவர்கள் இதற்கு கட்டணமாக ஜெப
ஊழியங்களுக்குகாணிக்கை செலுத்துங்கள் என்று கவர்ச்சிகரமாக பேசி ஒரு கணிசமானபணத்தை கரைக்கிறார்கள். இதுமட்டுமா?

குரூப்ஆசீர்வாத திட்டம், குடும்ப ஆசிர்வாத திட்டம், குழந்தைகள் ஆசிர்வாத திட்டம், கணவன் மனைவி ஆசிர்வாத திட்டம், சக்காளத்திஆசிர்வாத திட்டம் என்று கூறிஒவ்வொரு திட்டத்திற்கும் இவ்வளவு தொகை செலுத்தினால் உங்களுக்காகஇரவுபகலாக அயராது ஜெபிக்கிறோம் அடேயப்பா எத்தனை ஏமாற்று திட்டங்கள்.இப்படி திட்டங்களில் சேர்ந்து ஜெபித்துக் கொண்டால்தான் தேவன் கருணைகாட்டுவானா? ஏன் தேவன் என்ன உங்கள் சொந்த குரலை கேட்காத செவிடனா?

உங்கள்குடும்ப கஷ்டத்தை பார்க்காத குருடனா?. . .. . . . . . . . .
இன்றைக்குதொலைபேசி ஜெபம், நாளை கைபேசி ஜெபம் மறுநாள் டி.வி.ஜெபம், வீட்டுல எளவுவிழுந்துவிட்டால் ஒப்பாரி ஜெபம் என்று ஜெபத்தை நாசப்படுத்தியவர்கள்அந்த தேவனிடம் தன்மானத்தை இழந்த மானங்கெட்ட பாதரியார்கள்.

பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம். (நீதிமொழிகள் 12 : 22 )

சிந்தித்துப்பாருங்கள்சகோதர சகோதரிகளே! அட்லீஸ்டு 1 ரூபா கொடுத்தாதான் உங்களுக்காகஇந்த பொய்உதடுகள் கொண்ட மதகுருமார்கள் ஜெபிப்பார்கள் பணம் இல்லைன்னாஉங்க பெயரை தேவன்கிட்ட சொல்லுவாங்களா? அப்படி பணம்கொடுத்தால்தான் தேவன் பிரார்த்தனையை ஏற்பானா?இது தேவன்மீது
இட்டுக்கட்டியதுரோமில்லையா? எனவே ஆன்லைன் ஜெபம், 24 மணிநேர ஜெபம், தொலைபேசிஜெபம் என்று கூறுகிறார்களே இதுவெல்லாம் சுத்த மோசடி.

விவேகியானவன் அறிவோடு நடந்துகொள்ளுகிறான், மூடனோ தன் மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான். (நீதிமொழிகள் 13:16) . . . . .
அன்பான கிறிஸ்தவர்களே. . .

கிறிஸ்தவர்கள் தங்கள் மதத்தினால் பலவிஷயங்களில் ஏமாற்றத்திற்கு ஆளாகிறார்கள். அதில் ஒன்றுதான்ஜெபக்கூட்டம். இந்த ஜெபக்கூட்டத்தை நடத்தும் இரண்டு முக்கிய
புள்ளிகள் -டி.ஜி.எஸ் தினகரன் மற்றும் நாலுமாவடி மோசரஸ். . . பல இலட்சங்கள்செலவு செய்து பொதுமேடைகளை அமைத்து பிறவிக் குருடனை குணப்படுத்துகிறேன், சப்பானியை நடக்க வைக்கிறேன், செவிடனை கேட்கவைக்கிறேன்என்ற பொய்யான வாக்குறுதிகளை ஜெபத்தின் பெயரால் அரங்கேற்றுகிறார்கள்.இப்படிப்பட்ட ஜெபத்தினால் உங்கள் பகுதியிலுள்ள 1 மாற்றுத்திரணாளியாவது குணமடைந்ததுண்டா? நீங்கள் சுத்தமானஇருதயமுள்ளவராக இருந்தால்சிந்தித்துப்பாருங்கள் மக்கள் முன் அரங்கேற்றப்படும் ஜெபங்கள்வீண் பகட்டுமேனிக்கு செய்யப்படும் ஜெபங்கள் இல்லையா?ஒருகிருத்தவன் எவ்வாறு ஜெபத்தைஎவ்வாறு மேற்கொள்ளவேண்டும் என்பதை பைபிள்

தெளிவாகசொல்கிறது. .

"இதோ ஒரு சுத்தமானஇருதயமுள்ளவன் கீழ்கண்டவாறுதான் தன் சேனைகளின்

கர்த்தரிடம் ஜெபம் பண்ணி முறையிடுவான், நேர்வழியை கேட்பான்!நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப்
பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிறஉன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப்பலனளிப்பார்"
(மத்தேயு 6:5-6)

இன்றைக்குகிருத்தவர்கள் அனைவரும் கீழ்கண்ட பைபிள் வரிகளுக்கு உகந்தாற்போன்றேஜெபம் பண்ணுகிறார்கள். காட்டுக் கூச்சலுடன் அல்லேலூயா! அல்லேலூயா!அல்லேலூயா! என்று கூத்தடிப்பது, ஜீஸஸ் காப்பாத்து! ஜீஸஸ் காப்பாத்து!ஓ காட்! ஓ காட்! என்று கும்மாங்குத்து ஸ்டைலில் கொக்கறிக்கிறார்கள்இது அஞ்ஞானமில்லையா? சுத்தமான இருதயமுள்ள கிருத்தவர்களேஉங்கள் ஜெபம் இன்றைக்கு அஞ்ஞான வீண் வார்த்தைகளால் அலைபாய்ந்துக்கொள்டிருக்க வில்லையா? இதோ உங்கள் பைபிள் என்னகூறுகிறது

என்பதைகவனமாகபடியுங்கள்!

"அன்றியும்நீங்கள் ஜெபம்பண்ணும்போது,அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்குமுன்னமே உங்களுக்கு இன்னது தேவைஎன்று அவர் அறிந்திருக்கிறார். (மத்தேயு 6:7-8).

ஆன்லைன் ஜெபம், 24 மணிநேர ஜெபம், தொலைபேசி ஜெபம் ஆகியவற்றில் கண்ணியம்இருக்கிறதா? யாரோ ஒருவன் உங்களுக்காகஜெபிக்கிறானாம் அதற்காக
நீங்கள் கூலிகொடுக்கிறீர்கள்.

நீங்கள்செய்த பாவத்திற்கும் உங்கள்குடும்ப கஷ்டங்களுக்கும் யாரோ ஒருவன் ஜெபிப்பானா? இது ஜோசியக் காரனுடைய கதை போன்றல்லவா காணப்படுகிறது.

ஒருவன்ஜோசியக்காரனிடம் சென்று குறிகேட்பானாம் அவன் குறி கூறி சொன்னால்குறைகள்நீங்குமாம். அட முட்டாள் மனிதா அந்த ஜோசியக்காரன் தன் குறைகளைக்காண யாரிடம் போய் குறி கேட்பான்?

தொலைபேசி ஜெபம்!

தொலைபேசியில்ஜெபம் செய்கிறோம் என்கிறார்கள் இவர்கள் இதற்கு கட்டணமாக ஜெப
ஊழியங்களுக்குகாணிக்கை செலுத்துங்கள் என்று கவர்ச்சிகரமாக பேசி ஒரு கணிசமானபணத்தை கரைக்கிறார்கள். இதுமட்டுமா?

குரூப்ஆசீர்வாத திட்டம், குடும்ப ஆசிர்வாத திட்டம், குழந்தைகள் ஆசிர்வாத திட்டம், கணவன் மனைவி ஆசிர்வாத திட்டம், சக்காளத்திஆசிர்வாத திட்டம் என்று கூறிஒவ்வொரு திட்டத்திற்கும் இவ்வளவு தொகை செலுத்தினால் உங்களுக்காகஇரவுபகலாக அயராது ஜெபிக்கிறோம் அடேயப்பா எத்தனை ஏமாற்று திட்டங்கள்.இப்படி திட்டங்களில் சேர்ந்து ஜெபித்துக் கொண்டால்தான் தேவன் கருணைகாட்டுவானா? ஏன் தேவன் என்ன உங்கள் சொந்த குரலை கேட்காத செவிடனா?

உங்கள்குடும்ப கஷ்டத்தை பார்க்காத குருடனா?. . .. . . . . . . . .
இன்றைக்குதொலைபேசி ஜெபம், நாளை கைபேசி ஜெபம் மறுநாள் டி.வி.ஜெபம், வீட்டுல எளவுவிழுந்துவிட்டால் ஒப்பாரி ஜெபம் என்று ஜெபத்தை நாசப்படுத்தியவர்கள்அந்த தேவனிடம் தன்மானத்தை இழந்த மானங்கெட்ட பாதரியார்கள்.

பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம். (நீதிமொழிகள் 12 : 22 )

சிந்தித்துப்பாருங்கள்சகோதர சகோதரிகளே! அட்லீஸ்டு 1 ரூபா கொடுத்தாதான் உங்களுக்காகஇந்த பொய்உதடுகள் கொண்ட மதகுருமார்கள் ஜெபிப்பார்கள் பணம் இல்லைன்னாஉங்க பெயரை தேவன்கிட்ட சொல்லுவாங்களா? அப்படி பணம்கொடுத்தால்தான் தேவன் பிரார்த்தனையை ஏற்பானா?இது தேவன்மீது
இட்டுக்கட்டியதுரோமில்லையா? எனவே ஆன்லைன் ஜெபம், 24 மணிநேர ஜெபம், தொலைபேசிஜெபம் என்று கூறுகிறார்களே இதுவெல்லாம் சுத்த மோசடி.

விவேகியானவன் அறிவோடு நடந்துகொள்ளுகிறான், மூடனோ தன் மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான். (நீதிமொழிகள் 13:16) . . . . .

நபிகள் நாயகத்தை ஏன் “மகான்” என்கிறோம்? :-அறிஞர் அண்ணா:-




நபிகள் நாயகத்தை ஏன் “மகான்” என்கிறோம்? :-அறிஞர் அண்ணா

/
இஸ்லாத்தின் உயரிய பண்புகள் இதற்குமுன் உலகுக்கு எவ்வளவு அவசரமாகத் தேவைப்பட்டதோ அதை விட, இப்பொழுது தத்துவக் காட்டுக்குள் ஒளிதேடி அலையும் இந்த உலகுக்கு மிக அவசர அவசரமாகத் தேவைப்படுகின்றன.
.
இஸ்லாம் என்பது ஒரு மதமல்ல; ஓர் சிறந்த மார்க்கம். இஸ்லாமிய மார்க்கத்தை உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் கொண்டாடுகிறார்கள்; இஸ்லாத்தின் மார்க்கம் சிறந்ததொரு மார்க்கமாக இருப்பதால் உலகில் உள்ள பெருங்குணவான்கள், இஸ்லாத்தை ஒரு மதமாகக் கொள்ளாமல் ஒரு மார்க்கமாகவே கருதுகின்றனர்.
.
நான் மதத்தைப் பற்றிக் கொண்டுள்ள கருத்துக்கும், இங்கு நடைபெறும் நபிகள் நாயகம் விழாவிற்கும் முரண்பாடு இல்லை. இஸ்லாத்தை ஓர் மார்க்கமாகக் கருதி, நான் இவ்விழாக்களில் கலந்துகொள்கிறேன். இவ்விழாவில் நான் கலந்து கொள்வது இதுதான் முதல் தடவையென்பதுமல்ல; இதுவே கடைசி தடவையுமல்ல.
.
எனக்கு முன் பேசிய நண்பர் சமது அவர்கள், நபி அவர்கள், கடவுளால் அனுப்பப்பட்ட திருத்தூதர்களில் இறுதியாக அனுப்பப்பட்டவர் எனக் குறிப்பிட்டார். எனவே, நபியை “இறுதி நபி’ என்று சொன்னார். நபியை அவ்வாறு குறிப்பிட்ட தற்குக் காரணம்,
/
இறுதி நபி’ என்று கூறியிருக்கா விட்டால், நபிகள் நாயகத்திற்குப் பின்னால் வந்தவர்களும், நானும் கடவுளால் அனுப்பப்பட்ட திருத்தூதன்தான்; நானும் கடவுளால் அனுப்பப்பட்ட நபிகளில் ஒருவன்தான்’ என்று கூறி மக்களை வெவ்வேறு பக்கம் திருப்பி விட்டால் என்ன செய்வது என்றுதான், நபியை “இறுதி நபி’ என்று சொல்லியிருக்கிறார்கள்.
/
இஸ்லாமிய மார்க்கம் ஏன் சிறந்ததெனப் போற்றப்படுகிறதென்றால், மனிதனுக்கு என்னென்ன ஐயப்பாடுகள் ஏற்படுகின்றனவோ அதையெல்லாம் நீக்கக் கூடிய வகையில், அதில் நல்ல கொள்கைகள் இருக்கின்றன. நபிகள் நாயகத்தின் போதனைகளில் ஒன்று ஆண்டவனுக்கு இணைவைத்தல் ஆகாது’ என்பதாகும். இந்தப் போதனையை நான் நெஞ்சம் நெக்குருக நெக்குருக எண்ணிப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.
/
ஏன் நான், இந்தப் போதனையைச் சிறப்பாகக் கூறுகிறேன் என்றால், இப்போதனை மனிதனைச் சிந்திக்கத் தூண்டுகிறது. “ஆண்டவனுக்கு இணைவைத்தல் ஆகாது’  ஏன் இணை வைத்தல் ஆகாது? ஆண்டவன் எப்படியிருக்கக் கூடும்?  என்றெல்லாம் சிந்தனைக்கு வேலை கொடுத்து, ஆண்டவன் இப்படியிருக்கக் கூடும்
என்று சிந்தனை முடிவடைவதில்லை. “கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்’  பார்த்தவர் சொன்னதில்லை; சொன்னவர் பார்த்ததில்லை’ என்று கூறியிருக்கிறார்கள்.
/
கடவுள் தன்மையின் தத்துவமே இதுதான். ஆண்டவனுக்கு இணைவைத்தால், ஆண்டவனுக்கு முன் ஒருவரை வைக்க வேண்டும். அந்த ஒருவர் யாராக இருக்கவேண்டும்? யாருக்குத் தெரியும்? அதனால்தான் ஆண்டவனுக்கு இணைவைத்தல் ஆகாது’ என்னும் போதனையை நபிகள் நாயகம் கூறியிருக்கின்றார். மற்ற மார்க்கத்தில் இணைவைத்துக் கூறிய காரணத்தால்தான், எங்களைப் போன்றவர்களுக்கு ஏராளமான
மாச்சரியங்கள் தோன்றின.ஸ்லாத்தில் எனக்கு மற்றும் ஒன்று பிடித்திருக்கிறது; அது, மனிதனை மனிதனாக ஆக்குவது; மனிதனை முழு மனிதனாக ஆக்குகிறது இஸ்லாமிய மார்க்கம்.
/
கடவுள், தூதரை அனுப்பியதற்குக் காரணம் நானே நேரடியாக “நான் தான் கடவுள்’ என்று கூறி மக்களை நம்ப வைக்க முடியும்  ஆனாலும், தூதுவரை அனுப்பியதற்குக் காரணம், “”நான் அனுப்பியதாகச் சொல்லு; சொன்னால்தான், மக்கள், “கடவுள்தான் அனுப்பினாரா?’ என்று சிந்தித்துப் பார்ப்பார்கள்  எண்ணிப் பார்ப்பார்கள்’ என்று, மனிதன் சிந்திக்க வேண்டியதன் அவசியத்தைக் கருதி, கடவுள், திருத்தூதரை அனுப்பியிருக்கிறார்.
எனவேதான், பழந்தமிழ் மக்கள் “அறிவே ஆண்டவன் ஆண்டவனே அறிவு’ என்று கூறியிருக்கிறார்கள்.
/
இஸ்லாத்தின் இன்னொரு சிறப்பு இஸ்லாத்தில் யார் சேர்ந்தாலும் சாதியை மறைத்து விடுகிறது; முதுகுளத்தூரில் ஒருவர் தலையை ஒருவர் சீவிக்கொள்ளும் தேவர் தாழ்த்தப்பட்ட மக்களானாலும் சரி, மற்றும் யார் சேர்ந்தாலும் சரி, சாதியை நீக்கி விடுகிறது, இஸ்லாத்தின் கொள்கை! அதனால், அது, என்னை மிகவும் ஈர்க்கக் கூடியகொள்கையாக இருக்கிறது.
/
இதையெல்லாம் அறிந்துதான், எதையும் துருவித் துருவி ஆராயும் பண்பு படைத்த அறிஞர் பெர்னாட்ஷா
அவர்கள், “உலகில் கடைசி வரை நிலைத்திருக்கக் கூடிய மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் ஒன்றுதான்’ என்று
எழுதியிருக்கிறார்.”"நபிகள் நாயகத்தை “மகான்’ என்று ஏன் கொண்டாடுகிறார்களென் றால்  1957ஆம் ஆண்டில் சமுதாய விழிப்பு வேண்டும் என்பதை எடுத்துச் சொன்னால் எங்களை ஓட ஓட விரட்டுகிறார்கள் என்றால், 1400 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு தெய்வங்களை வணங்கிய மக்களிடம், நீ வணங்கும் கடவுள் இதுவல்ல; நீ செல்ல வேண்டிய கோயில் இதுவல்ல’ என்று கூறியவரை விட்டு வைத்தார்களே அதுவும், அந்த மக்களிடம் தன் கொள்கையை நெஞ் சுறுதியோடு எடுத்துச் சொன்னாரே அதுவும் தான் அவரை மகான்’ என்று கொண்டாடக் காரணம்.
/
அப்பொழுது நபிகள் கொடுத்த நெஞ்சுரம்தான் இப்பொழுது அவரது மார்க்கத்தைத் தழுவியிருப்பவர்களுக்கு இன்றும் இருக்கிறதென்றால் அது ஆச்சரியமில்லை.
/
தமிழ் மக்கள் இஸ்லாமியக் கொள்கையை ஏன் கடைப்பிடிக்கிறார்களென்றால்  2,000 ஆண்டுகளுக்கு முன் பழந்தமிழ் மக்கள் வைத்திருந்த “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ என்ற குழந்தை காணாமல் போய்விட்டது; அதைத் தேடித் தேடி அலைந்தார்கள் தமிழ் மக்கள்; கிடைக்கவில்லை; பிறகு, இஸ்லாத்தில் அந்தக் குழந்தையைக் கண்டார்கள்; தங்கள் குழந்தை அங்கு வளருவதைக் கண்டார்கள்; குழந்தையை இழந்துவிட்ட தாய், தன் குழந்தையை மீண்டும் கண்டதும் எவ்வளவு ஆவலோடு கொஞ்சுவாளோ, அதைப் போல, இன்றையத் தமிழ் மக்கள், “ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்னும்கொள்கை இஸ்லாத்திலே காணப்படுவதால் அதைப் பின்பற்றினார்கள்.
/
தாய் தன் குழந்தையைக் கொஞ்சுவதைப் பார்த்து, இது என்ன, அந்தக் குழந்தையை அப்படிக் கொஞ்சுகிறாளே’ என்றால், அது, தாய்மை அன்பு அறிந்தவர்களுக்குத்தான் தெரியுமே தவிர, அதை விளக்கிக் கூற முடியாது.
தமிழர்களுக்கு  தமிழ்ப் பண்பாட்டுக்கு ஏற்ற பல நல்ல சட்டங்கள் இஸ்லாத்தில் இருக்கின்றன.
/
மார்க்கம் என்பது மக்களை ஒன்றுபடுத்துவது  மக்களை அறிவுத் தெளிவுபடுத்துவது  மக்களை ஒற்றுமைப்
படுத்துவது  அரிய பந்தங்களை ஏற்படுத்துவது  நல்ல தோழமையை வளர்ப்பது  சிறந்த விழிப்பு உணர்ச்சியை
ஏற்படுத்துவது; அது, “மதம்’ எனச் சொன்னால், அது, மக்களை மதமதப்பில் ஆழ்த்தும்; அதற்குப் போலீஸ்
தேவைப்படும். மார்க்க நெறியில் நின்றால் மக்கள் அன்பு வழியில் ஒன்றுபடுவார்கள்.
/
மதத்தின் பயன் எத்தகையதாக இருக்க வேண்டும் என்பது பற்றி நமக்குள் வேறுபாடு இருக்கலாம். ஆகையினால் யாராவது சிலர் நாஸ்திகர் என்றும், சிலர் ஆஸ்திகர் என்றும் கருதப்பட்டால், அந்தப் பட்டம் ஆஸ்திகர் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள் தங்களுக்கு அவர்களைப் பிடிக்க த காரணத்தால், அவர்களுக்கு இட்ட பெயர்தானே தவிர வேறொன்றுமில்லை.
/
அதைத் தவிர நாஸ்திகம் என்பது இருந்ததுமில்லை; இனி இருக்க வேண்டிய அவசியமுமில்லை. அப்படியிருந்தாலும் இல்லா விட்டாலும் நாங்கள், அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர் என்பதை இப்புனித நாளில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் ஆஸ்திகம் என்பது இயற்கை;
இயற்கைக்கு மாறுபட்டு யாரும் இருக்க மாட்டார்கள்.
/
இஸ்லாமிய மார்க்கத்தின் மாண்புகளை வேறு நாடுகளில் மேலேயிருப்பவர்கள் கீழேயிருப்பவர்களுக்கு
உபதேசம் செய்வார்கள்; ஆனால், நமது நாட்டில் அப்படியிருக்கக் கூடாது. நமது நாட்டைப் பொறுத்தவரையில்
கீழேயிருப்பவர்கள்தான் மேலேயிருப்பவர்களுக்கு உபதேசம் செய்ய வேண்டும்; அப்பொழுதுதான் கடவுள்
தன்மையை எல்லோரும் அறிந்தவர்கள் ஆவார்கள்.
/
ஏன் அவ்வாறு சொல்கிறேனென்றால், புகைவண்டி நிலையத்திலிருந்து நாம் குதிரை வண்டியில் வீட்டுக்கு
வருகிறோம். நாம் முதலில், இறங்க வேண்டிய இடத்தைச் சொல்லி வண்டிக்காரரிடம் வாடகை பேசுகிறோம்.
வண்டிக்காரர் நாம் குறிப்பிட்ட தூரம் வந்ததும், தாம் நினைத்ததை விட தூரம் அதிகமாக இருப்பதாகக் கருதி
வாடகையைக் கொஞ்சம் அதிகம் கேட்கிறார்; அப்பொழுது கூறுகிறார்கள்  ”அப்பா! கடவுளுக்குப் பொது
வாக நட!’ என் கிறார்கள்; ஆனால், உண்மையாகவே அதிக தூரம் வந்து, நாம் வாடகை யைக் குறைத்துக் கொடுத்தால், அப்பொழுது அவர், “ஐயா! கடவுளுக்குப் பொதுவாக
நடவுங்கள்!” என்றால் அதை எத்தனை பேர் பின்பற்றுகிறோம்? உங்களை மனதார எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்  ”கடவுளுக்குப் பொதுவாக’ என்பதை எத்தனை பேர் பின்பற்றுகிறோம்?
/
ஆகையினாலேதான், நமது நாட்டைப் பொறுத்த வரையில் கீழேயிருப்பவர்கள் மேலேயிருப்பவர்களுக்கு
உபதேசம் செய்ய வேண்டும் என்கிறேன்.
/
மார்க்கத்தில் யாருக்கும் மாறுபாடு இருக்க முடியாது; ஆனால், மார்க்கம் நடைமுறையில் வரும் போது அது
மக்களுக்குப் பயன்பட வேண்டும். சூழ்நிலையை மனிதன் உண்டாக்குகின்றான். நல்ல சுற்றுச் சார்பும், சூழ்நிலையும் அமைய வேண்டும். சுற்றுச் சார்பு எப்படி இருக்கின்றதோ,அப்படியே  அதன் வழியே செல்பவர்கள் கொஞ்சம் சுற்றுச் சார்பு அறிந்தவர்கள். ஆனால் சுற்றுச் சார்புக்கு மாறாக நாம் நடந்தால் தமக்குத் தீமையை அளிக்கும் என்பதைத் தெளிவாக அறிந்தும், கெட்டிருக்கின்ற சுற்றுச் சார்புகளை அழித்து, நல்ல சுற்றுச் சார்புகளை ஏற்படுத்துகின்றார்களே அவர்களைத் தாம் “மகான்கள்’ என்று சொல்லுகின்றோம்.
/
ஆனால் அவர்கள் எப்பொழுதும் நமக்குக் கிடைப்பதில்லை; அவர்கள் கிடைக்கும் போது நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அப்படிப்பட்ட மகான்களில் ஒருவர் நபிகள் நாயகம்  அவரைப் போன்ற மகான்கள் நம்மிடையே அடிக்கடி தோன்றுவதில்லை. ஆகையினால், அத்தகையவரின் சிறந்த
கருத்துகளை நாட்டில் பரப்ப நல்ல சுற்றுச் சார்புகள் உருவாக வேண்டும். சுற்றுச் சார்பு நல்ல முறையிலே
அமைய மக்களிடத்திலே நல்ல அறிவுத் தெளிவும், அத்தெளிவு ஏற்பட நல்ல கல்வி முறையும், நல்ல கல்வி முறை ஏற்பட நல்ல ஆட்சியும் நல்ல ஆட்சி முறை ஏற்படுவதற்கு நல்ல ஆட்சியாளர்களும் வேண்டும்; நல்ல ஆட்சியாளர்களை ஏற்படுத்த நல்லவர்களை வாழவிட வேண்டும்.
இவ்வுயரிய மார்க்கம் அக்கிரமத்தை அழிக்கப் பயன்படவேண்டும்; உலகத்தில் நல்ல தோழமையை உண்டாக்கு
வதற்குப் பயன்பட வேண்டும். என்றைக்கு இந்நோக்கங்களுக்கு இம்மார்க்கம் பயன்படுகின்றதோ அன்றைக்குத்தான் மார்க்கத்தின் முழுப் பலன்களையும் அடைய முடியும்.
/
(7.10.1957இல் சென்னை திருவல்லிக்கேணி
கடற்கரையில் நடைபெற்ற நபிகள் நாயகம் விழாவில்
அறிஞர் அண்ணா ஆற்றிய உரையின் சில பகுதிகள்)
வாசிக சேகரம் :  ”சௌந்தர்ய முத்திரை’
தண்ணன் மூஸா

“தாடிக்குத் தடை” “கஅபாவுக்குள் பெண்கள் வரத்தடை”:- சமவுரிமை மாத இதழ்


சமவுரிமை மாத இதழ்

“தாடிக்குத் தடை” “கஅபாவுக்குள் பெண்கள் வரத்தடை” என்ற துடிப்பான செய்திகளை அறிமுகப்படுத்தி எழுத்துலகில் முகம் திறந்து மலர்ந்திருக்கிறது “சமவுரிமை” மாத இதழ்  அல்ஹம்து லில்லாஹ்.
“ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி? என்ற நபி வழியைத் திறந்து வைத்து ஜெயிக்கப் போவது யாரு? என்று இந்திய அரசியலை இலேசாக விரல் விட்டுக் கிண்டி இருப்பது எடுத்து வைக்கும் அடி எத்தனை இதயங்களை இடித்துரைக்கப் போகிறதோ? என்று எதிர்பார்க்கத் தோணுகிறது.
தகுதியான ஆசிரியர் குழுவைக் கொண்டு தடம் போட்டு வைத்திருக்கும் ‘சமவுரிமை’ புடம் போட்டெடுத்துச் செய்திகளை படம் போட்டுக் காட்டும் என நம்பலாம்.
முதல் இதழே முதன்மையான இதழாக விளங்குகிறது. இது சமுதாயத்துக்குத் தேவையான சமவுரிமைகளைப் பெற்றுத் தந்து வாசகர்களின் இதயங்களிலே நடுபீடத்தில் குடியேற நெஞ்சாற வாழ்த்துகிறேன்.
வானவில் போல அழகாகத் தோன்றி மறையாமல் நல்லவைகளை நிலவுபோலக் குளுமைப் படுத்தி – அல்லவைகளைச் சூரியனைப் போல சுட்டெரித்து ஊடக வானில் என்றென்றும் புகழுடன் நிலைத்திருக்க இருகரம் ஏந்திப் பிரார்த்திக்கிறேன். இதயம் குளிந்து வாழ்த்துகிறேன்.
ஆக்கம் :முதுவைக் கவிஞர்
மவ்லவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ

நன்றி முதுகுளத்தூர்.காம்

Posted by  on August 1, 2009 in நூல் அறிமுகங்கள்
://mudukulathur.com/?p=90

Tuesday, March 19, 2013

தன்னம்பிக்கைக்கு பரிசு - இரண்டரைக் கோடி கார்

தன்னம்பிக்கைக்கு பரிசு - இரண்டரைக் கோடி கார்

டேனி என்னும் அந்தச் சிறுவன் கார் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த விலையுயர்ந்த காரையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
அதைப் பார்த்த அந்த காரின் ஓனர் இளைய யுவன் டேனியிடம் கேட்டான். "ஒரு ரவுண்ட் போலாம்... வர்றியா?"டேனி ஆர்வமாய் தலையசைத்தான்.
அந்த யுவன் அவனைக் காரில் ஏற்றிக் கொண்டு ஒரு ரவுண்ட் போனான். "பாத்தியா... டிஜிட்டல் ஸ்பீடா மீட்டர், பக்கா ஆடியோ ஸிஸ்டம், செவன் கியர், பவர் ஸ்டியரிங், பூராவும் ஆட்டோமேட்டிக்... ஆஸ்த்திரேலியவுல செய்தது. என் அண்ணன் என்னோட பர்த்டேக்கு பரிசா கொடுத்தான். இரண்டரைக் கோடி விலை.........."
அவன் பேசிக் கொண்டே போக டேனி ஒன்றும் பேசாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.அந்த யுவன் சிரித்தான். "இப்ப நீ என்ன நினைக்கிறேன்னு தெரியும்......."
டேனி நிமிர்ந்து பார்த்தான்.
அந்த யுவன் தொடர்ந்தான். "என் அண்ணன் மாதிரி ஒரு அண்ணன் இருந்தா நல்லா இருக்கும்னுதான் நினைக்கிறே..?"
டேனி சிரித்தவாறே பதில் அளித்தான்."இல்ல... நான் உன் அண்ணன் மாதிரி இருந்தா நல்லாயிருக்கும்னு நினைச்சேன்...." என்றான்.

குழந்தைகளுக்கான டயாபர் உபயோகிப்பதினால் கெடுதிகள் அதிகம்! குழந்தை மருத்துவர்கள் அறிவிப்பு!!

 குழந்தைகளுக்கான டயாபர் உபயோகிப்பதினால் கெடுதிகள் அதிகம்!குழந்தை மருத்துவர்கள் அறிவிப்பு!!
 

குழந்தை பிறந்த உடனே சில நாட்களிலேயே அவர்களுக்கு டயாபர்களை மாட்டி விடுகின்றனர். அடிக்கடி சிறுநீர், மலம் கழிப்பதால் குழந்தையின் பெட், துணி போன்றவைகளை துவைக்கசிரமப்படும்பெற்றோர்கள் டயாபர்களை மாட்டிவிட்டு பின்னர் தூக்கி எறிந்து விடுகின்றனர். இந்த டயாபர்களால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு, சுற்றுச் சூழலும் மாசடைகிறது. எனவே குழந்தைகளுக்குடயாபர் உபயோகிக்கும் பெற்றோர்கள் அதனால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி தெரிந்து கொண்டு உபயோகிக்க வேண்டும் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்புவரை குழந்தைகளுக்கு துணியினாலான, 'டயாபர்'களே பயன்படுத்தப்பட்டன. பின்னர், பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும், 'டயாபர்'கள் வரத் துவங்கின. இதன்பிரபலத்தால், துணி, 'டயாபர்'களின் பயன்பாடு, படிப்படியாக குறைந்து விட்டது.

சரும நோய்கள்:
'டிஸ்போசபிள்' டயாபர்களால், குழந்தைகளுக்கு ரேஷஸ் எனப்படும் புண்கள், பின்பகுதியில் உராய்வு உட்பட சில பிரச்சினைகள் தோன்றுகின்றன. இதனால், குழந்தைகள் மிகவும் அவதிக்கு ஆளாகின்றனர்.

தூக்கி எறியப்படும் டயாபர்களில் உள்ள டயாக்ஸின் என்னும் ரசாயனம் ப்ளீச் செய்யும் போது உபயோகப்படுத்தப்படுகிறது. இது புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனத்துடன் தொடர்புடையது என கண்டறியப்பட்டதை அடுத்து அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் இதனை உபயோகிக்க தடை விதித்துள்ளன.

ஹார்மோன் பிரச்சினை:
டிஸ்போசபில் டயாபர்களில் டிரிபுயூடில்-டின் ( TBT) கூட்டுப் பொருட்கள் உள்ளன. இதனை உபயோகிப்பதால் மனிதர்களுக்கு ஹார்மோன் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. உபயோகித்த பின்னர் தூக்கிஎறியப்படுவதால் மண்ணில் மட்கிப்போகாமல் அதை உண்ணும் விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால், துணி 'டயாபர்'களால், பல்வேறு நன்மைகள் உள்ளன. துணி டயாபர்கள் பயன்படுத்தினால்,குழந்தைகளுக்கு ரேஷஸ் போன்றவை ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு:
டிஸ்போசபில் டயாபர்கள் சோடியம் பாலிக்ரைசலேட் என்னும் கரிம பலபடி பொருட்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை உபயோகப்படுத்திவிட்டு தூக்கி எறிவதனால் மண்ணில் மட்டுவதற்குநூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகின்றன.

பிளாஸ்டிக் வடிவத்திலான இந்த ரசாயனம், சிதைவடைய 500 ஆண்டுகாலம் தேவை. துணி டயாபர்கள், சிதைவுற 100 ஆண்டுகளே ஆகின்றன. இதே போன்று, சுத்தம் செய்து, மீண்டும் பயன்படுத்தப்படும்டயாபர்களும் உள்ளன. இந்த டயாபர்கள் ஈரமானதும், அவற்றின் உள்ளே இருப்பவற்றை தூக்கி எறிந்து விட்டு, துவைத்த பின், மீண்டும் பயன்படுத்தலாம். முதல் குழந்தைக்கு பயன்படுத்திய, இந்த வகைடயாபர்களை, மீண்டும் இரண்டாவது குழந்தைக்கு பயன்படுத்துவதால், உலகம் வெப்பமயமாதல் 40 சதவீதம் குறையும் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. 'ரீயூசபிள் டயாபர்'கள் சிதைவடைய, ஆறு மாதகாலமே ஆகின்றன.

வெட்டப்படும் மரங்கள்:
உலகில் தயாரிக்கப்படும் டயாபர்களில் 70 சதவீதம், காகிதங்களில் இருந்தே தயாரிக்கப்படுகிறது. இதனால், உலகளவில், ஆண்டுக்கு 100 கோடி மரங்கள் வெட்டப்படுகின்றன. ஒரு மரத்தை உருவாக்க,உரங்கள், பூச்சி மருந்துகள், தண்ணீ¬ர் என ஏராளமானவை தேவைப்படுகிறது. டயாபர்கள் தயாரிப்பதற்காக, அதிகளவில் மரங்கள் வெட்டப்படுவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே கவலையைஏற்படுத்தியுள்ளது.

செலவு குறைவு:
'டிஸ்போசபிள்' டயாபர்களுக்கு மக்கள் ஏராளமான அளவில் பணம் செலவழிக்கின்றனர். ஆனால், 'ரீயூசபிள் டயாபர்'கள், மீண்டும் பயன்படுத்தப்படுவதால், அதற்கான செலவு குறைகிறது. எனவே, 'டிஸ்போசபிள்' டயாபர்களுடன் ஒப்பிடும் போது, 'ரீயூசபிள்' டயாபர்களால் அதிகளவு பணம் சேமிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு பேஷனாக அணிவிக்க விரும்பினால், அதற்காகவே, துணி டயாபர்களில்,பல்வேறு வண்ணங்கள் மற்றும் பேஷன்களில் வருகின்றன. எனவே அதிக அளவு பணம் செலவு வைக்காத சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பில்லாத டயாபர்களை வாங்கி உபயோகிக்கவேண்டும் என்பது குழந்தைநல மருத்துவர்களின் அறிவுரையாகும்.

Monday, March 18, 2013

"காஷ்மீர்" விக்கிலீக்ஸ் வழியே கசியும் உண்மைகள்

"காஷ்மீர்" விக்கிலீக்ஸ் வழியே கசியும் உண்மைகள்
காஷ்மீரில் தொடரும் மனித உரிமை மீறல்கள் விக்கிலீக்ஸ் வழியே கசியும் உண்மைகள்
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பீற்றிக் கொள்ளும் இந்தியா, காஷ்மீரில் அப்பட்டமாகமனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ள விவகாரம் விக்கிலீக்ஸ் மூலம் கசியத் தொடங்கியுள்ளது.
செஞ்சிலுவைச் சங்கத்தினர் 2002-ஆம் ஆண்டிலிருந்து 2004வரையிலான காலத்தில் காஷ்மீரில் 177 முறை கைதிகள் முகாமுக்குச்சென்று 1491 கைதிகளைச் சந்தித்து, தனிப்பட்ட முறையில் 1296 பேரிடம் பேட்டியெடுத்துள்ளனர்.
இவற்றில் 852 பேர் தாங்கள் கடுமையாக வதைக்கப்படுவதாகவும் கீழ்த்தரமாக நடத்தப்படுவதாகவும், மொத்தத்தில் 171 பேர் தங்கள் மீது ஒன்று முதல் ஆறு வடிவங்களிலான சித்திரவதைகள் ஏவப்பட்டதாகவும்தெரிவித்துள்ளனர். மின் அதிர்ச்சி கொடுப்பது, உத்தரத்தில் தலைகீழாகத் தொங்கவிட்டு வதைப்பது, கைதிகளின் கால்களின் மீது பலகையை வைத்து அதன் மீது நாற்காலியைப் போட்டு, அதில் சிறை அதிகாரிகள் அமர்ந்துகொண்டுகால்களை நசுக்குவது, கால்களை 180 டிகிரிக்குத் திருப்பி ஒடிப்பது, தண்ணீர் சித்திரவதை, பாலியல் வன்முறை – எனப் பல்வேறுகொடிய சித்திரவதைகளை ஏவியதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 2005-ஆம் ஆண்டில் அமெரிக்க அதிகாரிகளிடம் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினர் இக்கொடுமைகள் பற்றிஆதாரங்களுடன் ஆவணமாகச் சமர்ப்பித்துள்ளனர். இது, அமெரிக்க அரசுக்கு கேபிள் செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது. இது தவிர, 2007-ஆம் ஆண்டில் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்குமாறு கைதிகளை வதைத்து இந்திய இராணுவம் மனித உரிமை மீறல் குற்றங்களை இழைத்துள்ளதாகவும், இந்திய இராணுவம் போஸ்னியாவில் நடந்ததைப் போல இனப்படுகொலையில்ஈடுபடுகிறது என்றும் மற்றொரு கேபிள் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ளவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளோ, பாகிஸ்தானால் ஏவிவிடப்பட்டவர்களோ அல்ல என்றும், அவர்கள் காஷ்மீரின் சாமானிய குடிமக்கள்தான் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உண்மைகள் அம்பலமானதும், தனது அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நடந்தவை என்று இவற்றைத் தட்டிக் கழிக்கிறார், முதல்வர் ஓமர் அப்துல்லா. காஷ்மீரின் போலீசு தலைமை இயக்குனரான எஸ்.எம்.சோஹய், இவை ஆதாரமற்ற அவதூறுகள் என்கிறார்.
அருந்ததி ராய், சையத் அலி ஷா ஆகியோர் மீது தேசத்துரோக வழக்குபோட்டு எச்சரிக்கும் இந்திய ஆட்சியாளர்களோ, விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தும் ஆவணங்களைப் பொய் என்று இட்லரின் கோயபல்ஸ் பாணியில் குற்றம் சாட்டி, தேசியவெறியைக் கிளறிவிட்டுத் தப்பித்துக —  

Thanks to Abdullah...
 
காஷ்மீரில் தொடரும் மனித உரிமை மீறல்கள் விக்கிலீக்ஸ் வழியே கசியும் உண்மைகள்
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பீற்றிக் கொள்ளும் இந்தியா, காஷ்மீரில் அப்பட்டமாகமனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ள விவகாரம் விக்கிலீக்ஸ் மூலம் கசியத் தொடங்கியுள்ளது.
செஞ்சிலுவைச் சங்கத்தினர் 2002-ஆம் ஆண்டிலிருந்து 2004வரையிலான காலத்தில் காஷ்மீரில் 177 முறை கைதிகள் முகாமுக்குச்சென்று 1491 கைதிகளைச் சந்தித்து, தனிப்பட்ட முறையில் 1296 பேரிடம் பேட்டியெடுத்துள்ளனர்.
இவற்றில் 852 பேர் தாங்கள் கடுமையாக வதைக்கப்படுவதாகவும் கீழ்த்தரமாக நடத்தப்படுவதாகவும், மொத்தத்தில் 171 பேர் தங்கள் மீது ஒன்று முதல் ஆறு வடிவங்களிலான சித்திரவதைகள் ஏவப்பட்டதாகவும்தெரிவித்துள்ளனர். மின் அதிர்ச்சி கொடுப்பது, உத்தரத்தில் தலைகீழாகத் தொங்கவிட்டு வதைப்பது, கைதிகளின் கால்களின் மீது பலகையை வைத்து அதன் மீது நாற்காலியைப் போட்டு, அதில் சிறை அதிகாரிகள் அமர்ந்துகொண்டுகால்களை நசுக்குவது, கால்களை 180 டிகிரிக்குத் திருப்பி ஒடிப்பது, தண்ணீர் சித்திரவதை, பாலியல் வன்முறை – எனப் பல்வேறுகொடிய சித்திரவதைகளை ஏவியதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 2005-ஆம் ஆண்டில் அமெரிக்க அதிகாரிகளிடம் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினர் இக்கொடுமைகள் பற்றிஆதாரங்களுடன் ஆவணமாகச் சமர்ப்பித்துள்ளனர். இது, அமெரிக்க அரசுக்கு கேபிள் செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது. இது தவிர, 2007-ஆம் ஆண்டில் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்குமாறு கைதிகளை வதைத்து இந்திய இராணுவம் மனித உரிமை மீறல் குற்றங்களை இழைத்துள்ளதாகவும், இந்திய இராணுவம் போஸ்னியாவில் நடந்ததைப் போல இனப்படுகொலையில்ஈடுபடுகிறது என்றும் மற்றொரு கேபிள் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ளவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளோ, பாகிஸ்தானால் ஏவிவிடப்பட்டவர்களோ அல்ல என்றும், அவர்கள் காஷ்மீரின் சாமானிய குடிமக்கள்தான் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உண்மைகள் அம்பலமானதும், தனது அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நடந்தவை என்று இவற்றைத் தட்டிக் கழிக்கிறார், முதல்வர் ஓமர் அப்துல்லா. காஷ்மீரின் போலீசு தலைமை இயக்குனரான எஸ்.எம்.சோஹய், இவை ஆதாரமற்ற அவதூறுகள் என்கிறார்.
அருந்ததி ராய், சையத் அலி ஷா ஆகியோர் மீது தேசத்துரோக வழக்குபோட்டு எச்சரிக்கும் இந்திய ஆட்சியாளர்களோ, விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தும் ஆவணங்களைப் பொய் என்று இட்லரின் கோயபல்ஸ் பாணியில் குற்றம் சாட்டி, தேசியவெறியைக் கிளறிவிட்டுத் தப்பித்துக —

Thanks to Abdullah...

Tuesday, March 12, 2013

குழந்தைகளின் பயத்தை போக்கி தைரியமாக வளர்ப்பது எப்படி?

குழந்தைகளின் பயத்தை போக்கி தைரியமாக வளர்ப்பது எப்படி?


அவர்களின் பயத்தை போக்கும் வகையில் அன்பாக பணிவாக அவருக்கு புரியும் வகையில் எடுத்து கூறி பயத்தை போக்க வேண்டும். 

குழந்தைகள் சாப்பிட மறுத்தாலோ அல்லது அடம் பிடிக்கும் சமயத்திலோ, அவர்களுக்கு 'பூச்சாண்டி' காட்ட சொல்லும் பயமானது. மனதில் அப்படியே பதிந்து, எப்பொழுதும் அதே பயத்தில் இருப்பார்கள். சில சமயம் அந்த பயம் அவர்களுக்கு நிரந்தரமாகிவிடும். எனவே அவற்றை நிரந்தரமாக விடாமல், அதிலிருந்து அவர்களை காப்பது பெற்றோரின் கடமை. இப்போது குழந்தைகளின் பயத்தை எப்படியெல்லாம் போக்கலாம் என்று பார்ப்போமா!!!

1. சிறு வயதில், அதாவது 1-2 வயது வரை குழந்தைகளை சாப்பிட வைக்க, பூச்சாண்டி காட்டி சாப்பிட வைப்பது, அடம் பிடிக்கும் போது அவர்களுக்கு பேய் வருகிறது என்று சொல்லும் கட்டுகதைகள் போன்றவற்றை அவர்கள் வளர வளர நாளடைவில் மாற்றி கொள்வது நல்லது. அதாவது அவர்கள் அடம் பிடிக்கும் பொழுது, ஏதாவது பாட்டு அல்லது கதை சொல்லி அல்லது அவருக்கு பிடித்தமான ஒன்றை கொடுக்கிறேன் என்று சொல்லி, அவர்களை திசை திருப்பலாம்.

ஏனெனில் குழந்தைகள் உலகத்தை பெற்றோர்கள் மூலமாக காண்கின்றனர். அவர்களின் வாழ்வானது புதிய படைப்பாக இந்த உலகத்தில் ஆரம்பமாகியுள்ளது. அதனால் அவர்களை பயமுறுத்தினால், பின் அவர்கள் பார்ப்பது, கேட்பது போன்றவைகளை வைத்து ஒரு உருவத்தை அல்லது கற்பனை செய்து கொள்வர். பின் அவர்கள் இருட்டான இடத்தைப் பார்த்தால், அங்கு பேய் இருப்பது போல கற்பனை செய்து கொண்டு, அவர்களின் மனமானது பெரிதும் பாதிப்பிற்குள்ளாகிவிடும். எனவே அப்போது அவர்களுக்கு உண்மையை சொல்லி புரிய வைக்க வேண்டும்.

2. குழந்தைகள் அதிகமாக பயந்தால், அவர்களின் பயத்திற்கான காரணத்தை கண்டறிய, குழந்தைகளிடம் மனம் விட்டு பேச வேண்டும். அவர்கள் எதனால் பயப்படுகிறார்கள் என்பதை அவர்களையே விளக்க சொல்லி, பின்னர் அவர்களுக்கு புரியும் வகையில் அந்த பயத்தை போக்கும் வகையில் எடுத்து சொல்ல வேண்டும். மேலும் இவை அனைத்து ஒரு மாயை என்பதையும் புரிய வைக்க வேண்டும்.

3. குழந்தைகளுக்கு சரியானதை பொறுமையாக சொல்லி கொடுக்கவும். அதைவிட்டு கோபமாக சொன்னால், எதுவும் நடக்காது. அன்போடு அமைதியாக சொன்னால், குழந்தைகள் எதையும் பெற்றோரிடம் பயமின்றி, மனதில் இருப்பதை பகிர்ந்து கொள்வார்கள்.

4. குழந்தை ஒரு குறிப்பிட்ட உறவினர், பராமரிப்பாளர்களிடம் பயம் கொண்டு, அதனை பெற்றோரிடம் சொல்லும் போது, பெற்றோர்கள் அதை நிராகரிப்பது நல்லது அல்ல. அந்த நிலையில் குழந்தையை அவர்களிடம் இருக்குமாறு கட்டாயப்படுத்த கூடாது. அவர்களால் குழந்தைக்கு என்ன பிரச்சினை, அவர்களைக் கண்டு ஏன் பயப்படுகிறார்கள் என்று குழந்தைகளிடம் கேட்டு, பின் அதனை சரி செய்ய முயற்சி செய்ய வேண்டும். அதை விட்டு குழந்தையை கண்டிக்கக் கூடாது.

5. குழந்தைகளை அவர்களின் பயம் குறித்து கிண்டல் செய்யக்கூடாது. ஏனெனில் குழந்தையை கேலி செய்தல் மூலம் அந்த பயமானது குறையாது. அதற்குப் பதிலாக, அது அவர்களது கவலையை அதிகரிக்கும். அதே நேரத்தில் அவர்களது தன்னம்பிக்கையையும் குறைக்கும். ஏனெனில் பெற்றோரே குழந்தையை கிண்டல் செய்வதன் மூலம், அவர்களது மனம் தளர்ந்து, பின் அவர்களுக்கு எப்போதும் எதிர்மறையான உணர்வுகள் மட்டுமே உருவாகும்.

6. குழந்தைகள் பயந்து செய்யும் எந்த ஒரு செயலையும் செய்யுமாறு கட்டாயப்படுத்த வேண்டாம். அப்போது அவர்களின் பயத்தைப் புரிந்து கொண்டு, அவர்களின் அச்சத்தை நீக்க அவர்களுடன் அன்புடனும் ஆதரவுடனும் பேசி, பயத்தைப் போக்க முயற்சிக்க வேண்டும்.

7. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தைரியத்தை கற்றுக் கொடுக்க, அவர்களின் முன் எப்போதும் தைரியாமாக எந்த ஒரு செயலையும் துணிச்சலோடு எதிர்கொண்டு, செய்து முடிப்பது போல் நடந்து கொள்ள வேண்டும். இதனால் அவர்கள் உங்கள் செய்கைகளைப் பார்த்து, அவர்களுக்கும் மனதில் தைரியம் ஏற்படும். மேலும் எதை செய்யலாம் எதை செய்யகூடாது என்பதையும் அவர்களுக்கு எடுத்து சொல்லி புரிய வைக்கவும்.

8. குழந்தைகள் வீட்டில் உள்ள அறைக்குச் செல்ல அஞ்சுகின்றனர் என்றால், அந்த பகுதிக்கு அவர்களுடன் சென்று, அனைத்து கதவுகளை திறந்து, ஒளியைப் பயன்படுத்தி படுக்கைக்குக் கீழ் எதுவும் இல்லை பார் என்று காட்டவும். மேலும் ஏதாவது சப்தம் அல்லது நிழல் கண்டு பயந்தால், அப்போது அவர்களிடம் அந்த சப்தம் மற்றும் நிழல் எதனால் வந்தது என்று விளக்கமாக சொல்லிப் புரிய வைக்க வேண்டும். இவ்வாறெல்லாம் செய்தால், குழந்தைகளை பயத்திலிருந்து விடுவிக்க முடியும்.

Monday, March 11, 2013

பெண்களுக்குகான கடமையான குளிப்பு குளிப்பது எப்படி?

பெண்களுக்குகான கடமையான குளிப்பு குளிப்பது எப்படி?



*பெண்களுக்குகான கடமையான குளிப்பு
1)மாதவிடாய், 2)பிரசவ
(நிஃபாஸ்),3)உடலுறவு(கணவனுடன் இல்லறத்தில் சேருதல்),4)தூக்கத்தில் உச்சத்தை அடைதல்

 *ஆண்களுக்குகான கடமையான குளிப்பு 
1.விந்து வெளிப்படல்(
தூக்கத்தில் உச்சத்தை அடைதல்),2.உடலுறவு (மனைவியுடன் இல்லறத்தில் சேருதல்)

*ஆண் பெண் இருவருக்கும் பொதுவான குளிப்பு கடமை
1)இஸ்லாத்தை ஏற்கும் போதும் 2)முர்சையற்ற நிலை, பைத்தியம் ஆகியவற்றில் இருந்து மீளும் போதும்

மேற்கூறிய காரணங்களினால் குளிப்புக் கடமையாவது நாமனைவரும் அறிந்ததே.
எவ்வாறு அக்குளிப்புக்களை நிறைவேற்ற வேண்டும் என்ற முறையையும் நபிகளார் நமக்குச் சொல்லித் தந்திருக்கிறார்கள். 
அதன்படி ஏற்கனவே சென்ற கட்டுரையில் இல் ஆண்களுக்கு குளிப்புக் கடமையானவர்கள் குளிப்பதற்கான முறை பற்றி பார்த்தோம்.

இப்போது பெண்களுக்கு மாதவிடாய், பிரசவத்தீட்டு, உடலுறவு போன்ற காரணங்களால் குளிப்புக் கடமையான பெண்கள் குளிப்பதற்கான முறை பற்றி பார்போம்  

சுன்னத்தான குளிப்பு:
நபி(ஸல்) அவர்கள் பெருந்துடக்கின் காரணத்தாலும், வெள்ளிக் கிழமை தினத்தன்றும், இரத்தம் குத்தி எடுத்துக் கொண்டதற்காகவும், மைய்யித்தைக் குளிப்பாட்டிய காரணத்தாலும் ஆக, நான்கு காரியங்களுக்காகக் குளித்து வந்தார்கள்' அறிவிப்பாளர் : ஆயிஷா(ரலி) (நூல் - அபூ தாவூது). இது இப்னு குஸைமாவில் பதிவு செய்யப்பட்டு 'ஸஹீஹ்' எனும் தரத்தில் உள்ளது. 

இச்சை நீர் (மதி)வெளிப்பட்டால் குளிப்பு கடமையா? 

"இச்சை நீர் வெளிப்பட்டால் உளூச் செய்ய வேண்டும். விந்து வெளிப்பட்டால் குளிக்க வேண்டும்" என நபி صلى الله عليه وسلم அவர்க்ள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அலீ رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், தாரமீ

1,ஸ்கலிதம் ஏற்பட்டால்:-
"ஒரு பெண்ணுக்கு ஸ்கலிதம் ஏற்பட்டால் அவள் குளிப்பது அவசியமா?" என்று உம்மு கலைம் (ரலி), நபி صلى الله عليه وسلم அவர்களிடம் கேட்டபோது "ஆம்" என்று பதிலளித்தார்கள்" அறிவிப்பவர்: உம்முஸலமா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்

2,குளிப்புக் கடமையானவர் செயக்கூடாதவைகள்:-
'குளிப்புக் கடமையானவர்களும், மாதவிடாய் ஏற்பட்ட பெண்களும், பள்ளிக்கு தொழவருவதை நான் அனுமதிக்க மாட்டேன்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், அறிவிப்பாளர்; ஆயிஷா(ரலி);அவர்கள் (நூல் - அபூ தாவூது).

3,மாதவிடாய் ஏற்பட்டால்:-
பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவர்கள் தொழவோ, நோன்பு நோற்கவோ, உடலுறவு கொள்ளவோ கூடாது. மாதவிடாய் நின்ற பிறகு குளித்து தூய்மையானதும் தொழலாம் நோன்பு நோற்கலாம்.
"மாதவிடாய் ஏற்படும்போது தொழுகையை விட்டுவிடு. மாதவிடாய் நின்ற பின்பு குளித்து விட்டுத் தொழுதுகொள்!" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
மாதவிடாய் காலங்களில் விடுபட்ட தொழுகைகளைத் திருப்பித் தொழ வேண்டியதில்லை
"எங்களுக்கு மாதவிடாய் ஏற்படும் போது தொழுகை, நோன்பு ஆகியவைகளை விட்டு விடுமாறும், மாதவிடாய் நின்ற பிறகு விடுபட்ட நோன்புகளை நோற்குமாறும் விடுபட்ட தொழுகைகளைத் தொழ வேண்டியதில்லை என்றும் நபி صلى الله عليه وسلم அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, 

4,தொடர் இரத்தப் போக்கு ஏற்பட்டால்:-
பெண்களில் சிலர் மாதவிடாயின் போது மட்டுமின்றி எப்போதும் இரத்தப் போக்கு உள்ளவர்களாக இருப்பர். இது ஒரு வகை நோய். இதன் காரணமாக தொழுகையையும் இதர வணக்கங்களையும் விட்டுவிடக் கூடாது!. அவர்களின் வழமையான மாதவிடாய் நாட்கள் முடிந்து குளித்துக் கொள்ள வேண்டும். பிறகு துணியால் கட்டிக்கொண்டு ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச்செய்து தொழ வேண்டும்.
ஃபாத்திமா பிந்த் அபீஹுபைஷ் (ரலி) என்ற பெண்மனி நபி صلى الله عليه وسلم அவர்களிடம் வந்து "நான் இரத்தப் போக்குடையவளாக இருக்கிறேன், தூய்மையாவதே இல்லை. எனவே தொழுகையை நான் விட்டு விடலாமா?" எனக் கேட்டார். அதற்கு நபி صلى الله عليه وسلمஅவர்கள் "உனது மாதவிடாய் நாட்களில் மட்டும் தொழுகையை விட்டுவிட்டு, குளித்து தொழுவாயாக! இரத்தம் தொடர்ந்து கொண்டிருந்தாலும் பரவாயில்லை!" என பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ
நபி صلى الله عليه وسلم அவர்கள் காலத்தில் ஒரு பெண் இரத்தப் போக்கு நோயால் பீடிக்கப்பட்டிருந்தார். அவர்களுக்காக நபி صلى الله عليه وسلمஅவர்களிடம் நான் சட்ட விளக்கம் கேட்டபோது, இந்த நோய் வருவதற்கு முன் அந்த பெண்ணுக்கு வழக்கமாக மாதவிடாய் வந்து கொண்டிருந்த நாட்களைக் கழித்து அந்த நாட்கள் முடிந்ததும் குளித்துவிட்டுத் துணியால் இறுகக் கட்டிக்கொண்டு அவள் தொழவேண்டும்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உம்முஸலமா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல் நஸயீ
அபூதாவூதின் அறிவிப்பில் ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச் செய்துகொள்! என்று காணப்படுகின்றது.

5,பெண்களுக்கான பிரசவ (நிஃபாஸ்) இரத்த போக்கு ஏற்பட்டால்:-
பெண்கள் குழந்தை பேறுக்கு பின் தொடர்ந்து இரத்தம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் இதனை நிஃபாஸ் என்றழைப்பர். இதுமாதியான நேரங்களில் தொழ கூடாது, அது நின்றபின் முறையாக குளித்து விட்டுத்தான் தொழவேண்டும். இந்த நிலையில் விடுபட்ட தொழுகைகளை 'களா' செய்ய வேண்டியதில்லை. 
நபி(ஸல்) அவர்களது காலத்தில் பெண்கள் (நிஃபாஸ் என்னும்) பிரசவ கால உதிரப்போக்குக்குப் பின்னர் நாற்பது நாட்கள் தனித்திருப்பார்கள்' அறிவிப்பாளர் : உம்மு ஸலமா (ரலி) நூல்கள் - அபூ தாவூது, அஹ்மத், திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா. 
அபூ தாவுதின் மற்றோர் அறிவிப்பில், நபி (ஸல்) அவர்கள் நிஃபாஸுடைய காலத்தில் விடுபட்ட தொழுகைகளை 'களாச்' செய்யுமாறு பெண்களுக்குக் கட்டளையிடவில்லை என்பதும் இடம் பெறுகிறது. இது ஹாம்மில் 'ஸஹீஹ்' எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நோய் பற்றிய மனக்குழப்பம்:-
இதுவல்லாது சில பெண்களுக்கு வெள்ளைபடுதல் இருக்கும். வெட்ட சூடு என்பார்கள், சில ஆண்களுக்கும் இருக்கும். சிறுநீர் கழிக்கும் முன்போ அல்லது மலம் கழிக்கும் நேரத்திலும் வெளியாகும் இதுவும் ஒரு வகை நோயே, இதற்கு தகுந்த மருத்துவர்கள் இடம் சென்று ஆலோசனை பெற்று குணமடையலாம். மேலே கொடுக்கப்பட்டுள்ள நபி (ஸல்) அவர்களின் குறிப்பே இதற்கும் போதுமானதாகும்.

 எப்படி குளிப்பது:-
 

7,நபி(ஸல்) அவர்கள் கால்களைவிட்டுவிட்டு தொழுகைக்கு உளூச் செய்வது போன்று உளூச் செய்வார்கள். மேலும் தங்கள் மர்மஸ்தலத்தையும் உடலில் பட்ட அசுத்தங்களையும் கழுவுவார்கள். பின்னர் தங்களின் மீது தண்ணீரை ஊற்றுவார்கள். பின்னர் சிறிது நகர்ந்து நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவுவார்கள். இதுதான் நபி(ஸல்) அவர்களின் கடமையான குளிப்பாக இருந்தது" என மைமூனா(ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி பாகம் 1, அத்தியாயம் 5, எண் 249 )


எவ்வளவு தண்ணீர் 
நபியவர்கள் ஒரு ஸாவு தண்ணீரில் பெருந்தொடக்கிற்காகக் குளித்துவிடுவார்கள். ஒரு முத்து தண்ணீரில் வுழூச் செய்து விடுவார்கள்” என ஸபீனா ரலியல்லாஹ் அன்ஹ் அவர்கள் அறிவிக்கிறார்கள் ஆதாரம் : முஸ்லிம் 543
எனவே கடமையான குளிப்பின் போது ஆணாயினும் பெண்ணாயினும் முழு உடலும் நனையும் அளவில் தலையிலும் உடலிலும் தண்ணீர் ஊற்றிக்கொள்வதே அவர்கள் சுத்தமாகிவிடப் போதுமானதாகும் என்பது வெள்ளிடைமழை


நிர்வாணமாக குளிக்கலாமா?
உன் மனைவி அடிமை ஆகியோரைத் தவிர மற்றவர்களிடம் உன் அந்தரங்கப்பகுதியை பாதுகாத்துக் கொள் என்று  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். சிலர் சிலருடன் கலந்து இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. (அப்போது சில பகுதிகள் தெரிய வாய்ப்புள்ளதே) என்று நான் கேட்டேன். அதை மற்ற எவரும் பார்க்க முடியாமல் வைத்துக்கொள்ள சக்திபெற்றிருந்தால் அதை யாரும் பார்க்காமல் இருக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். எங்களில் ஒருவர் தனித்திருக்கும் போது? என்று நான் கேட்டேன். மனிதர்களை விட அல்லாஹ்விடம் வெட்க உணர்வுடன் நடந்து கொள்ள அல்லாஹ் தகுதிவாய்ந்தவன் என்று பதிலளித்தார்கள்.அறிவிப்பவர் : முஆவியா பின் ஹைதா (ரலி) நூல் : அபூதாவுத் (3501)

பெண்கள் முடியை அவிழ்த்து கொள்ளவேண்டுமா?'
முஸ்லிம்உம்மு ஸலமா(ரலி) அறிவிக்கிறார்கள் : 'அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் (தலைமுடி அதிகம் உள்ளவளாக இருப்பதால்) என் தலை முடியினைக் கட்டிக் கொள்கிறேன். குளிப்புக் கடமை ஏற்பட்டு நான் குளிக்கும் முன்; என்னுடைய தலைமுடியை அவிழ்த்து கொள்ளவேண்டுமா?' என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு அவர்கள், '(வேண்டியது) இல்லை. மூன்று தரம் உன் தலையில் தண்ணீரை ஊற்றிகொண்டால் அதுவே போதுமானது' என்று கூறினார்கள். (நூல் : முஸ்லிம்.

கணவனும் மனைவியும் ஒரே நேரத்தில் ஒரே பாத்திரத்தில் உள்ள தண்ணிரில் குளிக்கலாமா?
அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள் : 'நானும் நபி(ஸல்) அவர்களும் ஒரே தண்ணீர் பாத்திரத்தில் (ஒரே நேரத்தில்) கடமையான குளிப்பை குளித்துக் கொண்டிருந்தோம். அப்போது எங்கள் இருவரின் கைகளும் மாறிமாறி (அப்பாத்திரத்தில்) போய் வந்து கொண்டிருந்தன' (நூல்கள் : புஹாரீ, முஸ்லிம்).
இப்னு ஹிப்பானில் 'எங்களது கைகள் ஒன்றோடொன்று சந்தித்துக் கொண்டுமிருந்தது' என்ற குறிப்பு கூடுதலாக அதில் பதியப் பெற்றுள்ளது.


சுன்னத்தான குளியல் முறை 
மேலே சொல்லப்பட்ட முறை ஒருவர் ஜனாபத்திலிருந்து சுத்தமாவதற்கான நிபந்தனையாகும். அதனையே நபியவர்கள் குளிப்பு பற்றி வினபுவர்களுக்குப் பதிலாகவும் கூறினார்கள். ஆனாலும் நபியவர்கள் குளிக்கும் போது அதிகமான நேரங்களில் அவரது குளிப்பு பற்றி இதைவிடப் பல கூடுதலான அம்சங்கள் பல ஆதாரப் பூர்வமான செய்திகளில் வந்துள்ளன. பின்வருமாறு அவைகளை வரிசைப்படுத்தலாம்

1.வலது கையால் இடது கையில் தண்ணீர் ஊற்றி தமது இருகைகளையும் கழுவி பின்னர் மர்மஸ்தானத்தைக் கழுவுதல்.

2.இடது கையை சுவரில் அல்லது நிலத்தில் தேய்த்துச் சுத்தப்படுத்தல் மறுபடி அக்கையைக் கழுவுதல்

3.தொழுகைக்காக செய்யும் வுழூவைப் போன்று வுழூச் செய்தல்.இதன் போது உருப்புக்களை ஒரு முறையோ மூன்று முறையோ கழுவலாம்.

4.சில சமயங்களில் மேற்சொன்ன வுழூவின்போது காலை மாத்திரம் கழுவாமல் குளிப்பின் பின் கழுவுதல்.

5. பின் தண்ணீரின் மூலம் தலையைக் கோதிக் கழுவுதல்.

6.அதன் பின்னர் தலையின் மீது ஆகக் குறைந்தது 3 முறை தண்ணீரை ஊற்றிக் குளித்தல். சில அறிவிப்புக்களில் தலையின் வலது பக்கத்திலிருந்து ஆரம்பித்தார்கள் என்றும் வந்துள்ளது.

7.குளிப்பின் பின் நபியவர்கள் எப்பொழுதும் வுழூச் செய்யவில்லை.

மேற் சொன்ன அனைத்து முறையும் புகாரி மற்றும் முஸ்லிமில் சுத்தம் பற்றிய பாடத்தில் குளிப்பு என்ற தலைப்பில் பதிவு செய்யப்பட்டவைகள். எனவே குளிப்பை இந்த வடிவிலே நபியவர்கள் அதிகமாகச் செய்துள்ளதால் இதையே நாம் கூடுதலாகச் செய்ய சிரத்தை எடுக்க வேண்டும்.