Saturday, February 23, 2013

போலியோ சொட்டுமருந்து நாம் செய்யும் தவறுகள்

 போலியோ சொட்டுமருந்து நாம் செய்யும் தவறுகள்




ஒருமுறை எனது நண்பர் ஒருவர் தனது குழந்தைக்கு போலியோ மருந்து கொடுக்க அழைத்து சென்றிருக்கிறார் . அங்கு வரிசையில் நிற்கும்பொழுது அழுகின்றக் குழந்தைகளை சமாதானம் செய்வதற்காக ஒவ்வொருவரும் தங்களின் குழந்தைகளுக்கு சிலர் தாய் பாலும் பலர் புட்டிப் பாலும் கொடுத்திருக்கிறார்கள் . 

அப்பொழுது இவரின் குழந்தையும் அழுகத் தொடங்கவே இவரும் வேறு வழியின்றி அருகில் இருந்த டீ கடையொன்றில் பால்வாங்கி தனது குழந்தைக்கு கொடுத்து அதன் அழுகையை நிறுத்தியதாகவும் . ஒருவேளை அந்த டீ கடை மட்டும் அங்கு இல்லாமல் இருந்திருந்தால் தனது நிலைமை மிகவும் மோசமாகி இருக்கும் என்று அவர் போலியோ சொட்டு மருந்து கொடுக்க சென்ற அனுபவத்தை சொல்லிகொண்டிருந்தார். 

அப்பொழுது நான் அவரிடம் கேட்டேன் நீங்கள் உங்கள் குழந்தைக்கு பால் கொடுத்ததில் இருந்து எவளவு நேரம் கழித்து போலியோ சொட்டு மருந்து கொடுத்தீர்கள் என்று அதற்கு அவர் கொடுத்தப் பதில் எனது கோபத்தை அதிகப்படுத்தியது . பால் கொடுத்து ஐந்து நிமிடத்தில் சொட்டுமருந்து கொடுத்துவிட்டார்கள் உடனே வீடு திரும்பிவிட்டேன் என்று கூறினார் . 

நண்பர்களே இதில் என்ன தவறு இருக்கிறது என்று பலருக்கு புரியாமல் இருக்கலாம் சொல்கிறேன் . எப்பொழுதெல்லாம் நாம் போலியோ சொட்டு மருந்து கொடுக்க செல்கிறோமோ அப்பொழுது குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கு முன்பும், பின்பும் தாய் பால் என்றால் இரண்டு மணிநேரத்திற்கும் , புட்டிப்பால் என்றால் ஒருமணிநேரத்திற்கும் கொடுத்தல் கூடாது .

ஒருவேளை நாம் அவ்வாறு நாம் பால் கொடுக்க நேர்ந்தால் அரசு கொடுக்கும் போலியோ சொட்டு மருந்தின் சக்தியை முற்றிலும் தாய் பால் செயலிழக்க செய்துவிடும் . இதுவரை இந்த தகவல் தங்களின் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க அழைத்து செல்லும் எத்தனை பெற்றோர்களுக்கு தெரிந்திருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை..?

அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக போலியோ சொட்டுமருந்து கொடுக்கும் இடங்களில் இந்த தகவலை தெளிவுபடுத்துங்கள்...!

நன்றி : Ilayaraja Dentist.


No comments:

Post a Comment