Thursday, February 28, 2013


British star football player 'Philip SENDEROS' Change of Islam





British star football player

'Philip SENDEROS' Change of Islam


From: chiristiny

Name: Philip SYLVAIN SENDEROS
Occupation: Call BALLER
COUNTRY: cuviccarlantu
Age: 28

In this life and the hereafter, "that is sure to win the'' Al quraan

Wednesday, February 27, 2013

மாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்


மாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..!!




* ஹோர்மோன் பிரச்னை உள்ள பெண்களுக்கு உடம்பு பருத்து மூன்று, ஆறு மாதங்களுக்குக் கூட மாதவிலக்கு வராமல் இருக்கும். இதற்கு முள்ளு முருங்கை இலையையும் கல்யாண முருங்கை இலையையும் சமஅளவு எடுத்து அதை மிக்சியில் போட்டு லேசாக தண்ணீர் தெளித்து அரைத்துக் கொள்ளவும். இதைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 தேக்கரண்டி சாப்பிட வேண்டும். சாறு எடுத்த மூன்று மணி நேரத்திற்குள் சாப்பிட்டால்தான் சிகிச்சை பலனளிக்கும்.

* முருங்கைக் கீரையுடன் சிறிது கருப்பு எள் சேர்த்து கஷாயமாக்கி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு பிரச்சனை சரியாகும்.

* உலர்ந்த புதினா இலையோடு ஒரு ஸ்பூன் கருப்பு எள் சேர்த்து கஷாயமாகச் செய்து குடித்து வந்தால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.

* கொத்தமல்லி சாறில் கருஞ்சீரகத்தை ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து பின் அதை வெளியில் எடுத்து நன்கு உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.


* வாதஉடம்புக் காரர்கள் அதிக வேலை, உடற்பயிற்சி அல்லது உடல் எடையைக் குறைக்க நினைத்தால் சில சமயங்களில் மாதவிலக்கு தள்ளிப்போக வாய்ப்புண்டு. பித்த உடம்பைக் கொண்ட மகளிருக்கு மாதவிலக்கு இடைவெளி குறையும். மாதவிடாய் காலத்தில் உதிரப்போக்கு அதிகமாக இருக்கும். 5 நாட்களுக்கு மேல்கூட உதிரப்போக்கு இருக்கும். வயிற்றுப்போக்கு, முகத்தில் பருக்கள் தோன்றும். உடம்பு தடித்து காணப்படும். ஒருபக்க தலைவலி தோன்றலாம். கப உடம்பு மகளிருக்கு இயல்பான உதிரப்போக்கு இருக்கும். ஆனால் இவர்களுக்கு பல உபாதைகள் அதாவது மார்பகங்களில் வீக்கம், முதுகு, இடுப்பு, கை, கால்களில் வலி போன்றவை ஏற்படும். அஜீரணக் கோளாறு ஏற்படும். இத்தகைய உபாதைகளுக்கு உணவு மூலமும், ஓய்வின் மூலமும் நடைமுறையிலேயே தீர்வு காணலாம். கடைபிடிக்க வேண்டியவை · முதலில் மனதில் தோன்றும் வெறுப்பை மாற்றிக்கொள்ள வேண்டும். · மாதவிடாய் தோன்றும் நாட்களை கவனத்தில் கொண்டு அந்த காலங்களில் வெளியூர் பயணம், மற்ற கடின வேலைகளை தவிர்க்க வேண்டும். · மாதவிடாய் காலத்தில் மென்மையான எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை உண்ண வேண்டும். · எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல் நல்லது. · அதிக நார்ச்சத்துள்ள பழங்களை சாப்பிட வேண்டும்.

* பழங்கள் மலச்சிக்கலைப் போக்குவதுடன் உடலுக்கு வலுவைத் தரும். · அதிக உதிரப்போக்குள்ள காலத்தில் தலைக்கு தண்ணீர் ஊற்றி குளிப்பதை தவிர்க்க வேண்டும். பருத்தியினால் ஆன உடைகளை அணியவேண்டும். · ஓய்வு மிகவும் அவசியம். உதிரப்போக்கு காரணமாக சிலருக்கு களைப்பு ஏற்படும். ஓய்வும், உறக்கமும் நல்லது. தலைவலி, எரிச்சல், இருந்தால் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளோ, மாத்திரைகளையோ உபயோகிக்கக் கூடாது. · டீ, காபி, குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். குளிரூட்டப்பட்ட உணவுகளை சாப்பிடக் கூடாது. · காய்ச்சி ஆறவைத்த நீரை அருந்துவது நல்லது. ·
* வாசனை திரவியங்களை உபயோகப் படுத்த வேண்டாம். மாதவிலக்கின் போது வயிற்று வலியிருந்தால் பத்து கிராம் சீரகத்துடன் 50 மி.லி. தண்ணீர் சேர்த்து நன்கு காய்ச்சி அது பாதியாக வந்தவுடன் வடிகட்டி அதனுடன் சிறிது பெருங்காயத்தூள் சேர்த்து காலை, மாலை அருந்தி வந்தால் வயிற்று வலி நீங்கும். இந்தக் காலங்களில் உணவில் அதிக அளவு பெருங்காயம் சேர்த்துக் கொண்டால் அது நரம்புகள் மற்றும் மூளையின் செயல்பாட்டை புத்துணர்வு பெறச் செய்யும். மாதவிலக்கின் போது ஓழுங்கற்ற உதிரப்போக்கு இருந்தால் இரண்டு ஸ்பூன் கருப்பு எள்ளைக் கழுவி எடுத்துக்கொண்டு அதில் ஒரு டீஸ்பூன் பனைவெல்லம் கலந்து தண்ணீரில் காய்ச்சி வடிகட்டி அந்த தண்ணீரை ஆறவைத்து குடித்து வந்தால் உதிரப்போக்கு சீராக இருக்கும். மாதவிலக்கின்போது கடுமையான உபாதைகள் தோன்றினால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது

Tuesday, February 26, 2013


.
ஹைதராபாத்தில் குண்டு வைத்தவர்கள் : ராஜு, விஜய்?  Feb26, ஹைதராபாதின் "தில்சுக் நகர்" குண்டுவெடிப்பில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில், தலைமறைவாகியுள்ள ராஜு மற்றும் விஜய் ஆகியோர் குறித்து விசாரிப்பதில் "அக்கறை" காட்டாத போலீஸ், முஸ்லிம்களை சிக்கவைப்பதில் தான் "முனைப்பு" காட்டிவருகிறது. குண்டுவெடித்த தில்சுக் நகரின் ஹோட்டல் ஒன்றில் "தவறான விலாசத்தை கொடுத்து 10 நாட்களாக தங்கியிருந்த ராஜு, விஜய் உள்ளிட்ட 5 நபர்கள், குண்டுவெடித்தபின்பு, ஹோட்டலுக்கு திரும்பவில்லை. தனியாருக்கு சொந்தமான, அந்த ஹோட்டலில் 2 அறைகள் எடுத்து தங்கியிருந்த இவர்கள், எப்போது வெளியே சென்றாலும் சேர்ந்தே செல்லும் வழக்கமுடையவர்களாக இருந்துள்ளனர். ஹோட்டலில் பொருத்தப்பட்டுள்ள "கண்காணிப்பு கேமரா" பதிவுகளின்படி, இவர்கள் எப்போதும் ஒன்றாகவே வெளியே செல்வதும் - ஒன்றாகவே திரும்புவதும்,தெரியவந்தது. குண்டுவெடிப்பு நடந்த, அந்த நேரத்தில் மட்டும் இருவர் ரூமிலேயே இருந்துள்ளனர். குண்டுவெடித்த சற்று நேரத்துக்குள்ளாகவே, அவர்களும் ஹோட்டலைவிட்டு வெளியேறியுள்ளனர். ஹோட்டலில், இவர்கள் கொடுத்திருந்த "அட்ரெஸ்" போலியானது, என தெரியவந்துள்ளது. மேலும், ஹோட்டல் அறைகளை பதிவு செய்வதற்கு, இவர்கள் கொடுத்திருந்த "அடையாள அட்டை"யும் போலியானது. போலி அடையாள அட்டையில், ஆந்திர மாநிலம் "நல்கோடா மாவட்ட" விலாசம் வழங்கப்பட்டுள்ளது. "சுப்ஹானி" என்ற முஸ்லிம் பெயரில் அந்த அடையாள அட்டை பெறப்பட்டுள்ளது. இத்தனை தெளிவான துப்பு கிடைத்திருந்தும், இவர்களை பற்றிய விசாரணையில் இறங்காமல், முஸ்லிம்களையே குறிவைத்து, கைது படலத்தை அரங்கேற்றிவரும் காவல்துறை, இதுவரை 80க்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்களை சட்டவிரோத காவலில் வைத்து விசாரித்து வருகிறது. 42,436 தொலைபேசி உரையாடல்களை "ஆய்வு" செய்து வருவதாக கூறும் உளவுத்துறை, அதில் 5 அழைப்புகள் "காஷ்மீரிலிருந்து" வந்ததாக கூறுகின்றனர். அதிலும், 3 "சிம்"கார்டுகள் ஹைதராபாத்தில் பெறப்பட்டதாக "பீதி"யை கிளப்புகின்றனர். ஆக, இந்த குண்டுவெடிப்பை  அப்சல் குருவோடு இணைத்து, வழக்கை முடிவுக்கு கொண்டுவர "திட்டம்" போட்டுவிட்டனர்.

ஹைதராபாத்தில் குண்டு வைத்தவர்கள் : ராஜு, விஜய்? Feb26, ஹைதராபாதின் "தில்சுக் நகர்" குண்டுவெடிப்பில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில், தலைமறைவாகியுள்ள ராஜு மற்றும் விஜய் ஆகியோர் குறித்து விசாரிப்பதில் "அக்கறை" காட்டாத போலீஸ், முஸ்லிம்களை சிக்கவைப்பதில் தான் "முனைப்பு" காட்டிவருகிறது. குண்டுவெடித்த தில்சுக் நகரின் ஹோட்டல் ஒன்றில் "தவறான விலாசத்தை கொடுத்து 10 நாட்களாக தங்கியிருந்த ராஜு, விஜய் உள்ளிட்ட 5 நபர்கள், குண்டுவெடித்தபின்பு, ஹோட்டலுக்கு திரும்பவில்லை. தனியாருக்கு சொந்தமான, அந்த ஹோட்டலில் 2 அறைகள் எடுத்து தங்கியிருந்த இவர்கள், எப்போது வெளியே சென்றாலும் சேர்ந்தே செல்லும் வழக்கமுடையவர்களாக இருந்துள்ளனர். ஹோட்டலில் பொருத்தப்பட்டுள்ள "கண்காணிப்பு கேமரா" பதிவுகளின்படி, இவர்கள் எப்போதும் ஒன்றாகவே வெளியே செல்வதும் - ஒன்றாகவே திரும்புவதும்,தெரியவந்தது. குண்டுவெடிப்பு நடந்த, அந்த நேரத்தில் மட்டும் இருவர் ரூமிலேயே இருந்துள்ளனர். குண்டுவெடித்த சற்று நேரத்துக்குள்ளாகவே, அவர்களும் ஹோட்டலைவிட்டு வெளியேறியுள்ளனர். ஹோட்டலில், இவர்கள் கொடுத்திருந்த "அட்ரெஸ்" போலியானது, என தெரியவந்துள்ளது. மேலும், ஹோட்டல் அறைகளை பதிவு செய்வதற்கு, இவர்கள் கொடுத்திருந்த "அடையாள அட்டை"யும் போலியானது. போலி அடையாள அட்டையில், ஆந்திர மாநிலம் "நல்கோடா மாவட்ட" விலாசம் வழங்கப்பட்டுள்ளது. "சுப்ஹானி" என்ற முஸ்லிம் பெயரில் அந்த அடையாள அட்டை பெறப்பட்டுள்ளது. இத்தனை தெளிவான துப்பு கிடைத்திருந்தும், இவர்களை பற்றிய விசாரணையில் இறங்காமல், முஸ்லிம்களையே குறிவைத்து, கைது படலத்தை அரங்கேற்றிவரும் காவல்துறை, இதுவரை 80க்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்களை சட்டவிரோத காவலில் வைத்து விசாரித்து வருகிறது. 42,436 தொலைபேசி உரையாடல்களை "ஆய்வு" செய்து வருவதாக கூறும் உளவுத்துறை, அதில் 5 அழைப்புகள் "காஷ்மீரிலிருந்து" வந்ததாக கூறுகின்றனர். அதிலும், 3 "சிம்"கார்டுகள் ஹைதராபாத்தில் பெறப்பட்டதாக "பீதி"யை கிளப்புகின்றனர். ஆக, இந்த குண்டுவெடிப்பை அப்சல் குருவோடு இணைத்து, வழக்கை முடிவுக்கு கொண்டுவர "திட்டம்" போட்டுவிட்டனர்.

பெண்ணுக்கு சுதந்திரம் பெண்ணுக்கு சுதந்திரம் கண்ணுக்கு கண்ணான முஸ்லிம் பெண்ணுக்கு சுதந்திர





(பெண்ணுக்கு சுதந்திரம் பெண்ணுக்கு சுதந்திரம் 

கண்ணுக்கு கண்ணான முஸ்லிம் பெண்ணுக்கு சுதந்திரம்)







உலகத்தின் பெண்சுதந்திரம்

உலகமும், இந்தியாவும்
கண்ட பெண் சுதந்திரம்
என்ன சுதந்திரமாம்? கண்ணும் , மனதும் கூசும்
பள்ளியிலே ஆரம்பிக்கிறது
பெண் குழந்தைகளின்
சுதந்திரம், அருவருப்பான
பாடலுக்கு ஒரு ஆட்டம்
கேட்டால் பள்ளி இறுதி
கொண்டாட்டம்!
மாநிலத்தில் அழகி போட்டி!
உலகளவில் ஒரு அழகி போட்டி!
பெண்ணின் அங்கங்களை அளந்து
ஒரு பூனை நடை!
ஒரு எலி நடை!
பெண்களின் உடலை மதிப்பிட்டு
மதிப்பெண் அளித்து தேர்ந்தெடுக்க
வக்கிரம் கொண்ட ஆண்கள்
புடை சூழ – தாராளமாக
வந்த பெண்ணிற்கு
உலக அழகி (அருவருப்பு)பட்டம்!

உலக சந்தையின் பணம் (பிணம்) திண்ணும்
கழுகுகளுக்கு கிடைத்ததோ
ஒரு அழகி(அருவருப்பு)போட்டி!
அரைகுறை உடையுடன் நடக்க வைத்து
பண முதலைகளின் பொருள்களை விற்க
பெண்களை சந்தைப்படுத்தி
உலக அழகி (சுதந்திர) அடிமை பட்டம்!

கார் விளம்பரமா?
ஆண்கள் பயன்படுத்தும்
பொருள்களின் விளம்பரமா?
இழுத்து வா பெண்ணை
அரைகுறை ஆடையுடன்
நிற்க வை! ஆணுடன்!

கல்லூரியா? ஆணுடன்
பெண்ணையும்
கலந்து படிக்க வை!
பாய் – பிரண்ட்
கேர்ள் – பிரண்ட்
இரண்டும் இல்லையென்றால்
நீ ஒரு பைத்தியம்
இந்த உலகில்!

சிவப்பு விளக்கு
என்ற ஒரு தெரு!
அரசே அங்கீகாரம்
கொடுத்து நடத்தும்
அசிங்கங்கள்!
அசிங்கத்திற்கே
மரியாதை கொடுக்கும்
உலகத்தின் அரசாங்கங்கள்!

வக்கிரம் படைத்தவர்களுக்கு
பெண் என்றால் எல்லாவற்றையும்
துறந்து அலைய வேண்டும்!
வேஷ்டியோடு அலையும்
ஊரில் பேண்ட் போட்டுக்கொண்டு
நடந்தால் ஆச்சர்யம்!

தலைவிரி கோலத்துடன்
செய்தி வாசிக்கும் பெண்!
ஐந்துவயது பெண் குழந்தையின்
ஆடையுடன் தொலைக்காட்சி
நிகழ்ச்சிகள் நடத்தும் பெண்!
இறுக்கமான ஆடை அணிந்து
ஹாய், பாய் – காலேஜ் பெண்!
பெண்ணையே திருமணம்
செய்து கொள்ளும் பெண்!
யாரோடும் வாழ்வேன் – யாரும்
என் சுதந்திரத்தில் தலையிடாதே
நவீன நரகல் பெண்கள்!

இப்படிப்பட்ட கண்ணியமற்ற
சுதந்திரம்(?) பெண்களுக்கு வேண்டுமாம்!
உலகத்தில் உள்ள வக்கிரம்
படைத்தவர்கள் கதறுகிறார்கள்!!!
நாங்கள் கொடுத்த சுதந்திரம்
ஏன் இஸ்லாத்தில் இல்லை?
எரிச்சலில் – அவதூறு
இஸ்லாத்தில் பெண் சுதந்திரம் இல்லையாம்!

இஸ்லாம் வழங்கிய
சுதந்திரத்தை பார்த்து
எங்கள் பெண்கள் போல்
நீங்களும் வந்தால்தான்
நாங்கள் பார்க்கமுடியும்!
இப்படி புர்க்காவோடு வந்தால்
எப்படி? - பற்றி எறிகிறது
அவர்களின் வயிறு!
அந்த கலக்கத்தில்
கீழ்ப்பாக்கத்தில்
இருப்பதற்கு தகுதி படைத்த
உலக அறிவிலிகள் கதறுகிறார்கள்!
இஸ்லாத்தில் பெண் சுதந்திரம்
இல்லை என்று!

1432 வருடத்திற்கு முன்பே
இஸ்லாம் வழங்கிய சுதந்திரம்!
வாழ்வதற்கே சுதந்திரம்
பிற மதங்களில் இல்லை!
ஆனால் இஸ்லாத்தில்
வாழ, பேச, படிக்க
வியாபாரம் செய்ய
சொத்துக்களை தன்
பெயரில் வைத்துக்கொள்ள
சுதந்திரம்!

பிடித்த மணமகனை
தேர்வு செய்ய சுதந்திரம்!
கல்லானாலும் கணவன்
புல்லானாலும் புருஷன்
என்ற தத்துவத்தை உடைத்தெறிந்து
பிடிக்கவில்லை என்றால் நீ புல்லுதான்!
என்று விவாகரத்து செய்ய சுதந்திரம்!

திருமணத்தில் மஹர் என்ற உரிமை!
தந்தை சொத்தில் உரிமை!
கணவன் சொத்தில் உரிமை!
மகன் சொத்தில் உரிமை!
இஸ்லாம் பெண்களுக்கு
வழங்கியுள்ள சுதந்திரம் ஏராளம்!

உலகில் பெண்ணுக்கு
மனிதன் வழங்கிய சுதந்திரம்
கண்ணியமற்ற அலங்கோலம்!
உலகை படைத்த அல்லாஹ்
வழங்கிய பெண் சுதந்திரம்
கண்ணியமிக்க அந்தஸ்து!
 

அல்காயிதாவை உருவாக்கியதும் அமெரிக்க தூதரை கொன்றதும் அமெரிக்கா தான் - இங்கிலாந்து எம்.பி அதிரடி

அல்காயிதாவை உருவாக்கியதும் அமெரிக்க தூதரை கொன்றதும் 

அமெரிக்கா தான் - இங்கிலாந்து எம்.பி அதிரடி







அல்காயிதாவை உருவாக்கியதும் அமெரிக்க தூதரை கொன்றதும் அமெரிக்கா தான் - இங்கிலாந்து எம்.பி அதிரடி

லண்டன் - அமெரிக்காவும் இங்கிலாந்தும் சேர்ந்து தான் அல் காயிதாவை உருவாக்கியது என்றும் லிபியாவில் சமீபத்தில் இறந்த அமெரிக்க தூதரை கொன்றது அமெரிக்கா தான் என்றும் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜார்ஜ் கெல்லாவே தெரிவித்துள்ளார்.
யூ டியூப் நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஜார்ஜ
் கெல்லாவே தங்களது எதிரிகளை அழிக்க அமெரிக்காவும் இங்கிலாந்தும் சேர்ந்து தான் அல் காயிதாவை உருவாக்கியது என்றார். மேலும் அவர்களுக்கு ஆயுத நிதி உதவிகளை தந்ததோடு அவர்களை சுதந்திர போராட்ட வீரர்கள் என்று தாங்களே பிரபலபப்டுத்தியதாக ஜார்ஜ் கூறினார்.
ஸ்காட்லாந்தின் வில்லியம் துறைமுகத்தில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் கூறிய ஜார்ஜின் கருத்து குறித்து இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. லிபியாவில் தற்போது புதிதாக அமைந்துள்ள ஆட்சியின் மீது திருப்தி இல்லாததால் ஆட்சி மாற்றத்துக்காக அமெரிக்கா அனுப்பி வைத்த ஆட்களே அமெரிக்க தூதரை கொன்றனர் என்றும் ஜார்ஜ் அதிர்ச்சிகர தகவலை தெரிவித்தார்.
அமெரிக்கா தேவைப்படும் போது தனக்கு பிடிக்காத ஆட்சியை கவிழ்க்க தீவிரவாதிகளை அனுப்பும் என்று கூறிய ஜார்ஜ் இரட்டை கோபுர தாக்குதல் தீவிரவாதிகள் அமெரிக்காவால் பயிற்சி அளிக்கபப்ட்டவர்கள் என்றும் அவர்களுக்கு எவ்வாறு விமானத்தை இயக்குதல் மற்றும் இரட்டை கோபுரத்துக்குள் நுழையும் பயிற்சி உள்ளிட்ட அனைத்தும் அமெரிக்க அரசால் கொடுக்கப்பட்டதாக கூறினார்.

source:www.inneram.com
 
லண்டன் - அமெரிக்காவும் இங்கிலாந்தும் சேர்ந்து தான் அல் காயிதாவை உருவாக்கியது என்றும் லிபியாவில் சமீபத்தில் இறந்த அமெரிக்க தூதரை கொன்றது அமெரிக்கா தான் என்றும் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜார்ஜ் கெல்லாவே தெரிவித்துள்ளார்.
யூ டியூப் நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஜார்ஜ
் கெல்லாவே தங்களது எதிரிகளை அழிக்க அமெரிக்காவும் இங்கிலாந்தும் சேர்ந்து தான் அல் காயிதாவை உருவாக்கியது என்றார். மேலும் அவர்களுக்கு ஆயுத நிதி உதவிகளை தந்ததோடு அவர்களை சுதந்திர போராட்ட வீரர்கள் என்று தாங்களே பிரபலபப்டுத்தியதாக ஜார்ஜ் கூறினார்.
ஸ்காட்லாந்தின் வில்லியம் துறைமுகத்தில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் கூறிய ஜார்ஜின் கருத்து குறித்து இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. லிபியாவில் தற்போது புதிதாக அமைந்துள்ள ஆட்சியின் மீது திருப்தி இல்லாததால் ஆட்சி மாற்றத்துக்காக அமெரிக்கா அனுப்பி வைத்த ஆட்களே அமெரிக்க தூதரை கொன்றனர் என்றும் ஜார்ஜ் அதிர்ச்சிகர தகவலை தெரிவித்தார்.
அமெரிக்கா தேவைப்படும் போது தனக்கு பிடிக்காத ஆட்சியை கவிழ்க்க தீவிரவாதிகளை அனுப்பும் என்று கூறிய ஜார்ஜ் இரட்டை கோபுர தாக்குதல் தீவிரவாதிகள் அமெரிக்காவால் பயிற்சி அளிக்கபப்ட்டவர்கள் என்றும் அவர்களுக்கு எவ்வாறு விமானத்தை இயக்குதல் மற்றும் இரட்டை கோபுரத்துக்குள் நுழையும் பயிற்சி உள்ளிட்ட அனைத்தும் அமெரிக்க அரசால் கொடுக்கப்பட்டதாக கூறினார்.

source:www.inneram.com

நோய்,மரணம்,முதுமை,பீடைகள் இல்லாத வாழ்வு வேண்டுமா? வழி

நோய்,மரணம்,முதுமை,பீடைகள் இல்லாத வாழ்வு வேண்டுமா? வழி
 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு !!!!
சுவர்க்கத்தை நோக்கி…

நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது; அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. அல்குர்ஆன் 3:133

    இவ்வுலகில் வாழ்கின்ற  நல்லடியார்கள் சுவனபதியை அடைவதற்காக பெரும் முயற்சி எடுக்கின்றனர். மார்க்க வழிபாடுகளுக்கு சம்பந்தமே இல்லாமல் வாழ்ந்து வருபவர்களின் உள்ளத்திலும் இந்த சுவனபதியை அடைய வேண்டும் என்ற ஆசையோடு வாழ்வதை நாம் காண முடிகிறது. உயர்வான இச்சுவனபதி வாழ்க்கையை அது ஒரு பிளாட்பார சரக்கு போன்று சாதாரணமாக எண்ணி வாழ்பவர்களை நாம் அதிகமாக காண முடிகிறது. இந்த உயர்வான வாழ்க்கையை அடைய வேண்டுமென்றால் அதற்காக நம்மை தயார் செய்ய வேண்டும்.

    சுவர்க்க வாழ்வு

    என்னுடைய நல்லடியார்களுக்கு எந்தத் கண்ணும் கண்டிராத, எந்தக் காதும் செவியுறாத, எந்த மனிதனின் உள்ளத்திலும் தோன்றிடாதவை எல்லாம் நான் தயாரித்து வைத்துள்ளேன் என்று அல்லாஹ் கூறியதாக நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

    ‘ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்கு கூலியாக அவர்களுக்கு (தயாரித்து) மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்களின் குளிர்ச்சியை எந்தவொரு ஆத்மாவும் அறியாது’ என்ற 32:17 வசனத்தையும் ஓதினார்கள். (அபூஹுரைரா (ரழி), புகாரி,முஸ்லிம், திர்மிதி)

    நோய், மரணம், முதுமை, பீடைகள் இல்லாத வாழ்வு

    சுவர்க்கத்திற்குறியவர்கள் சுவர்க்கத்தின் உள்ளே புகுந்துவிட்டால், “நீங்கள் ஆரோக்கியத்தோடு வாழ்வதையே உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் எப்போதும் இனி நோயுறமாட்டீர்கள். நீங்கள் நிரந்தரமாக ஜீவித்திருப்பதையே உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே நீங்கள் எப்போதும் மரணிக்கவே மாட்டீர்கள்; நீங்கள் இளமையாக இருப்பீர்கள் என்பதை உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் எப்போதும் இனி முதுமையை அடையமாட்டீர்கள். நீங்கள் பாக்கியங்கள் பெற்று சுகமாக வாழ்வதையே உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் எப்போதும் இனி பீடை பிடித்தவர்களாக ஆக மாட்டீர்கள்; என்று அழைப்பாளர் ஒருவர் அழைத்துக் கூறுவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா (ரழி), திர்மிதி)

    சுவர்க்க வாயில்கள்

    நிச்சயமாக சுவர்க்கத்திற்கு எட்டு வாயில்கள் உண்டு. எவர் தொழுகையாளியாக இருந்தாரோ அவர் தொழுகை வாயினிலிருந்து அழைக்கப்படுவார். எவர் நோன்பாளியாக இருந்தாரோ அவர் நோன்புடைய வாயினிலிருந்து அழைக்கப்படுவார். எவர் தர்மம் செய்பவராக இருந்தாரோ அவர் தர்மத்துடைய வாயினிலிருந்து அழைக்கப்படுவார் என்று கூறியதும், ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இந்த எட்டு வாயில்களிலிருந்தும் எவராவது அழைக்கப்படுவாரா? என்று அபூபக்கர்(ரழி) கேட்டார்கள்; ‘ஆம்’ அவர்களில் நீரும் இருக்க ஆசிக்கின்றேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹ்லுப்னு ஸஅத்(ரழி) புகாரி, முஸ்லிம், அஹ்மத், இப்னு மாஜ்ஜா)

        “நான் நபிமார்களை பின்பற்றுவோர்களை அதிகமாகக் கொண்டவன்; சுவர்க்க வாசலை தட்டுவோரில் நானே முதன்மையானவன்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    சுவர்க்கவாசிகளின் இதயங்கள்

    பாவங்கள், விரோதங்கள், பொறாமைகள் போன்ற அனைத்து கெட்டவைகளும் நீங்கிய இதயங்களாக இருப்பார்கள்.

    “விசுவாசங்கொண்டு, நற்காரியங்கள் செய்து சுவர்க்கத்தில் நுழைந்துவிட்ட அவர்களின் நெஞ்சங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கி விடுவோம்” என்ற இறை வசனத்தின்படி பரிசுத்தமான நெஞ்சங்கள் கொண்டவர்களாக இருப்பார்கள். அல்குர்ஆன் 7:43, 15:47

    சுவர்க்கம் புகும் முதல் கூட்டத்தின் நிலை

    சுவர்க்கம் புகும் முதல் கூட்டத்தினர் பவுர்ணமி இரவில் உள்ள முழு நிலவு போன்று இருப்பார்கள். அவர்களுக்கு அடுத்தவர்கள் வானத்தில் ஒளிவீசிக் கொண்டிருக்கும் நட்சத்திரம் போன்று இருப்பார்கள். அதற்கு பின்னால் அங்கே பல படித்தரங்கள் உண்டு. மலம் கழிக்கமாட்டார்கள். சிறுநீர் கழிக்கமாட்டார்கள். மூக்குச்சளி சிந்த மாட்டார்கள்; எச்சில் துப்பமாட்டார்கள்; அவர்களுக்கு சீப்பு தங்கத்தினால் ஆனதாகும். அவர்களின் வியர்வை கஸ்தூரி மணமாகும். அவர்களுடைய குணங்கள் ஒரே மனிதருக்குள்ள குணத்தைப் போன்று (ஒரே) நிலையில் இருக்கும். அவர்களுடைய பிதா ஆதமுடைய உடல், உயரம் போன்று அறுபது முழத்தில் இருப்பார்கள். அவர்களுக்கிடையே கோபதாபங்களோ, குரோதங்களோ இருக்காது காலை, மாலை நேரங்களில் அல்லாஹ்வை போற்றி புகழ்ந்து கொண்டிருப்பார்கள். (அபூஹுரைரா (ரழி), புகாரி, முஸ்லிம், திர்மிதி

    சுவர்க்கவாசிகளின் வரவேற்பு வார்த்தை

    அச்(சுவனத்தில்) வீண் வார்த்தைகளையோ, பொய்யையோ செவியுறமாட்டார்கள்; ‘ஸலாமுன்’ (உங்கள் மீது சாந்தி உண்டாவதாக) என்ற வார்த்தையை தவிர அதில் அவர்களுடைய முகமன் வார்த்தை ‘ஸலாமுன்’ என்பதாகும். அல்குர்ஆன் 78:35, 10:10

    சுவர்க்கத்து தோட்டங்கள், ஆறுகள், நீரூற்றுகள்

    அல்லாஹ்வை பயந்து வாழ்ந்த நல்லடியார்கள் தோட்டங்களிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள். ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவர்க்கத்தில் இருப்பார்கள் என்று அல்லாஹ் பல இடங்களில் கூறுகிறான்.

    பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது; அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன; இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும் தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. அல்குர்ஆன் 47:15

    சுவனத்தில் இறைவனைக் காணும் பாக்கியம்

    சுவர்க்கவாசிகள் சுவர்க்கம் புகுந்துவிடுவார்களானால் உங்களுக்கு இன்னும் அதிகமான ஒன்றை நீங்கள் நாடுகிறீர்களா என்று அல்லாஹ் கேட்பான். இரட்சகனே! நீ எங்களின் முகங்களை வென்மையாக்கவில்லையா? நீ எங்களை சுவர்க்கத்தில் நுழைவித்து நரகத்தைவிட்டும் எங்களை நீ காப்பாற்றவில்லையா? (இதைவிட வேறு எங்களுக்கு என்ன வேண்டும்) என்று சொல்வார்கள். திரை அகற்றப்படும் தங்கள் இரட்சகனை காண்பதைவிட வேறொரு பிரியமான பொருளை அவர்கள் கொடுக்கப்பட மாட்டார்கள் என்று ரஸூலுல்லாஹ் கூறினார்கள். (ஸுஹைபு (ரழி), முஸ்லிம், திர்மிதி)

    மறுமையில் பவுர்ணமி இரவன்று சந்திரனை நீங்கள் பார்ப்பதைப் போன்று நீங்கள் உங்கள் இரட்சகனை பார்ப்பீர்கள் என்று அல்லாஹ்வின் திருத்தூதர் சொன்னார்கள். ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி)

    அல்லாஹ் நம்மை சுவர்க்கத்து வாசிகளாகவும் அவனைக் கண்டு மனமகிழ்வு பெருவோரிலும் ஆக்கி அருள் செய்வானாக! ஆமீன்.
 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு !!!!
சுவர்க்கத்தை நோக்கி…

நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது; அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. அல்குர்ஆன் 3:133

இவ்வுலகில் வாழ்கின்ற நல்லடியார்கள் சுவனபதியை அடைவதற்காக பெரும் முயற்சி எடுக்கின்றனர். மார்க்க வழிபாடுகளுக்கு சம்பந்தமே இல்லாமல் வாழ்ந்து வருபவர்களின் உள்ளத்திலும் இந்த சுவனபதியை அடைய வேண்டும் என்ற ஆசையோடு வாழ்வதை நாம் காண முடிகிறது. உயர்வான இச்சுவனபதி வாழ்க்கையை அது ஒரு பிளாட்பார சரக்கு போன்று சாதாரணமாக எண்ணி வாழ்பவர்களை நாம் அதிகமாக காண முடிகிறது. இந்த உயர்வான வாழ்க்கையை அடைய வேண்டுமென்றால் அதற்காக நம்மை தயார் செய்ய வேண்டும்.

சுவர்க்க வாழ்வு

என்னுடைய நல்லடியார்களுக்கு எந்தத் கண்ணும் கண்டிராத, எந்தக் காதும் செவியுறாத, எந்த மனிதனின் உள்ளத்திலும் தோன்றிடாதவை எல்லாம் நான் தயாரித்து வைத்துள்ளேன் என்று அல்லாஹ் கூறியதாக நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

‘ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்கு கூலியாக அவர்களுக்கு (தயாரித்து) மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்களின் குளிர்ச்சியை எந்தவொரு ஆத்மாவும் அறியாது’ என்ற 32:17 வசனத்தையும் ஓதினார்கள். (அபூஹுரைரா (ரழி), புகாரி,முஸ்லிம், திர்மிதி)

நோய், மரணம், முதுமை, பீடைகள் இல்லாத வாழ்வு

சுவர்க்கத்திற்குறியவர்கள் சுவர்க்கத்தின் உள்ளே புகுந்துவிட்டால், “நீங்கள் ஆரோக்கியத்தோடு வாழ்வதையே உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் எப்போதும் இனி நோயுறமாட்டீர்கள். நீங்கள் நிரந்தரமாக ஜீவித்திருப்பதையே உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே நீங்கள் எப்போதும் மரணிக்கவே மாட்டீர்கள்; நீங்கள் இளமையாக இருப்பீர்கள் என்பதை உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் எப்போதும் இனி முதுமையை அடையமாட்டீர்கள். நீங்கள் பாக்கியங்கள் பெற்று சுகமாக வாழ்வதையே உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் எப்போதும் இனி பீடை பிடித்தவர்களாக ஆக மாட்டீர்கள்; என்று அழைப்பாளர் ஒருவர் அழைத்துக் கூறுவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா (ரழி), திர்மிதி)

சுவர்க்க வாயில்கள்

நிச்சயமாக சுவர்க்கத்திற்கு எட்டு வாயில்கள் உண்டு. எவர் தொழுகையாளியாக இருந்தாரோ அவர் தொழுகை வாயினிலிருந்து அழைக்கப்படுவார். எவர் நோன்பாளியாக இருந்தாரோ அவர் நோன்புடைய வாயினிலிருந்து அழைக்கப்படுவார். எவர் தர்மம் செய்பவராக இருந்தாரோ அவர் தர்மத்துடைய வாயினிலிருந்து அழைக்கப்படுவார் என்று கூறியதும், ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இந்த எட்டு வாயில்களிலிருந்தும் எவராவது அழைக்கப்படுவாரா? என்று அபூபக்கர்(ரழி) கேட்டார்கள்; ‘ஆம்’ அவர்களில் நீரும் இருக்க ஆசிக்கின்றேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹ்லுப்னு ஸஅத்(ரழி) புகாரி, முஸ்லிம், அஹ்மத், இப்னு மாஜ்ஜா)

“நான் நபிமார்களை பின்பற்றுவோர்களை அதிகமாகக் கொண்டவன்; சுவர்க்க வாசலை தட்டுவோரில் நானே முதன்மையானவன்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

சுவர்க்கவாசிகளின் இதயங்கள்

பாவங்கள், விரோதங்கள், பொறாமைகள் போன்ற அனைத்து கெட்டவைகளும் நீங்கிய இதயங்களாக இருப்பார்கள்.

“விசுவாசங்கொண்டு, நற்காரியங்கள் செய்து சுவர்க்கத்தில் நுழைந்துவிட்ட அவர்களின் நெஞ்சங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கி விடுவோம்” என்ற இறை வசனத்தின்படி பரிசுத்தமான நெஞ்சங்கள் கொண்டவர்களாக இருப்பார்கள். அல்குர்ஆன் 7:43, 15:47

சுவர்க்கம் புகும் முதல் கூட்டத்தின் நிலை

சுவர்க்கம் புகும் முதல் கூட்டத்தினர் பவுர்ணமி இரவில் உள்ள முழு நிலவு போன்று இருப்பார்கள். அவர்களுக்கு அடுத்தவர்கள் வானத்தில் ஒளிவீசிக் கொண்டிருக்கும் நட்சத்திரம் போன்று இருப்பார்கள். அதற்கு பின்னால் அங்கே பல படித்தரங்கள் உண்டு. மலம் கழிக்கமாட்டார்கள். சிறுநீர் கழிக்கமாட்டார்கள். மூக்குச்சளி சிந்த மாட்டார்கள்; எச்சில் துப்பமாட்டார்கள்; அவர்களுக்கு சீப்பு தங்கத்தினால் ஆனதாகும். அவர்களின் வியர்வை கஸ்தூரி மணமாகும். அவர்களுடைய குணங்கள் ஒரே மனிதருக்குள்ள குணத்தைப் போன்று (ஒரே) நிலையில் இருக்கும். அவர்களுடைய பிதா ஆதமுடைய உடல், உயரம் போன்று அறுபது முழத்தில் இருப்பார்கள். அவர்களுக்கிடையே கோபதாபங்களோ, குரோதங்களோ இருக்காது காலை, மாலை நேரங்களில் அல்லாஹ்வை போற்றி புகழ்ந்து கொண்டிருப்பார்கள். (அபூஹுரைரா (ரழி), புகாரி, முஸ்லிம், திர்மிதி

சுவர்க்கவாசிகளின் வரவேற்பு வார்த்தை

அச்(சுவனத்தில்) வீண் வார்த்தைகளையோ, பொய்யையோ செவியுறமாட்டார்கள்; ‘ஸலாமுன்’ (உங்கள் மீது சாந்தி உண்டாவதாக) என்ற வார்த்தையை தவிர அதில் அவர்களுடைய முகமன் வார்த்தை ‘ஸலாமுன்’ என்பதாகும். அல்குர்ஆன் 78:35, 10:10

சுவர்க்கத்து தோட்டங்கள், ஆறுகள், நீரூற்றுகள்

அல்லாஹ்வை பயந்து வாழ்ந்த நல்லடியார்கள் தோட்டங்களிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள். ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவர்க்கத்தில் இருப்பார்கள் என்று அல்லாஹ் பல இடங்களில் கூறுகிறான்.

பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது; அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன; இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும் தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. அல்குர்ஆன் 47:15

சுவனத்தில் இறைவனைக் காணும் பாக்கியம்

சுவர்க்கவாசிகள் சுவர்க்கம் புகுந்துவிடுவார்களானால் உங்களுக்கு இன்னும் அதிகமான ஒன்றை நீங்கள் நாடுகிறீர்களா என்று அல்லாஹ் கேட்பான். இரட்சகனே! நீ எங்களின் முகங்களை வென்மையாக்கவில்லையா? நீ எங்களை சுவர்க்கத்தில் நுழைவித்து நரகத்தைவிட்டும் எங்களை நீ காப்பாற்றவில்லையா? (இதைவிட வேறு எங்களுக்கு என்ன வேண்டும்) என்று சொல்வார்கள். திரை அகற்றப்படும் தங்கள் இரட்சகனை காண்பதைவிட வேறொரு பிரியமான பொருளை அவர்கள் கொடுக்கப்பட மாட்டார்கள் என்று ரஸூலுல்லாஹ் கூறினார்கள். (ஸுஹைபு (ரழி), முஸ்லிம், திர்மிதி)

மறுமையில் பவுர்ணமி இரவன்று சந்திரனை நீங்கள் பார்ப்பதைப் போன்று நீங்கள் உங்கள் இரட்சகனை பார்ப்பீர்கள் என்று அல்லாஹ்வின் திருத்தூதர் சொன்னார்கள். ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி)

அல்லாஹ் நம்மை சுவர்க்கத்து வாசிகளாகவும் அவனைக் கண்டு மனமகிழ்வு பெருவோரிலும் ஆக்கி அருள் செய்வானாக! ஆமீன்.

Monday, February 25, 2013

துபாயில் எஸ்.எம்.ஹிதாயத்துல்லா அவர்களின் உரையின் சுருக்கம்.) துபாயில் நடைபெற்ற (SEED) சீட் ட்ரஸ்ட்ஆலோசனைக் கூட்டதில்

( துபாயில் எஸ்.எம்.ஹிதாயத்துல்லா அவர்களின் உரையின் சுருக்கம்.)
 துபாயில் நடைபெற்ற (SEED) சீட் ட்ரஸ்ட்ஆலோசனைக் கூட்டதில்


துபாயில் தமிழ்நாடு சமூக கல்வி பொருளாதார மேம்பாட்டு கழக (SEED) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு சமூக கல்வி பொருளாதார மேம்பாட்டு கழக ஆலோசனைக்கூட்டம் ஆலியா குரூப் மேலாண்மை இயக்குனர் தாவூத் மரைக்காயர் தலைமையில் துபாய் -ரஷீதியாவில் நடைபெற்றது.

தொழில் அதிபர் கீழக்கரை ஹுசைன் காகா, இந்தியன் முஸ்லிம் அசோசியேசன் விழாக்குழு இணைச்செயலாளர் அப்துல் காதிர், கடையநல்லூர் ஜமாஅத் எஸ்.கே.எம்.ஹபிபுல்லா, திரிகூடபுரம் இபுராஹீம், முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் ஆலோசனைகளுக்கு பிறகு இறுதியாக தாயகத்திலிருந்து வந்திருந்த தமிழ்நாடு சமூக கல்வி பொருளாதார மேம்பாட்டு கழகத் தலைவர் எஸ்.எம்.ஹிதாயத்துல்லா
"SEED "   செயல்பாடுகள் பற்றி மிக விரிவாக எடுத்துக்கூறினார் . அவர் பேசும்போது , 2008 - ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட"SEED "  மைப்பின் மூலம் தமிழகம் முழுவதும் மாவட்ட ஜமாத்துகளின் ஆதரவோடு  1500 க்கும் மேற்பட்ட ஏழை மாணவர்களுக்கு ஆண்டுதோறும் சுமார் ஒன்னறை கோடி ருபாய் ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்டு வருகிறது .

தமிழகம் முழுவதும் 10 கல்லூரி மையங்களில் தமிழ்நாடு அரசு   களுக்கான  இலவச பயிற்சி வழங்க நிதி உதவி வழங்கப்படுகிறது .

சென்னை புதுக்கல்லூரியில் IAS ,IPS மற்றும் மத்திய ,மாநில அரசுகளின் தேர்வுகளுக்கான இலவச பயிற்சிகள் நடத்த நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது .

தமிழகம் முழுவதும் இதுவரை 600 பள்ளிவாசல்களில் ஜகாத் பைத்துல்மால் ஆரம்பிக்கப் பட்டு ஒவ்வொரு பைத்துல்மாலுக்கும் ரூ .10,000 வழங்கப்பட்டுள்ளது .

ஏழைகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் பைத்துல்மால்கள் பல்வேறு அறக்கட்டளைகள் மூலம் நடைபெற்று வருகின்றன.

சென்னை புதுக்கல்லூரியில் IAS ,IPS மற்றும் மத்திய ,மாநில அரசுகளின் தேர்வுகளுக்கான இலவச பயிற்சிகள் நடத்த நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது .

அமீரகத்தில் வாழும் மக்கள் ,பைத்துல்மால் ஆரம்பிக்கப் பட்ட ஊர்களில் அந்ததந்த ஊர்களை சார்ந்தவர்கள் பைத்துல்மால்கள் செம்மையாக நடைபெற முழு ஒத்துழைப்பு வழங்குங்கள் ; பைத்துல்மால்கள் ஆரம்பிக்கப்படாத ஊர்களை சார்ந்தவர்கள் ஊர் பள்ளி ,ஜமாஅத் நிர்வாகிகளை தொடர்புகொண்டு ஆரம்பிக்க ஏற்பாடு செய்யுங்கள்" என்று கேட்டுக்கொண்டார் .


செய்தி தொகுப்பு : அபு ஆஸிமா

Saturday, February 23, 2013

போலியோ சொட்டுமருந்து நாம் செய்யும் தவறுகள்

 போலியோ சொட்டுமருந்து நாம் செய்யும் தவறுகள்




ஒருமுறை எனது நண்பர் ஒருவர் தனது குழந்தைக்கு போலியோ மருந்து கொடுக்க அழைத்து சென்றிருக்கிறார் . அங்கு வரிசையில் நிற்கும்பொழுது அழுகின்றக் குழந்தைகளை சமாதானம் செய்வதற்காக ஒவ்வொருவரும் தங்களின் குழந்தைகளுக்கு சிலர் தாய் பாலும் பலர் புட்டிப் பாலும் கொடுத்திருக்கிறார்கள் . 

அப்பொழுது இவரின் குழந்தையும் அழுகத் தொடங்கவே இவரும் வேறு வழியின்றி அருகில் இருந்த டீ கடையொன்றில் பால்வாங்கி தனது குழந்தைக்கு கொடுத்து அதன் அழுகையை நிறுத்தியதாகவும் . ஒருவேளை அந்த டீ கடை மட்டும் அங்கு இல்லாமல் இருந்திருந்தால் தனது நிலைமை மிகவும் மோசமாகி இருக்கும் என்று அவர் போலியோ சொட்டு மருந்து கொடுக்க சென்ற அனுபவத்தை சொல்லிகொண்டிருந்தார். 

அப்பொழுது நான் அவரிடம் கேட்டேன் நீங்கள் உங்கள் குழந்தைக்கு பால் கொடுத்ததில் இருந்து எவளவு நேரம் கழித்து போலியோ சொட்டு மருந்து கொடுத்தீர்கள் என்று அதற்கு அவர் கொடுத்தப் பதில் எனது கோபத்தை அதிகப்படுத்தியது . பால் கொடுத்து ஐந்து நிமிடத்தில் சொட்டுமருந்து கொடுத்துவிட்டார்கள் உடனே வீடு திரும்பிவிட்டேன் என்று கூறினார் . 

நண்பர்களே இதில் என்ன தவறு இருக்கிறது என்று பலருக்கு புரியாமல் இருக்கலாம் சொல்கிறேன் . எப்பொழுதெல்லாம் நாம் போலியோ சொட்டு மருந்து கொடுக்க செல்கிறோமோ அப்பொழுது குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கு முன்பும், பின்பும் தாய் பால் என்றால் இரண்டு மணிநேரத்திற்கும் , புட்டிப்பால் என்றால் ஒருமணிநேரத்திற்கும் கொடுத்தல் கூடாது .

ஒருவேளை நாம் அவ்வாறு நாம் பால் கொடுக்க நேர்ந்தால் அரசு கொடுக்கும் போலியோ சொட்டு மருந்தின் சக்தியை முற்றிலும் தாய் பால் செயலிழக்க செய்துவிடும் . இதுவரை இந்த தகவல் தங்களின் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க அழைத்து செல்லும் எத்தனை பெற்றோர்களுக்கு தெரிந்திருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை..?

அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக போலியோ சொட்டுமருந்து கொடுக்கும் இடங்களில் இந்த தகவலை தெளிவுபடுத்துங்கள்...!

நன்றி : Ilayaraja Dentist.


ஹைதரபாத் குண்டு வெடிப்பு ! விடை தெரியாத கேள்விகள் .....?

.
ஹைதரபாத் குண்டு வெடிப்பு ! விடை தெரியாத கேள்விகள் .....?

ஹைதராபாத் குண்டு வெடிப்பில் 16 பேர் உயிரிழந்தும் 115 பேர் காயமடைந்தும் உள்ளனர். குண்டுவெடிப்பு நடந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருந்ததாகச் சொல்லப்படும் நிலையில், இவற்றின் பின்னணியில் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன.

1) ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் விபரம், காவல்துறைக்கு மட்டுமே அறிந்த ரகசியம். கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டதை உடனடியாக கவனத்தில் எடுத்துக் கொண்டு கண்காணிப்பை பலப்படுத்தியிருந்தால் குற்றவாளிகளை பிடிக்க முடிந்திருப்பதோடு, குண்டுவெடிப்பும் தவிர்க்கப்பட்டிருக்கும் வாய்ப்பை ஏன் நழுவவிட்டது காவல்துறை. பாதுகாப்பு கேமராக்களுக்கே பாதுகாப்பு இல்லாமலும், அவற்றின் செயல்பாடுகளைக் கண்காணிக்காமலும்தான் உள்நாட்டு பாதுகாப்பின் லட்சணம் உள்ளதா? காவல்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்தது எப்படி? காவல்துறையிலுள்ள கறுப்பு ஆடுகளின் துணையின்றி நிச்சயமாக இது சாத்தியமில்லை. எனவே, நடத்தப்படும் விசாரணையின் முதல் கட்டமே இந்தக் கண்காணிப்பு கேமராக்களின் கட்டுப்பாடு கைவசம் வைத்திருந்த காவல்துறையினரிடமிருந்து ஆரம்பிக்கப்படவேண்டும்.

2) ஒவ்வொரு குண்டு வெடிப்பிற்குப் பின்னரும் ஏதாவது ஒரு தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டதாகச் சொல்லப்படுவதுண்டு. ஆனால், இதுவரை அப்படி எந்தவொரு அமைப்பும் இந்தக் குண்டுவெடிப்பில் பொறுப்பேற்கவில்லை. எனினும், இந்திய முஜாஹிதீன் என்ற அமைப்பே காரணம் என்று சில ஊடகங்கள் செய்தி பரப்புகின்றன. ஒரு வாதத்திற்காக இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு பாகிஸ்தானிலிருந்து செயல்படுவதாகக் கொண்டாலும், இதுவரை இந்தக் குண்டுவெடிப்புகளுக்குப் பொறுப்பேற்காமலிருப்பது ஏன்? முன்னர் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளுக்குப் பின்னர் உடனடியாகவே ஏதாவது ஒரு இமெயில் அல்லது கடிதம் காவல்துறைக்குக் கிடைக்கும். தொடர்ந்து, அடுத்த அரை மணி நேரங்களுக்குள்ளேயே ஏதாவது ஒரு இஸ்லாமிய அமைப்பின் பெயர் தொடர்புபடுத்தப்பட்டு முஸ்லிம்கள் கைது செய்யப்படுவர். அவையெல்லாம் காவி தீவிரவாதத்தின் சதிவேலைகள்தான் என்பது உளவுத்துறையினரால் நிரூபிக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்தமுறை அத்தகைய இமெயில், கடிதம் போன்ற துப்புக்கெட்ட துப்புகள் ஏதும் கிடைக்காதது ஏன்?

3) இந்திய முஜாஹிதீன் என்ற அமைப்பின் அலுவலகம் எதுவென்று அறிவிக்கக்கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமீபத்தில் கேரோ செய்தததும் நினைவிருக்கலாம். மத்திய உள்துறை அமைச்சர் அறிவித்ததைப் போன்று ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு இருக்கும் பயங்கரவாத பயிற்சி முகாம்களைப் போன்று இந்திய முஜாஹிதீனுக்கு வெளிப்படையான அலுவலகமோ அல்லது பயிற்சி முகாமோ இருப்பதற்கான எத்தகைய ஆதாரங்களும் அரசுவசம் இல்லாத நிலையில் எங்கிருக்கிறது என்றே அறியப்படாத இந்தியன் முஜாஹிதீன் என்ற பெயரை மீண்டும் மீண்டும் ஊடகங்கள் முன்னிறுத்துவதன் மர்மம் என்ன?

4) குண்டுவெடிப்பு நிகழ்ந்த அதே தினத்தில், காஷ்மீரில் பேரணி நடத்தச்சென்ற தொகாடியாவுக்கு அங்கு அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாக செய்திகள் வெளியானது. முன்னதாக, ஹைதராபாத்தில் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் ஹைதராபாத்தை அயோத்தியாக மாற்றுவோம் என்று மதவெறி வன்முறையைத் தூண்டும்படி இவர் பேசினார். இக்குண்டுவெடிப்புகளுக்கும் மேற்கண்ட சம்பவங்களுக்கும் இடையில் ஏதேனும் தொடர்பிருக்குமா? ஹைதராபாத்தில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்பதை நிறுவுவதற்காக, அந்நேரத்தில் தான் காஷ்மீரில் இருந்ததாக அலிபி தயாரிக்கத்தான் தொகாடியா காஷ்மீர் சென்றாரா என்ற கோணத்திலும் விசாரிக்கப்படணும்தானே?

5) டெல்லியில் கைது செய்யப் பட்டுள்ள இருவர், குண்டு வெடிப்பு நடத்த தில்சுக் நகரை வேவு பார்த்ததாக காவல்துறையினரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக கூறப்படுவது உண்மையாக இருக்கும் பட்சத்தில், குறைந்த பட்சம் சுமார் இரு வருடங்களுக்காவது தில்சுக் நகர் கடுமையான கண்காணிப்புக்கு உட்படுத்தி இருக்க வேண்டாமா? 

6) அதே நேரத்தில், இந்திய முஜாகிதீன் தேர்ந்தெடுத்துள்ளதாக கூறப்பட்ட தில்சுக் நகரில் குண்டு வெடிப்பை நிகழ்த்துவதன் மூலம், அந்தப் பழி இந்தியன் முஜாஹிதீன்மீது விழுவதை, காவி தீவிரவாத அமைப்புகள் உட்படயுள்ள மற்ற தீவிரவாத அமைப்புகள் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டு இருக்கலாமே?

7) பாஜக தலைவர்களில் ஒருவரான சுஷ்மா ஸ்வராஜ் கூறியதுபோல், இக்குண்டுவெடிப்புகளின் பின்னணியில் மதவாத வெறுப்பு பேச்சுகளுக்குத் தொடர்பிருக்க வாய்ப்புகளிருப்பின் ஒவைசியின் பேச்சுகளைவிட தொகாடியாவின் பேச்சுக்கே அதிக வாய்ப்புகள் உள்ளன. எனினும், தொகாடியாவைக் காப்பாற்றும் வகையில் ஒருசார்பாக சுஷ்மா ஸ்வராஜ் பேசுவதையும் கருத்தில் கொண்டு புலனாய்வு விசாரணைகளை முடுக்கி விட்டால், இதன் பின்னணியில் மதவாத சக்திகளின் தொடர்புகள் இருப்பின் தெரியவருமே!

8) சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுகளால் பெரிதும் பலனடையப்போவது அமெரிக்காவே. இந்நிலையில் ஊழல் குற்றச்சாட்டுகளால் பலவீனப்பட்டுள்ள காங்கிரஸுக்கு உதவும் வகையிலும், மக்களவை உறுப்பினர்களின் கவனத்தைத் திசைதிருப்பவும் அந்நிய சக்திகளின் கைங்கர்யம் இருக்கவும் வாய்ப்புள்ளதே!

9) தெலுங்கானா தனிமாநிலம் கோரியும், அதன் தலைநகராக ஹைதராபாத் இருக்கும் என்றும் தெலுங்கானா ஆதரவு கட்சிகள் தெரிவித்துள்ள நிலையில், ஆளும் மத்திய காங்கிரஸ் அரசு தெலுங்கானா பிரச்சனையில் முடிவெடுக்காமல் காலம்தாழ்த்தி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகளின் அணுகுமுறைகளில் நம்பிக்கை இழந்த 'செம்புலிகள்' எனும் அமைப்பு ஆயுத போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில் நிகழ்ந்துள்ள இந்தக் குண்டுவெடிப்புகளில் அவர்களுக்குள்ள தொடர்புகள் குறித்தும் விசாரணைகள் ஏன் திரும்பவில்லை?

10) தமிழக எல்லையோரமுள்ள நெல்லூரில் சமீபத்தில் 60,000 ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் ரகசியமாகக் கூடி, பயிற்சி முகாம் நடத்திய செய்திகள் உள்ளூர் ஊடகங்கள் தவிர வேறு எந்த ஊடங்களிலும் வெளியாகவில்லை. ஹைதராபாத்தை அயோத்தியாக மாற்றுவோம் என்று சங் பரிவாரங்கள் வெளிப்படையாகவே மிரட்டியுள்ள நிலையில், இத்தகைய பயிற்சி முகாம்கள் ஏன் கண்காணிக்கப்படவில்லை?

11) மாலேகான், அஜ்மீர், மக்கா மஸ்ஜித் முதலான அநேக குண்டுவெடிப்புகளில் முதலில் சந்தேகிக்கப்பட்டதுபோல் முஸ்லிம் தீவிரவாத அமைப்புகளுக்குத் தொடர்பில்லை என்றும் அவற்றைத் திட்டமிட்டு நடத்திய காவி இந்துத்துவ தீவிரவாத அமைப்புகளே என்பது நிரூபணமாகியதோடு, ஷிண்டே - ஆர்.எஸ்.எஸ், பாஜக குறித்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களை வெளியிட்ட பின்னரும், பாஜகவின் மிரட்டலுக்குப் பயந்து தனது கருத்துக்காக மன்னிப்பு கோரினார். ஷிண்டேவை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்பதும் பாஜகவின் கோரிக்கையாக இருந்த நிலையில், அவருக்கு நெருக்கடி ஏற்படுத்தும் விதமாக பாஜகவேகூட ஏன் இந்தக் குண்டுவெடிப்புகளை நிகழ்த்திருக்கக்கூடாது?

பெரும்பாலான குண்டுவெடிப்புகளின் பலன்கள் பாஜகவுக்கும், நெருக்கடியிலிருக்கும் ஆளுங்கட்சிக்குமே சாதகமாக இருப்பதால் வழக்கம்போல் ஒருசிலரைக் கைதுசெய்துவிட்டு, கமுக்கமாக அரசின் திட்டங்களை நிறைவேற்றிக்கொள்ளும் யுக்தியாக இந்தக் குண்டுவெடிப்புகளிலும் அதற்கான சாத்தியம் இல்லாமலில்லை என்பதையும் மறுப்பதற்கில்லை.

எது எப்படியிருந்தாலும் இவ்வாறு நடத்தப்படும் குண்டுவெடிப்புகளின் பின்னணி, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்கோ அல்லது இனத்துக்கோ நன்மை பயக்கவேண்டும் என்ற திட்டத்தில் நடத்தப்படுவது இல்லை என்பது மட்டும் உறுதி. நடத்தப்படும் குண்டுவெடிப்புகளால் இழப்பு என்பது அனைத்து சமுதாயத்தையும் சேர்ந்த பொதுமக்களுக்கே! எனவே, இவற்றின் பின்னணியிலுள்ள பயங்கரவாதிகள், சாதாரண பொதுமக்களின் நன்மைக்காக இம்மாபாதக செயலைச் செய்வதில்லை என்பது வெள்ளிடை மலை!

அதே சமயம் இத்தகைய குண்டுவெடிப்புகள் மூலம் மக்கள் மனதில் விதைக்கப்படும் இனப்பிளவினால் பிறக்கும் ஓட்டுகள், விலைவாசி உயர்வினால் நிமிடத்துக்கு நிமிடம் செத்துக்கொண்டிருக்கும் சாதாரண மக்களின் மனதில் தோன்றும் அரசுகளுக்கு எதிரான எதிர்ப்பு உணர்வினை மழுங்கடித்தல்/மறக்கடித்தல், நாட்டைக் காவுகொள்ளும் பயங்கரமிருகமான ஊழலுக்கு எதிரான மக்களின் எண்ணங்களை நீர்த்துப்போக செய்தல் முதலிய எண்ணற்ற நன்மைகள் இந்நாட்டில் அரசியல் பிழைப்பு நடத்தும் கேவலமான அரசியல்வியாதிகளுக்குத்தான் என்பது அசைக்கமுடியாத உண்மை! அதிகாரம், பலம், பணம் என அனைத்தையும் கைவசம் வைத்திருக்கும் பயங்கரவாத ஜந்துக்களாலேயே இத்தகைய திட்டமிட்டச் சதிச் செயல்களை வெற்றிகரமாக நடத்தமுடியுமென்பதும் யோசிப்பவர்களுக்கு நன்கு விளங்கும் விசயம்.

இந்நாட்டில் நீதித்துறை என்ற ஒன்று சரியாக இயங்குமானால், மேற்கண்ட அடிப்படை உண்மையினை மையமாக வைத்து இத்தகைய பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணியிலுள்ள தீய சக்திகளைச் சட்டத்தின் முன்னிலையில் கொண்டுவருதற்கான நீதிபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்பதே இந்நாட்டின் சாதாரண குடிமக்களின் எதிர்பார்ப்பாகும்!

- எழில் பிரகாசம் ( இந்நேரம் )
ஹைதரபாத் குண்டு வெடிப்பு ! விடை தெரியாத கேள்விகள் .....?

ஹைதராபாத் குண்டு வெடிப்பில் 16 பேர் உயிரிழந்தும் 115 பேர் காயமடைந்தும் உள்ளனர். குண்டுவெடிப்பு நடந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருந்ததாகச் சொல்லப்படும் நிலையில், இவற்றின் பின்னணியில் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன.

1) ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் விபரம், காவல்துறைக்கு மட்டுமே அறிந்த ரகசியம். கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டதை உடனடியாக கவனத்தில் எடுத்துக் கொண்டு கண்காணிப்பை பலப்படுத்தியிருந்தால் குற்றவாளிகளை பிடிக்க முடிந்திருப்பதோடு, குண்டுவெடிப்பும் தவிர்க்கப்பட்டிருக்கும் வாய்ப்பை ஏன் நழுவவிட்டது காவல்துறை. பாதுகாப்பு கேமராக்களுக்கே பாதுகாப்பு இல்லாமலும், அவற்றின் செயல்பாடுகளைக் கண்காணிக்காமலும்தான் உள்நாட்டு பாதுகாப்பின் லட்சணம் உள்ளதா? காவல்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்தது எப்படி? காவல்துறையிலுள்ள கறுப்பு ஆடுகளின் துணையின்றி நிச்சயமாக இது சாத்தியமில்லை. எனவே, நடத்தப்படும் விசாரணையின் முதல் கட்டமே இந்தக் கண்காணிப்பு கேமராக்களின் கட்டுப்பாடு கைவசம் வைத்திருந்த காவல்துறையினரிடமிருந்து ஆரம்பிக்கப்படவேண்டும்.

2) ஒவ்வொரு குண்டு வெடிப்பிற்குப் பின்னரும் ஏதாவது ஒரு தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டதாகச் சொல்லப்படுவதுண்டு. ஆனால், இதுவரை அப்படி எந்தவொரு அமைப்பும் இந்தக் குண்டுவெடிப்பில் பொறுப்பேற்கவில்லை. எனினும், இந்திய முஜாஹிதீன் என்ற அமைப்பே காரணம் என்று சில ஊடகங்கள் செய்தி பரப்புகின்றன. ஒரு வாதத்திற்காக இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு பாகிஸ்தானிலிருந்து செயல்படுவதாகக் கொண்டாலும், இதுவரை இந்தக் குண்டுவெடிப்புகளுக்குப் பொறுப்பேற்காமலிருப்பது ஏன்? முன்னர் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளுக்குப் பின்னர் உடனடியாகவே ஏதாவது ஒரு இமெயில் அல்லது கடிதம் காவல்துறைக்குக் கிடைக்கும். தொடர்ந்து, அடுத்த அரை மணி நேரங்களுக்குள்ளேயே ஏதாவது ஒரு இஸ்லாமிய அமைப்பின் பெயர் தொடர்புபடுத்தப்பட்டு முஸ்லிம்கள் கைது செய்யப்படுவர். அவையெல்லாம் காவி தீவிரவாதத்தின் சதிவேலைகள்தான் என்பது உளவுத்துறையினரால் நிரூபிக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்தமுறை அத்தகைய இமெயில், கடிதம் போன்ற துப்புக்கெட்ட துப்புகள் ஏதும் கிடைக்காதது ஏன்?

3) இந்திய முஜாஹிதீன் என்ற அமைப்பின் அலுவலகம் எதுவென்று அறிவிக்கக்கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமீபத்தில் கேரோ செய்தததும் நினைவிருக்கலாம். மத்திய உள்துறை அமைச்சர் அறிவித்ததைப் போன்று ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு இருக்கும் பயங்கரவாத பயிற்சி முகாம்களைப் போன்று இந்திய முஜாஹிதீனுக்கு வெளிப்படையான அலுவலகமோ அல்லது பயிற்சி முகாமோ இருப்பதற்கான எத்தகைய ஆதாரங்களும் அரசுவசம் இல்லாத நிலையில் எங்கிருக்கிறது என்றே அறியப்படாத இந்தியன் முஜாஹிதீன் என்ற பெயரை மீண்டும் மீண்டும் ஊடகங்கள் முன்னிறுத்துவதன் மர்மம் என்ன?

4) குண்டுவெடிப்பு நிகழ்ந்த அதே தினத்தில், காஷ்மீரில் பேரணி நடத்தச்சென்ற தொகாடியாவுக்கு அங்கு அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாக செய்திகள் வெளியானது. முன்னதாக, ஹைதராபாத்தில் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் ஹைதராபாத்தை அயோத்தியாக மாற்றுவோம் என்று மதவெறி வன்முறையைத் தூண்டும்படி இவர் பேசினார். இக்குண்டுவெடிப்புகளுக்கும் மேற்கண்ட சம்பவங்களுக்கும் இடையில் ஏதேனும் தொடர்பிருக்குமா? ஹைதராபாத்தில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்பதை நிறுவுவதற்காக, அந்நேரத்தில் தான் காஷ்மீரில் இருந்ததாக அலிபி தயாரிக்கத்தான் தொகாடியா காஷ்மீர் சென்றாரா என்ற கோணத்திலும் விசாரிக்கப்படணும்தானே?

5) டெல்லியில் கைது செய்யப் பட்டுள்ள இருவர், குண்டு வெடிப்பு நடத்த தில்சுக் நகரை வேவு பார்த்ததாக காவல்துறையினரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக கூறப்படுவது உண்மையாக இருக்கும் பட்சத்தில், குறைந்த பட்சம் சுமார் இரு வருடங்களுக்காவது தில்சுக் நகர் கடுமையான கண்காணிப்புக்கு உட்படுத்தி இருக்க வேண்டாமா? 

6) அதே நேரத்தில், இந்திய முஜாகிதீன் தேர்ந்தெடுத்துள்ளதாக கூறப்பட்ட தில்சுக் நகரில் குண்டு வெடிப்பை நிகழ்த்துவதன் மூலம், அந்தப் பழி இந்தியன் முஜாஹிதீன்மீது விழுவதை, காவி தீவிரவாத அமைப்புகள் உட்படயுள்ள மற்ற தீவிரவாத அமைப்புகள் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டு இருக்கலாமே?

7) பாஜக தலைவர்களில் ஒருவரான சுஷ்மா ஸ்வராஜ் கூறியதுபோல், இக்குண்டுவெடிப்புகளின் பின்னணியில் மதவாத வெறுப்பு பேச்சுகளுக்குத் தொடர்பிருக்க வாய்ப்புகளிருப்பின் ஒவைசியின் பேச்சுகளைவிட தொகாடியாவின் பேச்சுக்கே அதிக வாய்ப்புகள் உள்ளன. எனினும், தொகாடியாவைக் காப்பாற்றும் வகையில் ஒருசார்பாக சுஷ்மா ஸ்வராஜ் பேசுவதையும் கருத்தில் கொண்டு புலனாய்வு விசாரணைகளை முடுக்கி விட்டால், இதன் பின்னணியில் மதவாத சக்திகளின் தொடர்புகள் இருப்பின் தெரியவருமே!

8) சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுகளால் பெரிதும் பலனடையப்போவது அமெரிக்காவே. இந்நிலையில் ஊழல் குற்றச்சாட்டுகளால் பலவீனப்பட்டுள்ள காங்கிரஸுக்கு உதவும் வகையிலும், மக்களவை உறுப்பினர்களின் கவனத்தைத் திசைதிருப்பவும் அந்நிய சக்திகளின் கைங்கர்யம் இருக்கவும் வாய்ப்புள்ளதே!

9) தெலுங்கானா தனிமாநிலம் கோரியும், அதன் தலைநகராக ஹைதராபாத் இருக்கும் என்றும் தெலுங்கானா ஆதரவு கட்சிகள் தெரிவித்துள்ள நிலையில், ஆளும் மத்திய காங்கிரஸ் அரசு தெலுங்கானா பிரச்சனையில் முடிவெடுக்காமல் காலம்தாழ்த்தி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகளின் அணுகுமுறைகளில் நம்பிக்கை இழந்த 'செம்புலிகள்' எனும் அமைப்பு ஆயுத போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில் நிகழ்ந்துள்ள இந்தக் குண்டுவெடிப்புகளில் அவர்களுக்குள்ள தொடர்புகள் குறித்தும் விசாரணைகள் ஏன் திரும்பவில்லை?

10) தமிழக எல்லையோரமுள்ள நெல்லூரில் சமீபத்தில் 60,000 ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் ரகசியமாகக் கூடி, பயிற்சி முகாம் நடத்திய செய்திகள் உள்ளூர் ஊடகங்கள் தவிர வேறு எந்த ஊடங்களிலும் வெளியாகவில்லை. ஹைதராபாத்தை அயோத்தியாக மாற்றுவோம் என்று சங் பரிவாரங்கள் வெளிப்படையாகவே மிரட்டியுள்ள நிலையில், இத்தகைய பயிற்சி முகாம்கள் ஏன் கண்காணிக்கப்படவில்லை?

11) மாலேகான், அஜ்மீர், மக்கா மஸ்ஜித் முதலான அநேக குண்டுவெடிப்புகளில் முதலில் சந்தேகிக்கப்பட்டதுபோல் முஸ்லிம் தீவிரவாத அமைப்புகளுக்குத் தொடர்பில்லை என்றும் அவற்றைத் திட்டமிட்டு நடத்திய காவி இந்துத்துவ தீவிரவாத அமைப்புகளே என்பது நிரூபணமாகியதோடு, ஷிண்டே - ஆர்.எஸ்.எஸ், பாஜக குறித்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களை வெளியிட்ட பின்னரும், பாஜகவின் மிரட்டலுக்குப் பயந்து தனது கருத்துக்காக மன்னிப்பு கோரினார். ஷிண்டேவை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்பதும் பாஜகவின் கோரிக்கையாக இருந்த நிலையில், அவருக்கு நெருக்கடி ஏற்படுத்தும் விதமாக பாஜகவேகூட ஏன் இந்தக் குண்டுவெடிப்புகளை நிகழ்த்திருக்கக்கூடாது?

பெரும்பாலான குண்டுவெடிப்புகளின் பலன்கள் பாஜகவுக்கும், நெருக்கடியிலிருக்கும் ஆளுங்கட்சிக்குமே சாதகமாக இருப்பதால் வழக்கம்போல் ஒருசிலரைக் கைதுசெய்துவிட்டு, கமுக்கமாக அரசின் திட்டங்களை நிறைவேற்றிக்கொள்ளும் யுக்தியாக இந்தக் குண்டுவெடிப்புகளிலும் அதற்கான சாத்தியம் இல்லாமலில்லை என்பதையும் மறுப்பதற்கில்லை.

எது எப்படியிருந்தாலும் இவ்வாறு நடத்தப்படும் குண்டுவெடிப்புகளின் பின்னணி, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்கோ அல்லது இனத்துக்கோ நன்மை பயக்கவேண்டும் என்ற திட்டத்தில் நடத்தப்படுவது இல்லை என்பது மட்டும் உறுதி. நடத்தப்படும் குண்டுவெடிப்புகளால் இழப்பு என்பது அனைத்து சமுதாயத்தையும் சேர்ந்த பொதுமக்களுக்கே! எனவே, இவற்றின் பின்னணியிலுள்ள பயங்கரவாதிகள், சாதாரண பொதுமக்களின் நன்மைக்காக இம்மாபாதக செயலைச் செய்வதில்லை என்பது வெள்ளிடை மலை!

அதே சமயம் இத்தகைய குண்டுவெடிப்புகள் மூலம் மக்கள் மனதில் விதைக்கப்படும் இனப்பிளவினால் பிறக்கும் ஓட்டுகள், விலைவாசி உயர்வினால் நிமிடத்துக்கு நிமிடம் செத்துக்கொண்டிருக்கும் சாதாரண மக்களின் மனதில் தோன்றும் அரசுகளுக்கு எதிரான எதிர்ப்பு உணர்வினை மழுங்கடித்தல்/மறக்கடித்தல், நாட்டைக் காவுகொள்ளும் பயங்கரமிருகமான ஊழலுக்கு எதிரான மக்களின் எண்ணங்களை நீர்த்துப்போக செய்தல் முதலிய எண்ணற்ற நன்மைகள் இந்நாட்டில் அரசியல் பிழைப்பு நடத்தும் கேவலமான அரசியல்வியாதிகளுக்குத்தான் என்பது அசைக்கமுடியாத உண்மை! அதிகாரம், பலம், பணம் என அனைத்தையும் கைவசம் வைத்திருக்கும் பயங்கரவாத ஜந்துக்களாலேயே இத்தகைய திட்டமிட்டச் சதிச் செயல்களை வெற்றிகரமாக நடத்தமுடியுமென்பதும் யோசிப்பவர்களுக்கு நன்கு விளங்கும் விசயம்.

இந்நாட்டில் நீதித்துறை என்ற ஒன்று சரியாக இயங்குமானால், மேற்கண்ட அடிப்படை உண்மையினை மையமாக வைத்து இத்தகைய பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணியிலுள்ள தீய சக்திகளைச் சட்டத்தின் முன்னிலையில் கொண்டுவருதற்கான நீதிபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்பதே இந்நாட்டின் சாதாரண குடிமக்களின் எதிர்பார்ப்பாகும்!

- எழில் பிரகாசம் ( இந்நேரம் )

Friday, February 22, 2013

ஹைதராபாத் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது யார் குண்டுவெடிப்புகள்  தொடர காரணம் என்ன? இதற்க்கு தீர்வேயில்லையா??
 

 ஹைதராபாத் குண்டுவெடிப்பு அரசியல் நாடகமா?

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் இன்று 3 இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் சுமார் 10 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்து மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் ஆந்திரவில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிந்திக்கவும்: குண்டு வெடிப்புகளை நடத்தியது யார் என்று கண்டு பிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. அதே நேரம் குண்டு வெடித்ததும், அதன் கை ஒரு குறிப்பட்ட சமூகத்தை நோக்கி நீள்வது இந்த முறை கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்.

குண்டு வெடித்த உடனேயே சொல்லி வைத்தாற்போல் இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் காசாபின் தூக்குக்கு பதிலடியாக நடத்தப்பட்டது என்று துப்பறிந்து சொல்லி இருப்பது இங்கே கவனிக்கப்பட வேண்டியது. இவரை தொடர்ந்து குஜராத் மோடி, பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் போன்றோரின் உடனடி பரபரப்பு அறிக்கைகளும் நம்மை யோசிக்க வைக்கின்றனர்.

இந்தியாவில் இதுவரை நடந்த தொடர் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்துத்துவா தீவிரவாதிகளே இருந்துள்ளனர் என்பதை தேசிய புலனாய்வுத்துறைகண்டுபிடித்தது.அதனடிப்படையில் ஹிந்துத்துவா பெண் சாமியார் மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முக்கிய பிரமுகர்கள் சிறையில் இருக்கின்றனர். RSS இயக்கம்தான் இந்த குண்டு வெடிப்பபை நடத்தியது என்று கருத்து தெரிவித்த ஷிண்டேயை மன்னிப்பு கேட்க்கும்படி ஹிந்துத்துவா இயக்கங்கள் போர்க்கொடி தூக்கின. அவர்களை சமாதானப்படுத்தவே அப்சல் குரு தூக்கில் இடப்பட்டார்.

அப்சல் குரு தூக்கில் இடப்பட்டதற்கு நாடு முழுவதிலும் உள்ள மனித உரிமை இயக்கங்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பல்வேறு இடங்களில் ஆர்பாட்டங்கள் நடந்துள்ளது. இந்நிலையில் தொடர் குண்டு வெடிப்புகளின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இருந்து செயல்பட்டது என்ற தனது கருத்துக்கு மன்னிப்பு கோரி மிதவாத ஹிந்துத்துவா கட்சியான காங்கிரஸ் தீவிரவாத ஹிந்துதுவாவிடம்மண்டியிட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில்இந்த குண்டு வெடிப்பு நடந்திருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்ப்படுத்துகிறது.

இந்த குண்டு வெடிப்பு யாரையும் சமாதானப்படுத்தவா? எதையாவது மறைக்கவா? அரசியல் நாடகமா? வெளிநாட்டு சூழ்ச்சியா? பொறுத்திருந்து பார்ப்போம். 


முழுமையான விசாரணைக்கு முன்பே இதுபோன்ற பெயர்களைப் பயன்படுத்தி நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் விளைவிக்கலாமா?
 

நன்றி - இனியவன்

"போலியோ இல்லாத உலகம் அமைப்போம்"நாளை "பிப்ரவரி 24" போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்..போலியோ இல்லாத உலகம் அமைப்போம்"நாளை "பிப்ரவரி 24" போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்..


 

நாளை "பிப்ரவரி 24" போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்..

அனைத்து பொதுமக்களும் தங்களின் 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் எந்தவிதமான நோய் வாய்ப்பட்டிருந்தாலும், அதனை கருத்தில் கொள்ளாமல் கண்டிப்பாக அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து வழங்கி போலியோ நோயினை அறவே ஒழித்து "போலியோ இல்லாத உலகம் அமைப்போம்"
நாளை "பிப்ரவரி 24" போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் அனைத்து பொதுமக்களும் தங்களின் 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் எந்தவிதமான நோய் வாய்ப்பட்டிருந்தாலும், அதனை கருத்தில் கொள்ளாமல் கண்டிப்பாக அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து வழங்கி போலியோ நோயினை அறவே ஒழித்து "போலியோ இல்லாத உலகம் அமைப்போம்"

நாளை "பிப்ரவரி 24" போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்

அனைத்து பொதுமக்களும் தங்களின் 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் எந்தவிதமான நோய் வாய்ப்பட்டிருந்தாலும், அதனை கருத்தில் கொள்ளாமல் கண்டிப்பாக அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து வழங்கி போலியோ நோயினை அறவே ஒழித்து

"போலியோ இல்லாத உலகம் அமைப்போம்"

இஸ்லாத்தைத் தழுவிய ஜெயன் செம்ப் (ஆமினா ) ஒரு முன்மாதிரிப் பெண்மணி

.
*****மாஷா அல்லாஹ் முன்மாதிரிப் பெண்மணி *****
  
ஜெயன் செம்ப் (ஆமினா ) 
வயது: 28 



கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இஸ்லாத்தைத் தழுவி தனது பெயரை "ஆமினா'வாக மாற்றிக்கொண்ட ஜெய்ன் செம்ப் பிரித்தானியாவின் மென்செஸ்டர் நகரில் சமூக ஒத்துழைப்பு போலிஸ் அதிகாரியாகக் கடமையாற்றுகிறார்.

கடமையின்போது கூட ஹிஜாப் அணிந்து வீதியில் வலம்வரும் இவர், வெள்ளிக்கிழமைகளில் பள்ளிவாசலுக்கு தொழுகைக்காகச் செல்ல வேண்டும் என்பதற்காக மேலதிக நேரங்களிலும் பணியாற்றுகிறார். 

"டுவிட்டர்' இணையத்தளம் மூலமõக முஸ்லிம்களோடு கருத்துப் பரிமாறல்களில் ஈடுபட்ட போதே தனக்கு இஸ்லாம் அறிமுகமானதாகக் குறிப்பிடும் ஜெய்ன் செம்ப் உள்ளூர் பள்ளிவாசல் ஒன்றின் "டுவிட்டர்' கணக்கை நிர்வகிக்கும் முஹம்மது மன்சூர் என்பவரே இஸ்லாம் பற்றி தனக்கு அதிகம் தெரிந்துகொள்ள உதவியவர் என்றும் குறிப்பிடுகிறார்.

இனி இஸ்லாம் பற்றி ஜெய்ன் சொல்வதைக் கேளுங்கள்.

இஸ்லாம் பெண்களை "சமையலறை அடிமைகளாகவே' வைத்திருக்கிறது என்றே நான் முன்பு எண்ணியிருந்தேன். ஆனால் இப்போதுதான் இஸ்லாம் எந்தளவு தூரம் சகிப்புத் தன்மை உடையது, மற்றவர்களுக்கு மதிப்பளிக்கிறது என்பதை என்னால் உணர முடிகிறது.

எனது கேள்விகளுக்கு விடையளிக்கக் கூடிய வேறு எந்தவொரு சமயத்தையும் என்னால் அந்தத் தருணத்தில் காண முடியவில்லை. இஸ்லாத்தைத் தவிர அதனால்தான் இஸ்லாத்தின் மீதான ஈர்ப்பினால் நான் காதலில் வீழ்ந்துவிட்டேன். நான் இஸ்லாத்தை எனது வாழ்க்கைநெறியாக ஏற்றுக் கெண்டுள்ள போதிலும் எனது குடும்பத்தினரும் சக பணியாளர்களும் என்னை விட்டும் பிரிந்து சென்று விடவில்லை. எனது கணவரும் இரு பிள்ளைகளும் கத்தோலிக்கர்களாகவே இருக்கிறார்கள். அவர்களும் இஸ்லாத்தைத் தழுவவேண்டும் என்று நான் ஒருபோதும் நிர்ப்பந்திக்கப்போவதில்லை.

நான் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து எனது குடும்பத்தினர், உறவினர்கள் சந்தோஷமடைகிறார்கள். நான் ஹிஜாப் அணிந்தே பொலிஸ் கடமையை ஆற்றுகிறேன். இது எனக்கும் என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் ஒரு புது அனுபவம். பொலிஸில் கடமையாற்றும் முஸ்லிம் பெண்கள் கடமையின் போது "ஹிஜாப்' அணிவது குறித்த ஒழுங்கு விதிகள் சிலவற்றை நான் தற்போது தயாரித்துக் கொண்டிருக்கிறேன்.நான் என்னைப் பற்றி வெளிப்படையாகக் கூறிக்கொள்வதன் மூலமாக முஸ்லிம் பெண்கள் பொலிஸில் பணியாற்ற முடியும் என்பதை வெளிப்படுத்த விரும்புகிறேன். இதன் மூலம் இஸ்லாம் தொடர்பான தவறான அபிப்பிராயங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம் என எண்ணுகிறேன்.

நன்றி:- இணையம்
*****மாஷா அல்லாஹ் முன்மாதிரிப் பெண்மணி *****

ஜெயன் செம்ப் (ஆமினா ) 
வயது: 28 



கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இஸ்லாத்தைத் தழுவி தனது பெயரை "ஆமினா'வாக மாற்றிக்கொண்ட ஜெய்ன் செம்ப் பிரித்தானியாவின் மென்செஸ்டர் நகரில் சமூக ஒத்துழைப்பு போலிஸ் அதிகாரியாகக் கடமையாற்றுகிறார்.

கடமையின்போது கூட ஹிஜாப் அணிந்து வீதியில் வலம்வரும் இவர், வெள்ளிக்கிழமைகளில் பள்ளிவாசலுக்கு தொழுகைக்காகச் செல்ல வேண்டும் என்பதற்காக மேலதிக நேரங்களிலும் பணியாற்றுகிறார். 

"டுவிட்டர்' இணையத்தளம் மூலமõக முஸ்லிம்களோடு கருத்துப் பரிமாறல்களில் ஈடுபட்ட போதே தனக்கு இஸ்லாம் அறிமுகமானதாகக் குறிப்பிடும் ஜெய்ன் செம்ப் உள்ளூர் பள்ளிவாசல் ஒன்றின் "டுவிட்டர்' கணக்கை நிர்வகிக்கும் முஹம்மது மன்சூர் என்பவரே இஸ்லாம் பற்றி தனக்கு அதிகம் தெரிந்துகொள்ள உதவியவர் என்றும் குறிப்பிடுகிறார்.

இனி இஸ்லாம் பற்றி ஜெய்ன் சொல்வதைக் கேளுங்கள்.

இஸ்லாம் பெண்களை "சமையலறை அடிமைகளாகவே' வைத்திருக்கிறது என்றே நான் முன்பு எண்ணியிருந்தேன். ஆனால் இப்போதுதான் இஸ்லாம் எந்தளவு தூரம் சகிப்புத் தன்மை உடையது, மற்றவர்களுக்கு மதிப்பளிக்கிறது என்பதை என்னால் உணர முடிகிறது.

எனது கேள்விகளுக்கு விடையளிக்கக் கூடிய வேறு எந்தவொரு சமயத்தையும் என்னால் அந்தத் தருணத்தில் காண முடியவில்லை. இஸ்லாத்தைத் தவிர அதனால்தான் இஸ்லாத்தின் மீதான ஈர்ப்பினால் நான் காதலில் வீழ்ந்துவிட்டேன். நான் இஸ்லாத்தை எனது வாழ்க்கைநெறியாக ஏற்றுக் கெண்டுள்ள போதிலும் எனது குடும்பத்தினரும் சக பணியாளர்களும் என்னை விட்டும் பிரிந்து சென்று விடவில்லை. எனது கணவரும் இரு பிள்ளைகளும் கத்தோலிக்கர்களாகவே இருக்கிறார்கள். அவர்களும் இஸ்லாத்தைத் தழுவவேண்டும் என்று நான் ஒருபோதும் நிர்ப்பந்திக்கப்போவதில்லை.

நான் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து எனது குடும்பத்தினர், உறவினர்கள் சந்தோஷமடைகிறார்கள். நான் ஹிஜாப் அணிந்தே பொலிஸ் கடமையை ஆற்றுகிறேன். இது எனக்கும் என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் ஒரு புது அனுபவம். பொலிஸில் கடமையாற்றும் முஸ்லிம் பெண்கள் கடமையின் போது "ஹிஜாப்' அணிவது குறித்த ஒழுங்கு விதிகள் சிலவற்றை நான் தற்போது தயாரித்துக் கொண்டிருக்கிறேன்.நான் என்னைப் பற்றி வெளிப்படையாகக் கூறிக்கொள்வதன் மூலமாக முஸ்லிம் பெண்கள் பொலிஸில் பணியாற்ற முடியும் என்பதை வெளிப்படுத்த விரும்புகிறேன். இதன் மூலம் இஸ்லாம் தொடர்பான தவறான அபிப்பிராயங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம் என எண்ணுகிறேன்.

நன்றி:- இணையம்

இடஒதுக்கீடுக்கு எதிராக ஏன்?அவதூறு பிரச்சாரம் என இப்போது புரிகிறதா ?

.
இதுதான் உண்மை.! அறிந்து கொள்ளுங்கள்.!!
அறியாதவர்களுக்கு அறிய செய்யுங்கள்..!!!

ஆளுனர்கள் 30 பேர். அதில் பிராமணர்கள் 13 பேர்!
உச்சநீதிமன்ற நீதிபதிகள் 16 பேர். அதில் பிராமணர்கள் 9 பேர்!
உயர்நீதிமன்ற நீதிபதிகள் 330 பேர். அதில் பிராமணர்கள் 166 பேர்!
வெளிநாட்டு தூதர்கள் 140 பேர். அதில் பிராமணர்கள் 58 பேர்!
பல்கலைகழக துணைவேந்தர்கள் 98 பேர். அதில் பிராமணர்கள் 50 பேர்!
மாவட்ட நீதிபதிகள் 438 பேர். அதில் பிராமணர்கள் 250 பேர்!
கலெக்டர் ,ஐ.ஏ .எஸ்.அதிகாரிகள் 3300 பேர்.
அதில் பிராமணர்கள் 2376 பேர்!
பாராளுமன்ற உறுப்பினர்கள் 534 பேர். அதில் பிராமணர்கள் 190 பேர்!
ராஜ்யசபா உறுப்பினர்கள் 244 பேர். அதில் பிராமணர்கள் 89 பேர்!

-குஷ்வந்த் சிங் (சண்டே 23-29 டிசம்பர் இதழ் )

மொத்த மக்கள்தொகையில் வெறும் மூன்று சதவீதம் மட்டுமே இருக்கும் இவர்கள் இடஒதுக்கீடுக்கு எதிராக ஏன் கிளர்ந்தெழுந்து பிறரை தூண்டி விடுகின்றனர் ? இடஒதுக்கீடுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்கின்றனர் 
என இப்போது புரிகிறதா ?
 
இதுதான் உண்மை.! அறிந்து கொள்ளுங்கள்.!!
அறியாதவர்களுக்கு அறிய செய்யுங்கள்..!!!

ஆளுனர்கள் 30 பேர். அதில் பிராமணர்கள் 13 பேர்!
உச்சநீதிமன்ற நீதிபதிகள் 16 பேர். அதில் பிராமணர்கள் 9 பேர்!
உயர்நீதிமன்ற நீதிபதிகள் 330 பேர். அதில் பிராமணர்கள் 166 பேர்!
வெளிநாட்டு தூதர்கள் 140 பேர். அதில் பிராமணர்கள் 58 பேர்!
பல்கலைகழக துணைவேந்தர்கள் 98 பேர். அதில் பிராமணர்கள் 50 பேர்!
மாவட்ட நீதிபதிகள் 438 பேர். அதில் பிராமணர்கள் 250 பேர்!
கலெக்டர் ,ஐ.ஏ .எஸ்.அதிகாரிகள் 3300 பேர்.
அதில் பிராமணர்கள் 2376 பேர்!
பாராளுமன்ற உறுப்பினர்கள் 534 பேர். அதில் பிராமணர்கள் 190 பேர்!
ராஜ்யசபா உறுப்பினர்கள் 244 பேர். அதில் பிராமணர்கள் 89 பேர்!

-குஷ்வந்த் சிங் (சண்டே 23-29 டிசம்பர் இதழ் )

மொத்த மக்கள்தொகையில் வெறும் மூன்று சதவீதம் மட்டுமே இருக்கும் இவர்கள் இடஒதுக்கீடுக்கு எதிராக ஏன் கிளர்ந்தெழுந்து பிறரை தூண்டி விடுகின்றனர் ? இடஒதுக்கீடுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்கின்றனர் 
என இப்போது புரிகிறதா ?

அசத்தியம் நிரூபணம்

 
 
சத்திய சொரூபம்..விஸ்வரூபம்
அசத்தியம் நிரூபணம் தொடர் 18 ன் ஆதாரங்கள் 

1.இருவர் கைது செய்யப்பட்டதை உறுதி செய்யும், ஜார்ஜ் வஷ்ங்டன் பாலத்தில் வெடிகுண்டு வேன் நின்றதையும் உறுதி செய்யும் பெண்டகன் ...

http://www.youtube.com/watch?v=2CHq6JocvDM

2.இவர்கள் குற்றவாளிகள் என FBI நிருபர்களுக்கு கொடுத்த பேட்டியின் போது அந்த நிருபகள் கூட்டத்தில் கலந்து கொண்ட முக்கிய நிருபர்களின் பேட்டிகள்....

http://www.youtube.com/watch?v=98u5K448WQc


3.குண்டு வைத்தக் குள்ள நரிகள் ஒரு தொலைக் காட்சிக்கு 2001 நவம்பர் மாதம் கொடுத்த பேட்டியில் நாங்கள் படம் எடுப்பதற்க்காத் தான் இஸ்ரேலில் இருந்து வந்தோம் எனக் கூறியதை கீழே உள்ள லிங்கில் பார்க்கலாம்

http://www.youtube.com/watch?v=tRfhUezbKLw

ஆதாரங்கள் 1) லைட்டைக் கொளித்தி கட்டடம் எரிவதை அடையாளம் ஆனந்தப்பட்ட சிவன் குர்ஸ்பெர்க்கை விடியோ எடுத்த அமெரிக்கர் FBIக்கு ஒப்படைத்தை குளோஸ் அப் சார்ட் செய்து FBI வெளியிட்ட புகைப்படம்.
 
 
சத்திய சொரூபம்..விஸ்வரூபம்
அசத்தியம் நிரூபணம் 

1.இருவர் கைது செய்யப்பட்டதை உறுதி செய்யும், ஜார்ஜ் வஷ்ங்டன் பாலத்தில் வெடிகுண்டு வேன் நின்றதையும் உறுதி செய்யும் பெண்டகன் ...

http://www.youtube.com/watch?v=2CHq6JocvDM

2.இவர்கள் குற்றவாளிகள் என FBI நிருபர்களுக்கு கொடுத்த பேட்டியின் போது அந்த நிருபகள் கூட்டத்தில் கலந்து கொண்ட முக்கிய நிருபர்களின் பேட்டிகள்....

http://www.youtube.com/watch?v=98u5K448WQc


3.குண்டு வைத்தக் குள்ள நரிகள் ஒரு தொலைக் காட்சிக்கு 2001 நவம்பர் மாதம் கொடுத்த பேட்டியில் நாங்கள் படம் எடுப்பதற்க்காத் தான் இஸ்ரேலில் இருந்து வந்தோம் எனக் கூறியதை கீழே உள்ள லிங்கில் பார்க்கலாம்

http://www.youtube.com/watch?v=tRfhUezbKLw

ஆதாரங்கள் 1) லைட்டைக் கொளித்தி கட்டடம் எரிவதை அடையாளம் ஆனந்தப்பட்ட சிவன் குர்ஸ்பெர்க்கை விடியோ எடுத்த அமெரிக்கர் FBIக்கு ஒப்படைத்தை குளோஸ் அப் சார்ட் செய்து FBI வெளியிட்ட புகைப்படம்.

பகிரங்க சவால் .... பல ஆண்டுகளைக் கடந்த பிறகும் முறியடிக்க முடியாத சவால்

 பகிரங்க சவால் ....
 
பகிரங்க சவால் ....
இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை (யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.2:23.

இந்த சவால் 1400 ஆண்டுகளைக் கடந்த பின்பும் இதுவரை எவராலும் முறியடிக்க முடியவில்லை. அரபு மொழியை தாய் மொழியாகக் கொண்ட (Coptic Christian) கிறிஸ்தவர்கள் எகிப்தில் மட்டும் 6 மில்லியன் இருக்கின்றனர். அதேபோன்று லெபனான், சிறியா போன்ற இன்னும் பல அரபு நாடுகளிலும் அரபு மொழி பேசக் கூடிய கிறிஸ்தவர்கள் இருக்கின்றனர். 

அப்படியிருந்தும் அவர்களால் அல்குர்ஆனின் சவாலை முறியடிக்க முடியவில்லை என்பது அல்குர்ஆனின் இறைத் தன்மையையும், அதன் உண்மைத் தன்மையையும் உணர்த்துகின்றது!

உங்களால் இப்படி ஒரு அத்தியாத்தை கொண்டு வர முடியவில்லை என்றால் ஏக இறைவனை நிராகரிப்பவர்களே நரக நெருப்பிற்கு அஞ்சி கொள்ளுங்கள்.

உங்களால் (இதைச்) செய்யவே முடியாது. நீங்கள் செய்யாவிட்டால் (நரக) நெருப்புக்கு அஞ்சுங்கள்! நிராகரிப்பாளர்களும், கற்களுமே அதன் எரிபொருட்களாகும். (ஏக இறைவனை) மறுப்போருக்காகவே அது தயாரிக்கப்பட்டுள்ளது.' – 2:-24.
 
 
பகிரங்க சவால் ....
இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை (யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.2:23.

இந்த சவால் 1400 ஆண்டுகளைக் கடந்த பின்பும் இதுவரை எவராலும் முறியடிக்க முடியவில்லை. அரபு மொழியை தாய் மொழியாகக் கொண்ட (Coptic Christian) கிறிஸ்தவர்கள் எகிப்தில் மட்டும் 6 மில்லியன் இருக்கின்றனர். அதேபோன்று லெபனான், சிறியா போன்ற இன்னும் பல அரபு நாடுகளிலும் அரபு மொழி பேசக் கூடிய கிறிஸ்தவர்கள் இருக்கின்றனர். 

அப்படியிருந்தும் அவர்களால் அல்குர்ஆனின் சவாலை முறியடிக்க முடியவில்லை என்பது அல்குர்ஆனின் இறைத் தன்மையையும், அதன் உண்மைத் தன்மையையும் உணர்த்துகின்றது!

உங்களால் இப்படி ஒரு அத்தியாத்தை கொண்டு வர முடியவில்லை என்றால் ஏக இறைவனை நிராகரிப்பவர்களே நரக நெருப்பிற்கு அஞ்சி கொள்ளுங்கள்.

உங்களால் (இதைச்) செய்யவே முடியாது. நீங்கள் செய்யாவிட்டால் (நரக) நெருப்புக்கு அஞ்சுங்கள்! நிராகரிப்பாளர்களும், கற்களுமே அதன் எரிபொருட்களாகும். (ஏக இறைவனை) மறுப்போருக்காகவே அது தயாரிக்கப்பட்டுள்ளது.' – 2:-24.
 — with Thamim Ansar and 95 others.