Monday, February 11, 2013

காதலனோடு ஓடும் பெண்களுக்கு தூத்துக்குடிப் பெண் கற்பழிப்பு வழக்கு ஒரு பாடம்


தூத்துக்குடிப் பெண் கற்பழிப்பு வழக்கு - நண்பர்களோடு சீரழித்த காதலன் சிக்கினான்..........!!


தூத்துக்குடியைச் சேர்ந்த 18 வயதுப் பெண்ணை அவரது காதலன் ஏமாற்றி கன்னியாகுமரிக்கு அழைத்துச் சென்று அங்கு ஹோட்டலில் தங்க வைத்து மயக்கமருந்து கொடுத்து, பாலியல் பலாத்காரம் செய்த பயங்கர சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியான அப்பெண்ணின் காதலன் ராஜேஷ் கைது செய்யப்பட்டுள்ளான்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் லட்சுமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரை ராஜேஷ் என்ற வாலிபன் காதலித்துள்ளான். இந்த நிலையில் 4 நாட்களுக்கு முன்பு மோசடியாக லட்சுமியை கன்னியாகுமரிக்கு அழைத்துச் சென்றுள்ளான். அங்கு ஹோட்டலில் இருவரும் தங்கியுள்ளனர். அங்கு லட்சுமிக்கு மயக்க மாத்திரை கொடுத்துள்ளான் ராஜேஷ்.

பின்னர் தனது நண்பர்களை வரவழைத்துள்ளான். 7க்கும் மேற்பட்டோர் அங்கு கூடியுள்ளனர். அவர்கள் அனைவரும் 3 நாட்களாக மாறி மாறி லட்சுமியை சீரழித்துள்ளனர். மயக்க நிலையிலேயே பெரும்பாலும் அவர்கள் லட்சுமியை வைத்திருந்ததாக தெரிகிறது.

அதன் பின்னர் லட்சுமியை காரில் ஏற்றி நேற்று முன்தினம் இரவு கேரள மாநிலம் கொட்டாரக்காரா என்ற இடத்தில் விட்டு விட்டுப் போய் விட்டனர். அரை மயக்க நிலையில் கிடந்த லட்சுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்தனர். அரசு மருத்துவமனையில் தொடர்ந்து மயக்க நிலையில் லட்சுமி சிகிச்சை பெற்று வருகிறார்.

லட்சுமிக்கு தாய் தந்தை இல்லை என்று கூறப்படுகிறது. அவரது அக்கா, திருவனந்தபுரத்தில் ஹாஸ்டலில் தங்கி படித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கொட்டாரக்கரா போலீஸாரின் தீவிர தேடுதல் வேட்டையில் ராஜேஷ் தற்போது சிக்கியுள்ளான்.அவனிடம் நடத்தப்படும் விசாரணைக்குப் பின்னரே நடந்தது என்ன என்பது தெரிய வரும்.

No comments:

Post a Comment