Monday, March 11, 2013

பெண்களுக்குகான கடமையான குளிப்பு குளிப்பது எப்படி?

பெண்களுக்குகான கடமையான குளிப்பு குளிப்பது எப்படி?



*பெண்களுக்குகான கடமையான குளிப்பு
1)மாதவிடாய், 2)பிரசவ
(நிஃபாஸ்),3)உடலுறவு(கணவனுடன் இல்லறத்தில் சேருதல்),4)தூக்கத்தில் உச்சத்தை அடைதல்

 *ஆண்களுக்குகான கடமையான குளிப்பு 
1.விந்து வெளிப்படல்(
தூக்கத்தில் உச்சத்தை அடைதல்),2.உடலுறவு (மனைவியுடன் இல்லறத்தில் சேருதல்)

*ஆண் பெண் இருவருக்கும் பொதுவான குளிப்பு கடமை
1)இஸ்லாத்தை ஏற்கும் போதும் 2)முர்சையற்ற நிலை, பைத்தியம் ஆகியவற்றில் இருந்து மீளும் போதும்

மேற்கூறிய காரணங்களினால் குளிப்புக் கடமையாவது நாமனைவரும் அறிந்ததே.
எவ்வாறு அக்குளிப்புக்களை நிறைவேற்ற வேண்டும் என்ற முறையையும் நபிகளார் நமக்குச் சொல்லித் தந்திருக்கிறார்கள். 
அதன்படி ஏற்கனவே சென்ற கட்டுரையில் இல் ஆண்களுக்கு குளிப்புக் கடமையானவர்கள் குளிப்பதற்கான முறை பற்றி பார்த்தோம்.

இப்போது பெண்களுக்கு மாதவிடாய், பிரசவத்தீட்டு, உடலுறவு போன்ற காரணங்களால் குளிப்புக் கடமையான பெண்கள் குளிப்பதற்கான முறை பற்றி பார்போம்  

சுன்னத்தான குளிப்பு:
நபி(ஸல்) அவர்கள் பெருந்துடக்கின் காரணத்தாலும், வெள்ளிக் கிழமை தினத்தன்றும், இரத்தம் குத்தி எடுத்துக் கொண்டதற்காகவும், மைய்யித்தைக் குளிப்பாட்டிய காரணத்தாலும் ஆக, நான்கு காரியங்களுக்காகக் குளித்து வந்தார்கள்' அறிவிப்பாளர் : ஆயிஷா(ரலி) (நூல் - அபூ தாவூது). இது இப்னு குஸைமாவில் பதிவு செய்யப்பட்டு 'ஸஹீஹ்' எனும் தரத்தில் உள்ளது. 

இச்சை நீர் (மதி)வெளிப்பட்டால் குளிப்பு கடமையா? 

"இச்சை நீர் வெளிப்பட்டால் உளூச் செய்ய வேண்டும். விந்து வெளிப்பட்டால் குளிக்க வேண்டும்" என நபி صلى الله عليه وسلم அவர்க்ள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அலீ رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், தாரமீ

1,ஸ்கலிதம் ஏற்பட்டால்:-
"ஒரு பெண்ணுக்கு ஸ்கலிதம் ஏற்பட்டால் அவள் குளிப்பது அவசியமா?" என்று உம்மு கலைம் (ரலி), நபி صلى الله عليه وسلم அவர்களிடம் கேட்டபோது "ஆம்" என்று பதிலளித்தார்கள்" அறிவிப்பவர்: உம்முஸலமா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்

2,குளிப்புக் கடமையானவர் செயக்கூடாதவைகள்:-
'குளிப்புக் கடமையானவர்களும், மாதவிடாய் ஏற்பட்ட பெண்களும், பள்ளிக்கு தொழவருவதை நான் அனுமதிக்க மாட்டேன்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், அறிவிப்பாளர்; ஆயிஷா(ரலி);அவர்கள் (நூல் - அபூ தாவூது).

3,மாதவிடாய் ஏற்பட்டால்:-
பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவர்கள் தொழவோ, நோன்பு நோற்கவோ, உடலுறவு கொள்ளவோ கூடாது. மாதவிடாய் நின்ற பிறகு குளித்து தூய்மையானதும் தொழலாம் நோன்பு நோற்கலாம்.
"மாதவிடாய் ஏற்படும்போது தொழுகையை விட்டுவிடு. மாதவிடாய் நின்ற பின்பு குளித்து விட்டுத் தொழுதுகொள்!" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
மாதவிடாய் காலங்களில் விடுபட்ட தொழுகைகளைத் திருப்பித் தொழ வேண்டியதில்லை
"எங்களுக்கு மாதவிடாய் ஏற்படும் போது தொழுகை, நோன்பு ஆகியவைகளை விட்டு விடுமாறும், மாதவிடாய் நின்ற பிறகு விடுபட்ட நோன்புகளை நோற்குமாறும் விடுபட்ட தொழுகைகளைத் தொழ வேண்டியதில்லை என்றும் நபி صلى الله عليه وسلم அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, 

4,தொடர் இரத்தப் போக்கு ஏற்பட்டால்:-
பெண்களில் சிலர் மாதவிடாயின் போது மட்டுமின்றி எப்போதும் இரத்தப் போக்கு உள்ளவர்களாக இருப்பர். இது ஒரு வகை நோய். இதன் காரணமாக தொழுகையையும் இதர வணக்கங்களையும் விட்டுவிடக் கூடாது!. அவர்களின் வழமையான மாதவிடாய் நாட்கள் முடிந்து குளித்துக் கொள்ள வேண்டும். பிறகு துணியால் கட்டிக்கொண்டு ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச்செய்து தொழ வேண்டும்.
ஃபாத்திமா பிந்த் அபீஹுபைஷ் (ரலி) என்ற பெண்மனி நபி صلى الله عليه وسلم அவர்களிடம் வந்து "நான் இரத்தப் போக்குடையவளாக இருக்கிறேன், தூய்மையாவதே இல்லை. எனவே தொழுகையை நான் விட்டு விடலாமா?" எனக் கேட்டார். அதற்கு நபி صلى الله عليه وسلمஅவர்கள் "உனது மாதவிடாய் நாட்களில் மட்டும் தொழுகையை விட்டுவிட்டு, குளித்து தொழுவாயாக! இரத்தம் தொடர்ந்து கொண்டிருந்தாலும் பரவாயில்லை!" என பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ
நபி صلى الله عليه وسلم அவர்கள் காலத்தில் ஒரு பெண் இரத்தப் போக்கு நோயால் பீடிக்கப்பட்டிருந்தார். அவர்களுக்காக நபி صلى الله عليه وسلمஅவர்களிடம் நான் சட்ட விளக்கம் கேட்டபோது, இந்த நோய் வருவதற்கு முன் அந்த பெண்ணுக்கு வழக்கமாக மாதவிடாய் வந்து கொண்டிருந்த நாட்களைக் கழித்து அந்த நாட்கள் முடிந்ததும் குளித்துவிட்டுத் துணியால் இறுகக் கட்டிக்கொண்டு அவள் தொழவேண்டும்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உம்முஸலமா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல் நஸயீ
அபூதாவூதின் அறிவிப்பில் ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச் செய்துகொள்! என்று காணப்படுகின்றது.

5,பெண்களுக்கான பிரசவ (நிஃபாஸ்) இரத்த போக்கு ஏற்பட்டால்:-
பெண்கள் குழந்தை பேறுக்கு பின் தொடர்ந்து இரத்தம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் இதனை நிஃபாஸ் என்றழைப்பர். இதுமாதியான நேரங்களில் தொழ கூடாது, அது நின்றபின் முறையாக குளித்து விட்டுத்தான் தொழவேண்டும். இந்த நிலையில் விடுபட்ட தொழுகைகளை 'களா' செய்ய வேண்டியதில்லை. 
நபி(ஸல்) அவர்களது காலத்தில் பெண்கள் (நிஃபாஸ் என்னும்) பிரசவ கால உதிரப்போக்குக்குப் பின்னர் நாற்பது நாட்கள் தனித்திருப்பார்கள்' அறிவிப்பாளர் : உம்மு ஸலமா (ரலி) நூல்கள் - அபூ தாவூது, அஹ்மத், திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா. 
அபூ தாவுதின் மற்றோர் அறிவிப்பில், நபி (ஸல்) அவர்கள் நிஃபாஸுடைய காலத்தில் விடுபட்ட தொழுகைகளை 'களாச்' செய்யுமாறு பெண்களுக்குக் கட்டளையிடவில்லை என்பதும் இடம் பெறுகிறது. இது ஹாம்மில் 'ஸஹீஹ்' எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நோய் பற்றிய மனக்குழப்பம்:-
இதுவல்லாது சில பெண்களுக்கு வெள்ளைபடுதல் இருக்கும். வெட்ட சூடு என்பார்கள், சில ஆண்களுக்கும் இருக்கும். சிறுநீர் கழிக்கும் முன்போ அல்லது மலம் கழிக்கும் நேரத்திலும் வெளியாகும் இதுவும் ஒரு வகை நோயே, இதற்கு தகுந்த மருத்துவர்கள் இடம் சென்று ஆலோசனை பெற்று குணமடையலாம். மேலே கொடுக்கப்பட்டுள்ள நபி (ஸல்) அவர்களின் குறிப்பே இதற்கும் போதுமானதாகும்.

 எப்படி குளிப்பது:-
 

7,நபி(ஸல்) அவர்கள் கால்களைவிட்டுவிட்டு தொழுகைக்கு உளூச் செய்வது போன்று உளூச் செய்வார்கள். மேலும் தங்கள் மர்மஸ்தலத்தையும் உடலில் பட்ட அசுத்தங்களையும் கழுவுவார்கள். பின்னர் தங்களின் மீது தண்ணீரை ஊற்றுவார்கள். பின்னர் சிறிது நகர்ந்து நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவுவார்கள். இதுதான் நபி(ஸல்) அவர்களின் கடமையான குளிப்பாக இருந்தது" என மைமூனா(ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி பாகம் 1, அத்தியாயம் 5, எண் 249 )


எவ்வளவு தண்ணீர் 
நபியவர்கள் ஒரு ஸாவு தண்ணீரில் பெருந்தொடக்கிற்காகக் குளித்துவிடுவார்கள். ஒரு முத்து தண்ணீரில் வுழூச் செய்து விடுவார்கள்” என ஸபீனா ரலியல்லாஹ் அன்ஹ் அவர்கள் அறிவிக்கிறார்கள் ஆதாரம் : முஸ்லிம் 543
எனவே கடமையான குளிப்பின் போது ஆணாயினும் பெண்ணாயினும் முழு உடலும் நனையும் அளவில் தலையிலும் உடலிலும் தண்ணீர் ஊற்றிக்கொள்வதே அவர்கள் சுத்தமாகிவிடப் போதுமானதாகும் என்பது வெள்ளிடைமழை


நிர்வாணமாக குளிக்கலாமா?
உன் மனைவி அடிமை ஆகியோரைத் தவிர மற்றவர்களிடம் உன் அந்தரங்கப்பகுதியை பாதுகாத்துக் கொள் என்று  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். சிலர் சிலருடன் கலந்து இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. (அப்போது சில பகுதிகள் தெரிய வாய்ப்புள்ளதே) என்று நான் கேட்டேன். அதை மற்ற எவரும் பார்க்க முடியாமல் வைத்துக்கொள்ள சக்திபெற்றிருந்தால் அதை யாரும் பார்க்காமல் இருக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். எங்களில் ஒருவர் தனித்திருக்கும் போது? என்று நான் கேட்டேன். மனிதர்களை விட அல்லாஹ்விடம் வெட்க உணர்வுடன் நடந்து கொள்ள அல்லாஹ் தகுதிவாய்ந்தவன் என்று பதிலளித்தார்கள்.அறிவிப்பவர் : முஆவியா பின் ஹைதா (ரலி) நூல் : அபூதாவுத் (3501)

பெண்கள் முடியை அவிழ்த்து கொள்ளவேண்டுமா?'
முஸ்லிம்உம்மு ஸலமா(ரலி) அறிவிக்கிறார்கள் : 'அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் (தலைமுடி அதிகம் உள்ளவளாக இருப்பதால்) என் தலை முடியினைக் கட்டிக் கொள்கிறேன். குளிப்புக் கடமை ஏற்பட்டு நான் குளிக்கும் முன்; என்னுடைய தலைமுடியை அவிழ்த்து கொள்ளவேண்டுமா?' என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு அவர்கள், '(வேண்டியது) இல்லை. மூன்று தரம் உன் தலையில் தண்ணீரை ஊற்றிகொண்டால் அதுவே போதுமானது' என்று கூறினார்கள். (நூல் : முஸ்லிம்.

கணவனும் மனைவியும் ஒரே நேரத்தில் ஒரே பாத்திரத்தில் உள்ள தண்ணிரில் குளிக்கலாமா?
அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள் : 'நானும் நபி(ஸல்) அவர்களும் ஒரே தண்ணீர் பாத்திரத்தில் (ஒரே நேரத்தில்) கடமையான குளிப்பை குளித்துக் கொண்டிருந்தோம். அப்போது எங்கள் இருவரின் கைகளும் மாறிமாறி (அப்பாத்திரத்தில்) போய் வந்து கொண்டிருந்தன' (நூல்கள் : புஹாரீ, முஸ்லிம்).
இப்னு ஹிப்பானில் 'எங்களது கைகள் ஒன்றோடொன்று சந்தித்துக் கொண்டுமிருந்தது' என்ற குறிப்பு கூடுதலாக அதில் பதியப் பெற்றுள்ளது.


சுன்னத்தான குளியல் முறை 
மேலே சொல்லப்பட்ட முறை ஒருவர் ஜனாபத்திலிருந்து சுத்தமாவதற்கான நிபந்தனையாகும். அதனையே நபியவர்கள் குளிப்பு பற்றி வினபுவர்களுக்குப் பதிலாகவும் கூறினார்கள். ஆனாலும் நபியவர்கள் குளிக்கும் போது அதிகமான நேரங்களில் அவரது குளிப்பு பற்றி இதைவிடப் பல கூடுதலான அம்சங்கள் பல ஆதாரப் பூர்வமான செய்திகளில் வந்துள்ளன. பின்வருமாறு அவைகளை வரிசைப்படுத்தலாம்

1.வலது கையால் இடது கையில் தண்ணீர் ஊற்றி தமது இருகைகளையும் கழுவி பின்னர் மர்மஸ்தானத்தைக் கழுவுதல்.

2.இடது கையை சுவரில் அல்லது நிலத்தில் தேய்த்துச் சுத்தப்படுத்தல் மறுபடி அக்கையைக் கழுவுதல்

3.தொழுகைக்காக செய்யும் வுழூவைப் போன்று வுழூச் செய்தல்.இதன் போது உருப்புக்களை ஒரு முறையோ மூன்று முறையோ கழுவலாம்.

4.சில சமயங்களில் மேற்சொன்ன வுழூவின்போது காலை மாத்திரம் கழுவாமல் குளிப்பின் பின் கழுவுதல்.

5. பின் தண்ணீரின் மூலம் தலையைக் கோதிக் கழுவுதல்.

6.அதன் பின்னர் தலையின் மீது ஆகக் குறைந்தது 3 முறை தண்ணீரை ஊற்றிக் குளித்தல். சில அறிவிப்புக்களில் தலையின் வலது பக்கத்திலிருந்து ஆரம்பித்தார்கள் என்றும் வந்துள்ளது.

7.குளிப்பின் பின் நபியவர்கள் எப்பொழுதும் வுழூச் செய்யவில்லை.

மேற் சொன்ன அனைத்து முறையும் புகாரி மற்றும் முஸ்லிமில் சுத்தம் பற்றிய பாடத்தில் குளிப்பு என்ற தலைப்பில் பதிவு செய்யப்பட்டவைகள். எனவே குளிப்பை இந்த வடிவிலே நபியவர்கள் அதிகமாகச் செய்துள்ளதால் இதையே நாம் கூடுதலாகச் செய்ய சிரத்தை எடுக்க வேண்டும். 

No comments:

Post a Comment