Saturday, June 4, 2022


நகம் கடிப்பதால் உயிருக்கு ஆபத்து என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆம்! நாம் நகம் கடிப்பதால், உடலில் பாக்டீரியா தொற்று கட்டுப்படுத்த இயலாமல் அதிகரிக்கும். முறையான உடல் மற்றும் மனநல சிகிச்சை அளிக்காமல் இருந்தால் உங்களுக்கு செப்சிஸ் தொற்று, செப்டிக் ஷாக் என்னும் உயிருக்கு ஆபத்தான நிலையை உருவாகும் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். இந்தப் பழக்கத்தை 'ஆனிசோபேஜியா’ 'Onychophagia’ எனக் குறிப்பிடுகிறது ஆங்கில மருத்துவம்.

பாதிப்புகள் :-
 
1) பற்களால் நகங்களை கடிக்கும் போது, அது பற்களின் எனாமலை பாதித்து, பற்களை வலிமையிழக்கச் செய்துவிடும் தெரியுமா?.

2) நகம் கடிக்கும்போது, அதிலுள்ள அழுக்குகள் வாய் வழியாக உடலுக்குள் சென்று நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் தெரியுமா?.

3) தொடர்ந்து நகத்தை கடித்துக்கொண்டே இருப்பதால் நகக்கண்ணில் நகம் வளருவதற்கு உதவும் திசுக்கள் அழிந்துவிடும் என்பது தெரியுமா?.

4) நகம் கடித்து அந்த இடத்தில் ஏற்படும் உணர்வு காரணமாக சிறு விஷயமாக இருந்தாலும் கோபப்பட்டு ரத்த சுழட்சி அதிகமாகி BP நோய் விரைவாக வந்துவிடும் என்பது உங்களுக்கு தெரியுமா?

 



இந்தப் பழக்கத்தைக் கைவிட:-
முதல் படி, நீங்கள் விழிப்போடு இருப்பது. இப்படியான ஒரு பழக்கம் நம் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பது பற்றிய விழிப்புணர்வோடு இருந்தால், அதைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தவிர்க்க முடியும்.
 
கவனம்:-
ஒரு செயலில் ஈடுபடும்போது அதை அதிக கவனத்தோடு செய்யவேண்டியது அவசியம். அதே நேரத்தில், தன்னிலை மறக்கும் அளவுக்கு எந்தச் செயலிலும் ஈடுபட வேண்டாம்.

சுத்தம்:-
நகங்களை அவ்வப்போது வெட்டி, கடிக்க முடியாத அளவுக்கு சிறியதாக, அழுக்கு சேராமல் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.

வெறுப்பு:-
கசப்பான சுவையுள்ள ஏதாவதொன்றை நகத்தில் தேய்த்துக்கொள்ளளுங்கள். இதனால், நகம் கடிக்கும்போதெல்லாம் கசப்புணர்ச்சி உண்டாகி அந்தப் பிரச்னையிலிருந்து வெளிவர உதவும்.

பராமரிப்பு :-
வாரத்துக்கு ஒருமுறை நகப் பராமரிப்பு 'மேனிக்யூர்' (Manicure) செய்துகொள்ளலாம். முடியாதவர்கள், குறிப்பிட்ட காலத்துக்கு விரல்களில் பேண்டேஜ் மாதிரி எதையாவது சுற்றிக்கொள்ளலாம்.

மறக்கடிக்க :-
பதற்றமான சூழலில் சிலரால் நகத்தை கடிக்காமல் இருக்கவே முடியாது. அதுபோன்ற நேரத்தில் வேறொரு நல்ல பழக்கத்தை பழக்கப்படுத்திக்கொள்ளலாம். உதாரணமாக, ஸ்ட்ரெஸ் பால் உபயோகிப்பது, கை கழுவுவது, வாய் கொப்பளிப்பது, சாப்பிடுவது போன்றவை. கை மற்றும் வாய் தொடர்பான பயிற்சிகளாக இவை இருக்க வேண்டும்.

சூழல் கவனம்:-
கோபம், வருத்தம், ஏமாற்றம், எதிர்பார்ப்பு... என எந்தச் சூழல் உங்களை நகம் கடிக்க அதிகம் தூண்டுகிறது என கவனியுங்கள். அந்தச் சமயத்தில் அதிக எச்சரிக்கையோடு செயல்படுங்கள்.

உணவு :-
உடலுக்கு  கால்சியம் தரக்கூடிய அனைத்து உணவு வகைகளையும் எடுத்துக் கொள்ளலாம். இதுவும் இந்த பழக்கத்திலிருந்து விடுபட உதவும்

பெற்றோர்களின் பங்கு:-
# மன அழுத்தத்தையும், இறுக்கமான சூழலையும் உணரும் குழந்தைகள் இந்தப் பிரச்னைக்கு ஆளாகக்கூடும்.
# பெற்றோர் அவர்களோடு அதிக நேரம் செலவிட்டு, நல்ல பழக்கங்களையும், நகம் கடிப்பதால் ஏற்படும் தீமைகளையும் சொல்லிக் கொடுக்கலாம்.
# நகத்தைக் கடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றினால், அதற்கு மாற்றாக வேறென்னவெல்லாம் செய்யலாம் என்பதையும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கலாம்.
# அவர்களை தினமும் மாலை நேரத்தில் வெளியில் விளையாட அனுமதிக்கவும்.

அப்போதும் முடியவில்லையென்றால் மருத்துவரை சந்தியுங்கள்:-
ஒருவரின் நகத்தைவைத்தே அவருக்கு உடலில் என்ன பிரச்னை இருக்கிறது என்று சொல்லிவிடலாம். அப்படிப்பட்ட நகத்தைச் சரியாகப் பராமரிக்க வேண்டியது அவசியம்! என்ன செய்தும் நகம் கடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட முடியவில்லை என்பவர்கள், தயங்காமல் மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.’

"துணியைக்கொண்டு பற்களை சுத்தம் செய்வதையும், பற்களைக்கொண்டு நகத்தை சுத்தம் செய்வதையும் நபியவர்கள் வெறுத்தார்கள்" என்ற நபி மொழி யை இங்கு நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.

Sunday, August 3, 2014

முஸ்லிம்களின் நிலை குறித்து எழுத்தாளர் மாரி செல்வராஜ் ஆனந்த விகடனில் எழுதிய அருமையான கட்டுரை!
முஸ்லிம்களின் நிலை குறித்து எழுத்தாளர் மாரி செல்வராஜ் ஆனந்த விகடனில் எழுதிய அருமையான கட்டுரை!

Read more: http://www.adiraipirai.in/2014/08/blog-post_2.html#ixzz3AI3lZZnJஆனந்த விகடனில் மாரி செல்வராஜ் எழுதிவரும் 'மறக்கவே நினைக்கிறேன்' தொடரில் இந்த வாரம், இஸ்லாமியர்கள் குறித்த வலி மிகுந்த பதிவு வெளியாகியுள்ளது.

மாரி செல்வராஜ் இப்படி தொடங்குகிறார்: 'கொஞ்ச நாட்களுக்கு முன் கிறிஸ்துவப் பாதிரியார் ஒருவர் என் இயக்குனரைப் பார்ப்பதற்காக எங்கள் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அவர் ஒரு தொடக்கப் பள்ளிக்குச் சென்று 100 குழந்தைகளிடம் க்ரேயோன் பென்சில்களைக் கொடுத்து அவரவர் விருப்பப்படி தீவிரவாதிகளை வரையச் சொன்னாராம். அப்போது அந்தக் குழந்தைகள் வரைந்த ஓவியங்கள் இவை என்று சொல்லி ஒரு ஆல்பத்தை எங்களிடம் நீட்டினார். அதைப் பார்த்ததும் அதிர்ச்சி. 100 குழந்தைகளும் 100 தீவிரவாதிகளை வரைந்திருந்தாலும், அந்த 100 தீவிரவாதிகளிடமும் சொல்லிவைத்து வரைந்ததுபோலக் காணப்பட்ட ஒற்றுமைகள் தான் அதிர்ச்சிக்குக் காரணம். ஆம், அத்தனை தீவிரவாதிகளும் இஸ்லாமியர்கள் அணியும் குல்லா அணிந்திருந்தார்கள்; தாடி வளர்த்திருந்தார்கள். சில தீவிரவாதிகள் முழங்கால் வரை வேட்டி கட்டியவர்களாகக் கூட இருந்தார்கள்.'

இஸ்லாமிய சமூகம் சந்திக்கும் நெருக்கடிகள், இஸ்லாமியர்களைப் பற்றிய பொதுச்சமூகத்தின் பார்வைகள், இஸ்லாமியர்களின் மனநிலைகள் என விரியும் கட்டுரையின் ஒவ்வொரு வரியையும் படிக்கும்போது இதயம் கனக்கிறது.

குழந்தைகள் வரைந்த 100 தீவிரவாதிகளும் இஸ்லாமியராகவே இருந்தது கண்டு, தான் பெரும் அதிர்ச்சிக்குள்ளானதகாக தோழர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இதைப் படிக்கும் எந்த இஸ்லாமியரும் துளிகூட அதிர்ச்சியடைய மாட்டார்கள். ஏனெனில் அவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவிலும் இதை அனுபவப்பூர்வமாக தினம்தினம் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்திய விடுதலைக்காக வீர மரணமடைந்த திப்பு சுல்தானின் உண்மை வரலாற்றை, 'கற்பனைக் கதை'
என்ற முன்னறிவிப்புடன் தேசிய ஊடகமே ஒளிபரப்பினால் வேறு என்ன நடக்கும்?

ரோஜா முதல் விஸ்வரூபம் வரை திரையில் விரியும் காட்சிகளிலெல்லாம் முஸ்லிம்களை கொத்திக் குதறினால் வேறு என்ன நடக்கும்?

எங்கே குண்டுவெடிப்பு நடந்தாலும் காவல்துறையின் விசாரணைக்கு முன்னரே, ஊடகங்கள் முந்திக்கொண்டு இந்தியன் முஜாஹிதீனை நோக்கி கைநீட்டினால் வேறு என்ன நடக்கும்?

அதிரை தமீம் அன்சாரி, பயங்கரவாதி என்று சொல்லி கைது செய்யப்பட்டபோது முதல்பக்க செய்தி வெளியிட்டவர்கள், அவர் குற்றமற்றவராக விடுதலையானதை கடைசிப் பக்கத்தின் கடைசி வரியில்கூட சொல்லாமல் விட்டால் வேறு என்ன நடக்கும்?

விஸ்வரூபத்துக்கு எதிரான போராட்டங்களை போட்டி போட்டுக் கொண்டு படம்பிடித்து பரபரப்பை பற்ற்வைத்தவர்கள், அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலைக்கான போராட்டங்களை இருட்டடிப்பு செய்தால் வேறு என்ன நடக்கும்?

முஸ்லிம்களுக்கு எதிரான ஊடக பயங்கரவாதம் தொடரும் வரை இதுதான் நடக்கும்.

சிறுபான்மை முஸ்லிம்களைப் பற்றிய நல்ல பதிவைச் செய்யும் மாரி செல்வராஜ் போன்ற மாந்தநேயர்கள், ஊடகங்களில் சிறுபான்மையினராக இருக்கும் வரை இதுதான் நடக்கும்.

மாரி செல்வராஜுக்கும், விகடனுக்கும் இதய நன்றி!

Read more: http://www.adiraipirai.in/2014/08/blog-post_2.html#ixzz3AI3SBGtm

Sunday, May 19, 2013

நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்


  •                         நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்



    1. இளமையில் கல்வி கொடுங்கள்
    2. கோபமான நிலையில் குழந்தைகளுக்கு உத்தரவிடாதீர்கள்
    3. பெற்றோர்கள் இணைந்து முடிவெடுத்துச் செயல்படுங்கள்
    4. உறுதியாக இருத்தல்
    5. குழந்தைகளிடம் பொய் பேசாதீர்கள்
    6. அடம் பிடித்து அழுகின்றதா.., விட்டு விடுங்கள்
    7. தவறிழைத்தால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுங்கள்
    8. மன்னித்து விடுங்கள்
    10. தொலைக்காட்சியில் வரும் கற்ப்பனை கதாபாத்திரங்களையும் சாகசம் செய்யும் தொடர்களையும் குழந்தை பார்ப்பதைதவிர்த்து விடுங்கள் 
    11. நல்லொழுக்கங்களைக் கற்றுக் கொடுங்கள்
    12. கீழ்ப்படிதல்

    1. இளமையில் கல்வி கொடுங்கள்

    இந்த வயதில் அதற்கு என்ன தெரியும் என்று அங்கலாய்ப்பவர்களைக் காண முடியும், ஆனால் குழந்தைகளில் இளமைப் பருவம் தான் அவைகள் கற்றுக் கொள்ளக் கூடிய நல்லதொரு பருவமாகும், அவர்களை நல்லதொரு வழித்தடத்தின் கீழ் பயணிப்பது எப்படி என்பதை பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டிய தருணம், குழந்தைகளின் ஆரம்ப நாட்களாகும். ஒருமுறை அவர்களிடையே நல்லதொரு பண்பாட்டை பழக்க வழக்கங்களை ஏற்படுத்தி விட்டால், அது அவர்களது வாழ்நாள் முழுவதும் தொடரும், அதிலிருந்து அவர்கள் மாற மாட்டார்கள்.

    2. கோபமான நிலையில் குழந்தைகளுக்கு உத்தரவிடாதீர்கள்

  • 7. தவறிழைத்தால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுங்கள்

    தவறிழைக்கக் கூடியது மனிதனின் சுபாவம். தவறிழைப்பவர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளையுமாகும், அது சக மனிதனுக்குச் செய்யக் கூடிய தவறாக இருப்பினும் சரி.., அல்லது இறைவனுக்கு மாறு செய்யக் கூடிய பாவங்களாக இருந்தாலும் சரியே..! மன்னிப்புக் கோர வேண்டும் என்பதை குழந்தைகள் கற்றுக் கொள்ளும் பொழுது, தவறிழைக்க நேரும் பொழுது மன்னிப்புக் கோர வேண்டும் என்ற உணர்வு அவர்களிடம் மிகுந்து காணப்படும்.

    8. மன்னித்து விடுங்கள்

    குழந்தை தவறு செய்து விட்டது, அதனை உணர்ந்து தனது தவறுக்காக வருத்தம் தெரிவிக்கின்றது, உடனே அதனை மன்னித்து மறந்து விடுங்கள், மன்னித்து விட்டேன் என்பதை நேரடியாகவே குழந்தையிடம் சொல்லுங்கள், நீங்கள் செய்யும் தவறுகளை அல்லாஹ் மன்னிப்பதில்லையா.., அதனைப் போல தவறிழைத்த குழந்தை மன்னிப்புக் கேட்பதே அது சரியான பாதையில் பயணிக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

    அல்லாஹ் மன்னிப்போனாக இருக்கின்றான், மன்னிப்பை விரும்புகின்றான்.., எனவே நீங்களும் குழந்தை செய்யும் தவறுகளுக்காக உடனே பிரம்பைத் தூக்காதீர்கள். அவர்கள் மன்னிப்புக் கோரினால் மன்னித்து விடுங்கள், இன்னும் நான் உன்னை மிகவும் நேசிக்கின்றேன் என்பதை அடிக்கடி அவர்களிடம் கூறி வாருங்கள், அது உங்களது உள்ளத்தில் இருந்து வர வேண்டும். இதன் காரணமாக பெற்றோர் பிள்ளைகள் உறவு மேலும் வலுவடையும்.

    9. உங்களது தவறுக்கும் மன்னிப்புக் கோருங்கள்

    நீங்கள் தவறிழைத்து விட்டீர்கள், நான் பெற்றவன், பிள்ளைகளிடம் எப்படி மன்னிப்புக் கேட்பது என்று இறுமாப்புக் கொள்ளாதீர்கள். தவறிழைக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் சரியே.., நம்முடைய குழந்தையாக இருந்தாலும் சரியே.., மன்னிப்புக் கோருங்கள், அதுவே நீதிக்குச் சாட்சியம் பகர்வதாகும். அவ்வாறு நீங்கள் மன்னிப்புக்கோரவில்லை என்றால், அதுவே அடக்குமுறையின் ஆரம்பமாகும்.

    10. தொலைக்காட்சியில் வரும் கற்ப்பனை கதாபாத்திரங்களையும் சாகசம் செய்யும் தொடர்களையும் குழந்தை பார்ப்பதைதவிர்த்து விடுங்கள் 


    இன்றைக்கு நம் குழந்தைகள் சக்திமான், இராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகள் மற்றும் வரலாற்றுத் தொடர்களால் பாதிக்கப்படுகின்றன. அவர்களைப் போல அமானுஷ்யமான வாழ்க்கையை, பழக்க வழக்கங்களை பின்பற்றி வாழ வேண்டும் என்று கனவு காண்கின்றன. அதனால் தான் மாடியிலிருந்து குதித்து சக்திமான் போல சகாசம் செய்யப் பார்க்கின்றன. சக்திமான் வந்து காப்பாற்றி விடுவார் என்ற நம்பிக்கை தான் அவர்களை மாடியிலிருந்து குதிக்க வைக்கின்றது. இது போன்ற கதைகளை விட.., இஸ்லாமிய வரலாற்று நாயகர்களின் உண்மை வாழ்வு படிப்பினை மிக்கதாகும். இன்னும் நீங்களும் கூட அவர்களின் வரலாற்றிலிருந்து படிப்பினை பெற்றுக் கொள்ளலாம்.

    11. நல்லொழுக்கங்களைக் கற்றுக் கொடுங்கள்
    உங்களது குழந்தைகளுக்கு நல்லொழுக்க போதனைகள் அவசியம். ஒழுக்கம் சார்ந்த இஸ்லாமிய நூல்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றினை அவர்களுக்கு பரிசளியுங்கள்.

    இப்பொழுது பள்ளி ஆண்டு விழாக்கள் என்று கூறிக் கொண்டு சினிமாப் பாடல்களுக்கு ஆடும் கலாச்சாரத்தைப் பள்ளிக் கூடங்களில் கற்றுக் கொடுக்கின்றார்கள். சினிமாக்களில் கதாநாயகனும், கதாநாயகியும் கட்டிப்பிடித்து ஆடிப்பாடும் அசிங்கமான அங்க அசைவுகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து, இவ்வாறான விழாக்களில் ஆட வைத்து பெற்றவர்களும், மற்றவர்களும் ரசிக்கின்றார்கள்.

    இதனை பெற்றோர்கள் ஊக்கப்படுத்தக் கூடாது. அவ்வாறான போட்டிகள் தவிர்த்து ஏனைய கட்டுரைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள் போன்றவற்றில் கலந்து கொள்ள ஊக்கப்படுத்துங்கள்.

    12. கீழ்ப்படிதல்

    பெற்றோர்களுக்குக் கீழ்படிதல் என்பது இறைவன் குழந்தைகள் மீது கடமையாக்கியதொன்று. தாயும், தந்தையும் இணைந்து இதற்கான பயிற்சியை வழங்க வேண்டும். ஆனால் குடும்பங்களில் நடப்பது வேறு..!

    தந்தையை கரடி போல பிள்ளைகளிடம் அறிமுகப்படுத்துவது.., அதாவது.., அப்பா வரட்டும்.., உன்னை என்ன செய்கிறேன் பார்.. என்று பிள்ளைகளை மிரட்டுவது தாய்மார்களது வாடிக்கை. இது தவறான வழிமுறை..!

    முதலாவது, எப்பொழுது குழந்தை கீழ்ப்படியாமையைக் காட்டுகின்றதோ அப்பொழுதே கீழ்ப்படிவது எப்படி என்பதைக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். தாமதப்படுத்தக் கூடாது. தாமதப்படுத்தும் பொழுது ஒன்று அந்த சம்பவத்தையே குழந்தை மறந்திருக்கும் நிலையில், அவர்களைத் தண்டிக்கும் பொழுது தான் எதற்காக தண்டிக்கப்படுகின்றோம் என்பது அதற்கு விளங்காது.

    இரண்டாவது, அந்தத் தவறை நிவர்த்தி செய்வதற்கான சந்தர்ப்பம் அதற்குக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், குழந்தையும் தவறை உணர்ந்து திருந்தியிருக்கும், குழந்தையைத் திருத்துவதற்கு தந்தை தான் வர வேண்டும் என்று தாய் காத்திருக்க வேண்டியதில்லை. இதன் மூலம் தாயோ அல்லது தந்தையோ குழந்தையின் தவறைத் திருத்த முனையும் பொழுது, இருவரது சொல்லுக்கும் அது கட்டுப்பட்டு நடக்கும் பழக்கம் அதனிடம் ஏற்படும்.

    மூன்றாவதாக, பெற்றோர்களில் யாராவது ஒருவர் தான் குழந்தையின் தவறைக் கண்டிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பவர் என்ற நிலை வளர்ந்தால், தவறைக் கண்டிக்கும் பெற்றோரை குழந்தைகள் நேசிப்பதில்லை, மாறாக கண்டிக்கும் தாயையோ அல்லது தந்தையையோ அவர்கள் வில்லனாகப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். இதுவும் கூட குழந்தைகளிடம் கீழ்படியாமை வளர்வதற்குக் காரணமாகி விடும். பெற்றோர்களில் இருவரது சொல்லுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற நிலை அவர்களிடம் உருவாகாது. பெரும்பாலான குடும்பங்களில் இது போன்ற தவறுகள் தான் நிகழ்கின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும்.

    Sunday, April 14, 2013

    குர்ஆன் மஜீதை குறை கண்டுபிடிக்கும் நோக்கில் அமெரிக்காவின் டாக்டர் பட்டம் பெற்ற இளம்வயதுப் பெண்






    அமெரிக்காவின் டாக்டர் பட்டம் பெற்ற இளம்வயதுப் பெண் ஒருவர் குர்ஆன் மஜீதை குறை கண்டுபிடிக்கும் நோக்கில் ஆராயத்தலைப்பட்டார்.

    தனது ஆராய்ச்சியில் அதில் குறை கண்டுபிடிப்பதற்காக பெரும் முயற்சிகளையெல்லாம் மேற்கொண்டார். ஆனால், குறை காண விழைந்த அந்த இளம் டாக்டரை திருக்குர்ஆன் தன் வசம் இழுத்துக் கொண்டது.

    ஆம்! அப்பெண்ணின் சிந்தனையில் வெகுநாட்களாக எழுந்துவந்த பல கேள்விகளுக்கு அந்த அருள்வேதத்தில் தெளிவான, திருப்தியான பதிலை பெற்றுக்கொண்டார். அதற்குப் பின் தாமதிப்பதற்கு அந்த இளம் டாக்டருக்கு எதுவும் தடையாக இல்லை. உடனே இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தனது பெயரை மரியா என்று சூட்டிக்கொண்டார்.

    அந்த இருபத்தைந்து வயது இளம் பெண் டாக்டர் தனது நிலையைப்பற்றி தானே ஒரு அறிக்கையின் மூலம் வெளியிட்டுள்ளார். அதில்;

    அமெரிக்காவில் கலிவலாண்ட் என்னும் பகுதியில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தேன். உயிரியல் கல்வியில் பட்டம் பெற்றேன். அதன்பின் மெடிகல் கல்லூரியில் சேர்ந்து அங்கு மேற்படிப்புக்கான முயற்சியியை செய்து வருகிறேன். எனினும் நான் பின்பற்றும் கோட்பாடுகளில் எனக்கு அமைதி ஏற்படவில்லை. மறைமுகமாக ஒரு விஷயம் என்னை தொந்தரவு செய்து வந்தது.

    கிறிஸ்தவ மதத்தின் திரியோதனக் கொள்கையின் அடிப்படைப்பற்றி எனது உள்ளத்தில் பலவிதமான கேள்விக்கணைகள் எழுந்த வண்ணமாகவே இருந்தன. இதைவிடவும் கத்தோலிக்க, புராட்டஸ்டண்ட், ஆர்தொடக்ஸ் போன்ற பிரிவுகளாக கிறிஸ்தவத்த்தில் பல கொள்கைகள் ஏன் ஏற்பட்டது? அவையவைகளுக்கு தனித் தனிப்பட்ட கொள்கைகள் ஏன் உருவாகியுள்ளது? என்ற வினாக்கள் எழுந்து கொண்டிருந்தது. ஆனால், எனது நம்பிக்கை ஒரே இறைவன் மீது இருந்தது.

    தவறுக்கும், உண்மைக்கும், சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் உள்ள வேறுபாடுகளை பிரித்துணரும் ஆற்றல் என்னிடம் இருந்தது. எனினும் இஸ்லாமைப்பற்றி, அது உண்மையாக அறிந்து கொள்ள வேண்டும். அதே சமயம், நான் அதை ஏற்று பின்பற்றப்பட வேண்டிய மார்க்கம்தான் என்ற நோக்கில் சிந்திக்க முன்வரவில்லை. ஏனெனில் இஸ்லாத்தைப்பற்றி அது ஒரு யுத்த மார்க்கம். கடினத்தை விரும்பும் மார்க்கம் எனவும், அதனைப் பின்பற்றும் முஸ்லிம்கள் கொலை, கொள்ளை, அநியாயம் போன்றவைகளை ஆதரிக்கும் பயங்கரவாதிகள் எனவும் தான் விளங்கி இருந்தேன்.

    நான் பல்கலைக்கழகத்தில் நுழைந்தபின், குர்ஆனை குறை காணும் நோக்கத்துடன் இது சத்திய வேதமா? அல்லது அசத்தியமானதா? என்பதை அறிந்து கொள்வதற்காக தலைப்பட்டேன். பக்கங்களைப் புறட்டப்புறட்ட, உள்ளே செல்லச்செல்ல ஆச்சரியமான உற்சாகம் என்னுள் ஏற்படுவதை உணர்ந்தேன்.

    இஸ்லாத்தின் கொள்கைகள் மிகவும் தெளிவானதாக, மிகவும் பிரகாசமானதாக, பரிசுத்தமானதாக இருப்பதைக் கண்டேன். அதிலுள்ள இறைக்கொள்கையும் அப்பழுக்கற்றதாக வணங்குவதற்கு தகுதியானவன் ஒரேயொரு இறைவன் தான் என்று உள்ளது. இந்த ஆராய்ச்சிக்குப்பிறகு என்னுள் அமைதியும், நிம்மதியும் ஏற்பட்டதை சொல்லாமல் இருக்க முடியாது. மேலும் என் உள்ளத்தின் ஆழத்தில் இதுவரை எந்தெந்த கேள்விகள் எழுந்து கொண்டிருந்ததோ அவைகள் அத்தனைக்கும் குர்ஆனில் தெளிவான பதிலைப் பெற்றுக்கொண்டேன்.

    அதன்பின் பரிசுத்த குர்ஆனையும், மற்ற இஸ்லாமிய நூல்களையும் ஆராய்வதை விருப்பப் பாடமாக எடுத்துக்கொண்டேன். இஸ்லாத்தைப்பற்றி ஆழ்ந்து சிந்திப்பதற்காக எனது ஆராய்ச்சியை அதில் ஈடுபடுத்தினேன். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின், அவர்களது தோழர்களான ஸஹாபாக்களின் வரலாறுகளை ஆராய்ந்தேன்.
    இஸ்லாம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மென்மையின் சிகரமாம் பெண்ணினத்திற்கு என்ன ஒரு உயர்வான அந்தஸ்தையும், உரிமைகளையும் கொடுத்திருக்கிறது என்பதை அறிந்து ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றுவிட்டேன். நான் வாழும் அமெரிக்காவில்கூட சிலபல ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் பெண்ணினத்தை மதிப்பது, சமஉரிமை தருவது என்ற பழக்கம் ஏற்படுத்தப்பட்டது.

    அதன்பின் எனது ஆராய்ச்சியை விரிவுபடுத்தும் வகையில் கணவன் மனைவிக்கு நடுவில் குடும்ப வாழ்க்கைப்பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினேன். அதற்கு நிகராக அமெரிக்காவில் நடைபெற்றுவரும் குடும்ப வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பார்க்க நாடினேன்.

    எதிர்பாராத விதமாக கண்ணியமான இஸ்லாமியக் குடும்பத்துடன் ஒரு தொடர்பு ஏற்பட்டது. அவர்களின் வாழ்க்கை முறை, இல்லற வாழ்க்கையில் அமைந்திருந்த ஒழுக்க முறைகள், குழந்தைகளை பராமறிப்பது, அவர்கள்மீது அன்பு செலுத்துவது போன்றவைகளைப் பார்த்து அப்படியே அசந்து போனேன்.

    கணவன் மனைவி இருவரும் ஒருவரையொருவர் அன்பு காட்டி வாழ்கிறார்கள். ஒவ்வொருவரும் தத்தமது கடமையை உணர்ந்து வாழ்கிறார்கள். கணவன் மனைவி, ஒருவர் மற்றொருவருக்குச் செய்யும் பணிகளை கண்ணியத்துடன் செய்து கொள்கிறார்கள். இந்நிலை அமெரிக்காவின் பெரும்பாலானக் குடும்பத்தில் காணப்படுவதில்லை.

    இஸ்லாத்தில் பெண்களுக்கென தனிப்பட்ட சில சட்டதிட்டங்கள் இருக்கின்றன. அவைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தமானது எது? என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, பட்டென்று கிடைத்த பதில்; ‘பர்தா அணிவது! ஏனெனில், எனக்கு முழுமையான நம்பிக்கையும் பரிபூரணமான அமைதியாகவும் இருக்கிறது. பெண்கள் தங்கள் மேனி முழுவதையும் மறைத்து இருக்க வேண்டுமென்பது ஆண்களைவிட குறைந்தவர்கள் என்ற அர்த்தத்தில் அல்ல. மாறாக இது அவர்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், கண்ணியமாக வாழவும் செய்கிறது.

    இவ்வாறே இஸ்லாம் தலாக் விடப்பட்ட பெண்ணுக்கு குறிப்பிட்ட காலம் வரை ஜீவனாம்சம் அளிக்கிறது. அந்த காலம் வரை (முன்னால்) கணவரின் இல்லத்தில் இருப்பதற்கும் அனுமதி வழங்குகிறது. இதைப்போன்ற சலுகை அமெரிக்காவிலும் செயல் படுத்தப்பட்டால், அமெரிக்காவில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் வீடிழந்து தெருத்தெருவாக அலைந்து திரியும் நிலை ஏற்படாது.

    மேலும் இஸ்லாம், பெண்களின் அடிப்படை உரிமைகளையும் தெளிவுபடுத்திக் காட்டியுள்ளது. உதாரணத்திற்கு கூறவேண்டுமானால், பெண் தனது கணவரின் வீட்டையும், குழந்தைகளையும் பராமரிக்க வேண்டுமென பணிக்கிறது. ஏனெனில் குழந்தைகளின் கல்வியிலும், அவர்களை முறைப்படி வளர்ப்பதிலும் கவனம் செலுத்தி காலத்தை ஒதுக்குவதன் மூலம், அவர்களிடம் நல்ல பழக்க வழக்கங்களையும், அழகிய கலாச்சாரங்களையும் ஏற்படுத்த முடியும். அவ்வாறு இல்லாத குழந்தைகள் தான்தோன்றித்தனமாக, தன் மனம்போன போக்கைக் கொண்டதாகவே வளரும். தற்போது அமெரிக்காவில் அவ்விதமான குழந்தைகளைத்தான் காணமுடிகிறது.

    அமெரிக்காவில் எவ்விதம் இஸ்லாமியப் பிரசாரத்தை மேற்கொள்ளலாம் என நினைக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு;

    அமெரிக்கர்களுக்கு மத்தியில் இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றிய அறிவு மிகவும் குறைவாகவே இருக்கிறது. மேலும் இஸ்லாத்தைப்பற்றி அது யுத்த மார்க்கம் எனவும், எப்போதும் சண்டைச் சச்சரவுகளை உருவாக்கும் மார்க்கம் எனவும், கொலை கொள்ளைகளைத் தூண்டும் மார்க்கம் எனவுமே எண்ணியுள்ளனர். அதனால் அவர்கள் இஸ்லாத்தை வாழ்க்கைத் திட்டத்தையுடையதாக எண்ணவே இல்லை. சமீப காலமாக இதில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

    ஆகவே, அவர்களுக்கு இஸ்லாத்தின் அனைத்து அறிமுகங்களையும் எடுத்துக்கூறி அது அற்புதமான வாழ்க்கைத் திட்டத்தைக் கொண்ட மார்க்கம் என்பதை விளக்கி அவர்களின் உள்ளத்தில் பதிய வைக்க வேண்டிய கடமை நம்மவர்களுக்கு இருக்கிறது. மேலும் முஸ்லிம்களும் அனைத்து செயல்பாடுகளையும் இஸ்லாமிய அடிப்படையில் அமைத்து வாழ்ந்து காட்டுவதும் கடமையாகும் என்றார்.

    Wednesday, March 20, 2013

    பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவியரின் பெற்றோருக்கு எச்சரிக்கை



    பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவியரின் பெற்றோருக்கு எச்சரிக்கை
    தமிழகத்தில் தற்போது நடந்து வரும் பிளஸ் 2 தேர்வு இறுதி கட்டத்தை நெருங்கி வருவதால், தேர்வு எழுதும் மாணவ, மாணவியரின் பெற்றோர் உஷாராக இருக்க வேண்டும்’ என, போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    தமிழகத்தில் ப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வு முடியும் நிலையில், மாணவ, மாணவியர் வீட்டை விட்டு ஓடுவது, சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. மாணவியர், தங்களின் காதலர்களாகிய மாணவர்கள், இளைஞர்களின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி வீட்டை விட்டும், பெற்றோரை தவிக்க விட்டும், சென்று விடுகின்றனர். போலீசாரின் கணக்கெடுப்பின் படி, கடந்த ஆண்டில் பொதுத் தேர்வு முடிவுற்ற நிலையில், தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளி மாணவியரில், 125 பேர், காதலர்களுடன் ஓட்டம் பிடித்தனர். இதில், பல மாணவியர், போலீஸ் வலையில் சிக்கினர். இவ்வாறு சிக்கியவர்களின் பெற்றோரை அழைத்து, பேச்சுவார்த்தை மட்டுமின்றி, மாணவியருக்கு ஆலோசனை வழங்கிய நிலையில், அவர்கள் மீண்டும், பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
    அந்த வகையில், கடந்த ஆண்டில், சேலம், தர்மபுரி, நாமக்கல், கரூர், திருச்சி, விழுப்புரம், சென்னை, கோவை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பள்ளி பொதுத் தேர்வு முடிந்த நிலையில், வீட்டை விட்டு, வெளியேரிய, மாணவ, மாணவியரின் எண்ணிக்கை அதிகரித்தது. அதில், திருச்சி முதலிடத்தை பெற்றது. தற்போது, பிளஸ் 2 பொதுத் தேர்வு, இறுதி கட்டத்தை நெருங்கி விட்ட நிலையில், மார்ச் 27ம் தேதி, தேர்வு, முடிவுக்கு வருகிறது. அன்றே, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு துவங்குகிறது. தேர்வு முடியும் நிலையில், காதலர்களுடன் தலைமறைவாகும் மாணவியரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக, உளவுத்துறை போலீசார், அரசுக்கு அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.
    இந்த எச்சரிக்கையை அடுத்து, தமிழகம் முழுவதும், போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். இதில், தேர்வு மையங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்துவதோடு, ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டுகளில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித் திரியும் இளம் ஜோடிகளிடம், விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா தலங்கள், அங்குள்ள தங்கும் விடுதிகள், கோவில்கள், சார்-பதிவாளர் அலுவலகங்கள் ஆகியவற்றையும் கண்காணிக்க, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களுக்கு வரும் இளம் ஜோடிகளிடம், தெளிவாக விசாரணை நடத்தி, அவர்கள் குறித்த முழு விவரங்களை சேகரிக்க வேண்டும் எனவும், தேவைப்படும் பட்சத்தில் அவர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து, பெற்றோரை அழைத்து ஒப்படைக்கலாம் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இது குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த ஆண்டு பொதுத் தேர்வு முடிந்த நிலையில் காதலர்களுடன், "எஸ்கேப்’ ஆன மாணவியரின் எண்ணிக்கை அதிகரிப்பு ஏற்பட்டது. சில இடங்களில், இளசுகளின் நடவடிக்கையால், ஜாதி, மத ரீதியிலான மோதல் வெடிக்கும் அபாயமும் ஏற்பட்டது. அதை அடுத்து, நடப்பாண்டில் இது போன்றவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம். மாணவ, மாணவியர் தேர்வு எழுதி முடிக்கும் நிலையில், அவர்களின் பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும். குறிப்பாக அவர்களுக்கு, பிரத்தியேகமாக வீடுகளில் அறைகள் இருக்கும் பட்சத்தில், அவற்றை கண்காணிக்க வேண்டும். விலை உயர்ந்த நகைகள், பணம், வங்கியின் ஏ.டி.எம்., கார்டு, செக் புத்தகம் ஆகியவற்றை பத்திரமாக மாணவ, மாணவியருக்கு தெரியாத வகையில் வைத்துக் கொள்ள வேண்டும். தேர்வு முடியும் நிலையிலும், முடிந்த பின்னரும் அவர்களின் தோழிகள், பழக்கமானவர்களையும் தொடர்ந்து கண்காணிக்கலாம். மாணவ, மாணவியர் பணம் கேட்கும் பட்சத்தில், அந்த பணத்துக்கான தேவை குறித்தும், அதன் அவசியம் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும்.
    மாணவனோ, மாணவியோ காணவில்லை என்றால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவிப்பதோடு, அவர்களின் புகைப்படங்களை வழங்கி உதவலாம். அவர்களின் பழக்க வழக்கங்கள், தொடர்புகள் குறித்து முழு விவரங்களையும், போலீசாரிடம், எவ்வித தயக்கமும் இன்றி தெரிவித்தால், நடவடிக்கை எடுக்க உதவி கரமாக இருக்கும். பள்ளி தேர்வு முடிவுக்கு வரும் நிலையில், மாணவ, மாணவியரின் பெற்றோர் உஷாராக இருந்தால் மட்டுமே, பிரச்னைகளை தவிர்க்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

    அன்பான கிறிஸ்தவர்களே. . .


கிறிஸ்தவர்கள் தங்கள் மதத்தினால் பலவிஷயங்களில் ஏமாற்றத்திற்கு ஆளாகிறார்கள். அதில் ஒன்றுதான்ஜெபக்கூட்டம். இந்த ஜெபக்கூட்டத்தை நடத்தும் இரண்டு முக்கிய
புள்ளிகள் -டி.ஜி.எஸ் தினகரன் மற்றும் நாலுமாவடி மோசரஸ். . . பல இலட்சங்கள்செலவு செய்து பொதுமேடைகளை அமைத்து பிறவிக் குருடனை குணப்படுத்துகிறேன், சப்பானியை நடக்க வைக்கிறேன், செவிடனை கேட்கவைக்கிறேன்என்ற பொய்யான வாக்குறுதிகளை ஜெபத்தின் பெயரால் அரங்கேற்றுகிறார்கள்.இப்படிப்பட்ட ஜெபத்தினால் உங்கள் பகுதியிலுள்ள 1 மாற்றுத்திரணாளியாவது குணமடைந்ததுண்டா? நீங்கள் சுத்தமானஇருதயமுள்ளவராக இருந்தால்சிந்தித்துப்பாருங்கள் மக்கள் முன் அரங்கேற்றப்படும் ஜெபங்கள்வீண் பகட்டுமேனிக்கு செய்யப்படும் ஜெபங்கள் இல்லையா?ஒருகிருத்தவன் எவ்வாறு ஜெபத்தைஎவ்வாறு மேற்கொள்ளவேண்டும் என்பதை பைபிள்

தெளிவாகசொல்கிறது. .

"இதோ ஒரு சுத்தமானஇருதயமுள்ளவன் கீழ்கண்டவாறுதான் தன் சேனைகளின்

கர்த்தரிடம் ஜெபம் பண்ணி முறையிடுவான், நேர்வழியை கேட்பான்!நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப்
பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிறஉன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப்பலனளிப்பார்"
(மத்தேயு 6:5-6)

 இன்றைக்குகிருத்தவர்கள் அனைவரும் கீழ்கண்ட பைபிள் வரிகளுக்கு உகந்தாற்போன்றேஜெபம் பண்ணுகிறார்கள். காட்டுக் கூச்சலுடன் அல்லேலூயா! அல்லேலூயா!அல்லேலூயா! என்று கூத்தடிப்பது, ஜீஸஸ் காப்பாத்து! ஜீஸஸ் காப்பாத்து!ஓ காட்! ஓ காட்! என்று கும்மாங்குத்து ஸ்டைலில் கொக்கறிக்கிறார்கள்இது அஞ்ஞானமில்லையா? சுத்தமான இருதயமுள்ள கிருத்தவர்களேஉங்கள் ஜெபம் இன்றைக்கு அஞ்ஞான வீண் வார்த்தைகளால் அலைபாய்ந்துக்கொள்டிருக்க வில்லையா? இதோ உங்கள் பைபிள் என்னகூறுகிறது

என்பதைகவனமாகபடியுங்கள்!

 "அன்றியும்நீங்கள் ஜெபம்பண்ணும்போது,அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்குமுன்னமே உங்களுக்கு இன்னது தேவைஎன்று அவர் அறிந்திருக்கிறார். (மத்தேயு 6:7-8).

. . ஆன்லைன் ஜெபம், 24 மணிநேர ஜெபம், தொலைபேசி ஜெபம் ஆகியவற்றில் கண்ணியம்இருக்கிறதா? யாரோ ஒருவன் உங்களுக்காகஜெபிக்கிறானாம் அதற்காக
நீங்கள் கூலிகொடுக்கிறீர்கள்.

நீங்கள்செய்த பாவத்திற்கும் உங்கள்குடும்ப கஷ்டங்களுக்கும் யாரோ ஒருவன் ஜெபிப்பானா? இது ஜோசியக் காரனுடைய கதை போன்றல்லவா காணப்படுகிறது.

ஒருவன்ஜோசியக்காரனிடம் சென்று குறிகேட்பானாம் அவன் குறி கூறி சொன்னால்குறைகள்நீங்குமாம். அட முட்டாள் மனிதா அந்த ஜோசியக்காரன் தன் குறைகளைக்காண யாரிடம் போய் குறி கேட்பான்?

தொலைபேசி ஜெபம்!

தொலைபேசியில்ஜெபம் செய்கிறோம் என்கிறார்கள் இவர்கள் இதற்கு கட்டணமாக ஜெப
ஊழியங்களுக்குகாணிக்கை செலுத்துங்கள் என்று கவர்ச்சிகரமாக பேசி ஒரு கணிசமானபணத்தை கரைக்கிறார்கள். இதுமட்டுமா?

குரூப்ஆசீர்வாத திட்டம், குடும்ப ஆசிர்வாத திட்டம், குழந்தைகள் ஆசிர்வாத திட்டம், கணவன் மனைவி ஆசிர்வாத திட்டம், சக்காளத்திஆசிர்வாத திட்டம் என்று கூறிஒவ்வொரு திட்டத்திற்கும் இவ்வளவு தொகை செலுத்தினால் உங்களுக்காகஇரவுபகலாக அயராது ஜெபிக்கிறோம் அடேயப்பா எத்தனை ஏமாற்று திட்டங்கள்.இப்படி திட்டங்களில் சேர்ந்து ஜெபித்துக் கொண்டால்தான் தேவன் கருணைகாட்டுவானா? ஏன் தேவன் என்ன உங்கள் சொந்த குரலை கேட்காத செவிடனா?

உங்கள்குடும்ப கஷ்டத்தை பார்க்காத குருடனா?. . .. . . . . . . . .
இன்றைக்குதொலைபேசி ஜெபம், நாளை கைபேசி ஜெபம் மறுநாள் டி.வி.ஜெபம், வீட்டுல எளவுவிழுந்துவிட்டால் ஒப்பாரி ஜெபம் என்று ஜெபத்தை நாசப்படுத்தியவர்கள்அந்த தேவனிடம் தன்மானத்தை இழந்த மானங்கெட்ட பாதரியார்கள்.

பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம். (நீதிமொழிகள் 12 : 22 )

சிந்தித்துப்பாருங்கள்சகோதர சகோதரிகளே! அட்லீஸ்டு 1 ரூபா கொடுத்தாதான் உங்களுக்காகஇந்த பொய்உதடுகள் கொண்ட மதகுருமார்கள் ஜெபிப்பார்கள் பணம் இல்லைன்னாஉங்க பெயரை தேவன்கிட்ட சொல்லுவாங்களா? அப்படி பணம்கொடுத்தால்தான் தேவன் பிரார்த்தனையை ஏற்பானா?இது தேவன்மீது
இட்டுக்கட்டியதுரோமில்லையா? எனவே ஆன்லைன் ஜெபம், 24 மணிநேர ஜெபம், தொலைபேசிஜெபம் என்று கூறுகிறார்களே இதுவெல்லாம் சுத்த மோசடி.

விவேகியானவன் அறிவோடு நடந்துகொள்ளுகிறான், மூடனோ தன் மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான். (நீதிமொழிகள் 13:16) . . . . .
    அன்பான கிறிஸ்தவர்களே. . .

    கிறிஸ்தவர்கள் தங்கள் மதத்தினால் பலவிஷயங்களில் ஏமாற்றத்திற்கு ஆளாகிறார்கள். அதில் ஒன்றுதான்ஜெபக்கூட்டம். இந்த ஜெபக்கூட்டத்தை நடத்தும் இரண்டு முக்கிய
    புள்ளிகள் -டி.ஜி.எஸ் தினகரன் மற்றும் நாலுமாவடி மோசரஸ். . . பல இலட்சங்கள்செலவு செய்து பொதுமேடைகளை அமைத்து பிறவிக் குருடனை குணப்படுத்துகிறேன், சப்பானியை நடக்க வைக்கிறேன், செவிடனை கேட்கவைக்கிறேன்என்ற பொய்யான வாக்குறுதிகளை ஜெபத்தின் பெயரால் அரங்கேற்றுகிறார்கள்.இப்படிப்பட்ட ஜெபத்தினால் உங்கள் பகுதியிலுள்ள 1 மாற்றுத்திரணாளியாவது குணமடைந்ததுண்டா? நீங்கள் சுத்தமானஇருதயமுள்ளவராக இருந்தால்சிந்தித்துப்பாருங்கள் மக்கள் முன் அரங்கேற்றப்படும் ஜெபங்கள்வீண் பகட்டுமேனிக்கு செய்யப்படும் ஜெபங்கள் இல்லையா?ஒருகிருத்தவன் எவ்வாறு ஜெபத்தைஎவ்வாறு மேற்கொள்ளவேண்டும் என்பதை பைபிள்

    தெளிவாகசொல்கிறது. .

    "இதோ ஒரு சுத்தமானஇருதயமுள்ளவன் கீழ்கண்டவாறுதான் தன் சேனைகளின்

    கர்த்தரிடம் ஜெபம் பண்ணி முறையிடுவான், நேர்வழியை கேட்பான்!நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப்
    பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிறஉன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப்பலனளிப்பார்"
    (மத்தேயு 6:5-6)

    இன்றைக்குகிருத்தவர்கள் அனைவரும் கீழ்கண்ட பைபிள் வரிகளுக்கு உகந்தாற்போன்றேஜெபம் பண்ணுகிறார்கள். காட்டுக் கூச்சலுடன் அல்லேலூயா! அல்லேலூயா!அல்லேலூயா! என்று கூத்தடிப்பது, ஜீஸஸ் காப்பாத்து! ஜீஸஸ் காப்பாத்து!ஓ காட்! ஓ காட்! என்று கும்மாங்குத்து ஸ்டைலில் கொக்கறிக்கிறார்கள்இது அஞ்ஞானமில்லையா? சுத்தமான இருதயமுள்ள கிருத்தவர்களேஉங்கள் ஜெபம் இன்றைக்கு அஞ்ஞான வீண் வார்த்தைகளால் அலைபாய்ந்துக்கொள்டிருக்க வில்லையா? இதோ உங்கள் பைபிள் என்னகூறுகிறது

    என்பதைகவனமாகபடியுங்கள்!

    "அன்றியும்நீங்கள் ஜெபம்பண்ணும்போது,அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்குமுன்னமே உங்களுக்கு இன்னது தேவைஎன்று அவர் அறிந்திருக்கிறார். (மத்தேயு 6:7-8).

    ஆன்லைன் ஜெபம், 24 மணிநேர ஜெபம், தொலைபேசி ஜெபம் ஆகியவற்றில் கண்ணியம்இருக்கிறதா? யாரோ ஒருவன் உங்களுக்காகஜெபிக்கிறானாம் அதற்காக
    நீங்கள் கூலிகொடுக்கிறீர்கள்.

    நீங்கள்செய்த பாவத்திற்கும் உங்கள்குடும்ப கஷ்டங்களுக்கும் யாரோ ஒருவன் ஜெபிப்பானா? இது ஜோசியக் காரனுடைய கதை போன்றல்லவா காணப்படுகிறது.

    ஒருவன்ஜோசியக்காரனிடம் சென்று குறிகேட்பானாம் அவன் குறி கூறி சொன்னால்குறைகள்நீங்குமாம். அட முட்டாள் மனிதா அந்த ஜோசியக்காரன் தன் குறைகளைக்காண யாரிடம் போய் குறி கேட்பான்?

    தொலைபேசி ஜெபம்!

    தொலைபேசியில்ஜெபம் செய்கிறோம் என்கிறார்கள் இவர்கள் இதற்கு கட்டணமாக ஜெப
    ஊழியங்களுக்குகாணிக்கை செலுத்துங்கள் என்று கவர்ச்சிகரமாக பேசி ஒரு கணிசமானபணத்தை கரைக்கிறார்கள். இதுமட்டுமா?

    குரூப்ஆசீர்வாத திட்டம், குடும்ப ஆசிர்வாத திட்டம், குழந்தைகள் ஆசிர்வாத திட்டம், கணவன் மனைவி ஆசிர்வாத திட்டம், சக்காளத்திஆசிர்வாத திட்டம் என்று கூறிஒவ்வொரு திட்டத்திற்கும் இவ்வளவு தொகை செலுத்தினால் உங்களுக்காகஇரவுபகலாக அயராது ஜெபிக்கிறோம் அடேயப்பா எத்தனை ஏமாற்று திட்டங்கள்.இப்படி திட்டங்களில் சேர்ந்து ஜெபித்துக் கொண்டால்தான் தேவன் கருணைகாட்டுவானா? ஏன் தேவன் என்ன உங்கள் சொந்த குரலை கேட்காத செவிடனா?

    உங்கள்குடும்ப கஷ்டத்தை பார்க்காத குருடனா?. . .. . . . . . . . .
    இன்றைக்குதொலைபேசி ஜெபம், நாளை கைபேசி ஜெபம் மறுநாள் டி.வி.ஜெபம், வீட்டுல எளவுவிழுந்துவிட்டால் ஒப்பாரி ஜெபம் என்று ஜெபத்தை நாசப்படுத்தியவர்கள்அந்த தேவனிடம் தன்மானத்தை இழந்த மானங்கெட்ட பாதரியார்கள்.

    பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம். (நீதிமொழிகள் 12 : 22 )

    சிந்தித்துப்பாருங்கள்சகோதர சகோதரிகளே! அட்லீஸ்டு 1 ரூபா கொடுத்தாதான் உங்களுக்காகஇந்த பொய்உதடுகள் கொண்ட மதகுருமார்கள் ஜெபிப்பார்கள் பணம் இல்லைன்னாஉங்க பெயரை தேவன்கிட்ட சொல்லுவாங்களா? அப்படி பணம்கொடுத்தால்தான் தேவன் பிரார்த்தனையை ஏற்பானா?இது தேவன்மீது
    இட்டுக்கட்டியதுரோமில்லையா? எனவே ஆன்லைன் ஜெபம், 24 மணிநேர ஜெபம், தொலைபேசிஜெபம் என்று கூறுகிறார்களே இதுவெல்லாம் சுத்த மோசடி.

    விவேகியானவன் அறிவோடு நடந்துகொள்ளுகிறான், மூடனோ தன் மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான். (நீதிமொழிகள் 13:16) . . . . .

    நபிகள் நாயகத்தை ஏன் “மகான்” என்கிறோம்? :-அறிஞர் அண்ணா:-




    நபிகள் நாயகத்தை ஏன் “மகான்” என்கிறோம்? :-அறிஞர் அண்ணா

    /
    இஸ்லாத்தின் உயரிய பண்புகள் இதற்குமுன் உலகுக்கு எவ்வளவு அவசரமாகத் தேவைப்பட்டதோ அதை விட, இப்பொழுது தத்துவக் காட்டுக்குள் ஒளிதேடி அலையும் இந்த உலகுக்கு மிக அவசர அவசரமாகத் தேவைப்படுகின்றன.
    .
    இஸ்லாம் என்பது ஒரு மதமல்ல; ஓர் சிறந்த மார்க்கம். இஸ்லாமிய மார்க்கத்தை உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் கொண்டாடுகிறார்கள்; இஸ்லாத்தின் மார்க்கம் சிறந்ததொரு மார்க்கமாக இருப்பதால் உலகில் உள்ள பெருங்குணவான்கள், இஸ்லாத்தை ஒரு மதமாகக் கொள்ளாமல் ஒரு மார்க்கமாகவே கருதுகின்றனர்.
    .
    நான் மதத்தைப் பற்றிக் கொண்டுள்ள கருத்துக்கும், இங்கு நடைபெறும் நபிகள் நாயகம் விழாவிற்கும் முரண்பாடு இல்லை. இஸ்லாத்தை ஓர் மார்க்கமாகக் கருதி, நான் இவ்விழாக்களில் கலந்துகொள்கிறேன். இவ்விழாவில் நான் கலந்து கொள்வது இதுதான் முதல் தடவையென்பதுமல்ல; இதுவே கடைசி தடவையுமல்ல.
    .
    எனக்கு முன் பேசிய நண்பர் சமது அவர்கள், நபி அவர்கள், கடவுளால் அனுப்பப்பட்ட திருத்தூதர்களில் இறுதியாக அனுப்பப்பட்டவர் எனக் குறிப்பிட்டார். எனவே, நபியை “இறுதி நபி’ என்று சொன்னார். நபியை அவ்வாறு குறிப்பிட்ட தற்குக் காரணம்,
    /
    இறுதி நபி’ என்று கூறியிருக்கா விட்டால், நபிகள் நாயகத்திற்குப் பின்னால் வந்தவர்களும், நானும் கடவுளால் அனுப்பப்பட்ட திருத்தூதன்தான்; நானும் கடவுளால் அனுப்பப்பட்ட நபிகளில் ஒருவன்தான்’ என்று கூறி மக்களை வெவ்வேறு பக்கம் திருப்பி விட்டால் என்ன செய்வது என்றுதான், நபியை “இறுதி நபி’ என்று சொல்லியிருக்கிறார்கள்.
    /
    இஸ்லாமிய மார்க்கம் ஏன் சிறந்ததெனப் போற்றப்படுகிறதென்றால், மனிதனுக்கு என்னென்ன ஐயப்பாடுகள் ஏற்படுகின்றனவோ அதையெல்லாம் நீக்கக் கூடிய வகையில், அதில் நல்ல கொள்கைகள் இருக்கின்றன. நபிகள் நாயகத்தின் போதனைகளில் ஒன்று ஆண்டவனுக்கு இணைவைத்தல் ஆகாது’ என்பதாகும். இந்தப் போதனையை நான் நெஞ்சம் நெக்குருக நெக்குருக எண்ணிப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.
    /
    ஏன் நான், இந்தப் போதனையைச் சிறப்பாகக் கூறுகிறேன் என்றால், இப்போதனை மனிதனைச் சிந்திக்கத் தூண்டுகிறது. “ஆண்டவனுக்கு இணைவைத்தல் ஆகாது’  ஏன் இணை வைத்தல் ஆகாது? ஆண்டவன் எப்படியிருக்கக் கூடும்?  என்றெல்லாம் சிந்தனைக்கு வேலை கொடுத்து, ஆண்டவன் இப்படியிருக்கக் கூடும்
    என்று சிந்தனை முடிவடைவதில்லை. “கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்’  பார்த்தவர் சொன்னதில்லை; சொன்னவர் பார்த்ததில்லை’ என்று கூறியிருக்கிறார்கள்.
    /
    கடவுள் தன்மையின் தத்துவமே இதுதான். ஆண்டவனுக்கு இணைவைத்தால், ஆண்டவனுக்கு முன் ஒருவரை வைக்க வேண்டும். அந்த ஒருவர் யாராக இருக்கவேண்டும்? யாருக்குத் தெரியும்? அதனால்தான் ஆண்டவனுக்கு இணைவைத்தல் ஆகாது’ என்னும் போதனையை நபிகள் நாயகம் கூறியிருக்கின்றார். மற்ற மார்க்கத்தில் இணைவைத்துக் கூறிய காரணத்தால்தான், எங்களைப் போன்றவர்களுக்கு ஏராளமான
    மாச்சரியங்கள் தோன்றின.ஸ்லாத்தில் எனக்கு மற்றும் ஒன்று பிடித்திருக்கிறது; அது, மனிதனை மனிதனாக ஆக்குவது; மனிதனை முழு மனிதனாக ஆக்குகிறது இஸ்லாமிய மார்க்கம்.
    /
    கடவுள், தூதரை அனுப்பியதற்குக் காரணம் நானே நேரடியாக “நான் தான் கடவுள்’ என்று கூறி மக்களை நம்ப வைக்க முடியும்  ஆனாலும், தூதுவரை அனுப்பியதற்குக் காரணம், “”நான் அனுப்பியதாகச் சொல்லு; சொன்னால்தான், மக்கள், “கடவுள்தான் அனுப்பினாரா?’ என்று சிந்தித்துப் பார்ப்பார்கள்  எண்ணிப் பார்ப்பார்கள்’ என்று, மனிதன் சிந்திக்க வேண்டியதன் அவசியத்தைக் கருதி, கடவுள், திருத்தூதரை அனுப்பியிருக்கிறார்.
    எனவேதான், பழந்தமிழ் மக்கள் “அறிவே ஆண்டவன் ஆண்டவனே அறிவு’ என்று கூறியிருக்கிறார்கள்.
    /
    இஸ்லாத்தின் இன்னொரு சிறப்பு இஸ்லாத்தில் யார் சேர்ந்தாலும் சாதியை மறைத்து விடுகிறது; முதுகுளத்தூரில் ஒருவர் தலையை ஒருவர் சீவிக்கொள்ளும் தேவர் தாழ்த்தப்பட்ட மக்களானாலும் சரி, மற்றும் யார் சேர்ந்தாலும் சரி, சாதியை நீக்கி விடுகிறது, இஸ்லாத்தின் கொள்கை! அதனால், அது, என்னை மிகவும் ஈர்க்கக் கூடியகொள்கையாக இருக்கிறது.
    /
    இதையெல்லாம் அறிந்துதான், எதையும் துருவித் துருவி ஆராயும் பண்பு படைத்த அறிஞர் பெர்னாட்ஷா
    அவர்கள், “உலகில் கடைசி வரை நிலைத்திருக்கக் கூடிய மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் ஒன்றுதான்’ என்று
    எழுதியிருக்கிறார்.”"நபிகள் நாயகத்தை “மகான்’ என்று ஏன் கொண்டாடுகிறார்களென் றால்  1957ஆம் ஆண்டில் சமுதாய விழிப்பு வேண்டும் என்பதை எடுத்துச் சொன்னால் எங்களை ஓட ஓட விரட்டுகிறார்கள் என்றால், 1400 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு தெய்வங்களை வணங்கிய மக்களிடம், நீ வணங்கும் கடவுள் இதுவல்ல; நீ செல்ல வேண்டிய கோயில் இதுவல்ல’ என்று கூறியவரை விட்டு வைத்தார்களே அதுவும், அந்த மக்களிடம் தன் கொள்கையை நெஞ் சுறுதியோடு எடுத்துச் சொன்னாரே அதுவும் தான் அவரை மகான்’ என்று கொண்டாடக் காரணம்.
    /
    அப்பொழுது நபிகள் கொடுத்த நெஞ்சுரம்தான் இப்பொழுது அவரது மார்க்கத்தைத் தழுவியிருப்பவர்களுக்கு இன்றும் இருக்கிறதென்றால் அது ஆச்சரியமில்லை.
    /
    தமிழ் மக்கள் இஸ்லாமியக் கொள்கையை ஏன் கடைப்பிடிக்கிறார்களென்றால்  2,000 ஆண்டுகளுக்கு முன் பழந்தமிழ் மக்கள் வைத்திருந்த “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ என்ற குழந்தை காணாமல் போய்விட்டது; அதைத் தேடித் தேடி அலைந்தார்கள் தமிழ் மக்கள்; கிடைக்கவில்லை; பிறகு, இஸ்லாத்தில் அந்தக் குழந்தையைக் கண்டார்கள்; தங்கள் குழந்தை அங்கு வளருவதைக் கண்டார்கள்; குழந்தையை இழந்துவிட்ட தாய், தன் குழந்தையை மீண்டும் கண்டதும் எவ்வளவு ஆவலோடு கொஞ்சுவாளோ, அதைப் போல, இன்றையத் தமிழ் மக்கள், “ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்னும்கொள்கை இஸ்லாத்திலே காணப்படுவதால் அதைப் பின்பற்றினார்கள்.
    /
    தாய் தன் குழந்தையைக் கொஞ்சுவதைப் பார்த்து, இது என்ன, அந்தக் குழந்தையை அப்படிக் கொஞ்சுகிறாளே’ என்றால், அது, தாய்மை அன்பு அறிந்தவர்களுக்குத்தான் தெரியுமே தவிர, அதை விளக்கிக் கூற முடியாது.
    தமிழர்களுக்கு  தமிழ்ப் பண்பாட்டுக்கு ஏற்ற பல நல்ல சட்டங்கள் இஸ்லாத்தில் இருக்கின்றன.
    /
    மார்க்கம் என்பது மக்களை ஒன்றுபடுத்துவது  மக்களை அறிவுத் தெளிவுபடுத்துவது  மக்களை ஒற்றுமைப்
    படுத்துவது  அரிய பந்தங்களை ஏற்படுத்துவது  நல்ல தோழமையை வளர்ப்பது  சிறந்த விழிப்பு உணர்ச்சியை
    ஏற்படுத்துவது; அது, “மதம்’ எனச் சொன்னால், அது, மக்களை மதமதப்பில் ஆழ்த்தும்; அதற்குப் போலீஸ்
    தேவைப்படும். மார்க்க நெறியில் நின்றால் மக்கள் அன்பு வழியில் ஒன்றுபடுவார்கள்.
    /
    மதத்தின் பயன் எத்தகையதாக இருக்க வேண்டும் என்பது பற்றி நமக்குள் வேறுபாடு இருக்கலாம். ஆகையினால் யாராவது சிலர் நாஸ்திகர் என்றும், சிலர் ஆஸ்திகர் என்றும் கருதப்பட்டால், அந்தப் பட்டம் ஆஸ்திகர் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள் தங்களுக்கு அவர்களைப் பிடிக்க த காரணத்தால், அவர்களுக்கு இட்ட பெயர்தானே தவிர வேறொன்றுமில்லை.
    /
    அதைத் தவிர நாஸ்திகம் என்பது இருந்ததுமில்லை; இனி இருக்க வேண்டிய அவசியமுமில்லை. அப்படியிருந்தாலும் இல்லா விட்டாலும் நாங்கள், அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர் என்பதை இப்புனித நாளில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் ஆஸ்திகம் என்பது இயற்கை;
    இயற்கைக்கு மாறுபட்டு யாரும் இருக்க மாட்டார்கள்.
    /
    இஸ்லாமிய மார்க்கத்தின் மாண்புகளை வேறு நாடுகளில் மேலேயிருப்பவர்கள் கீழேயிருப்பவர்களுக்கு
    உபதேசம் செய்வார்கள்; ஆனால், நமது நாட்டில் அப்படியிருக்கக் கூடாது. நமது நாட்டைப் பொறுத்தவரையில்
    கீழேயிருப்பவர்கள்தான் மேலேயிருப்பவர்களுக்கு உபதேசம் செய்ய வேண்டும்; அப்பொழுதுதான் கடவுள்
    தன்மையை எல்லோரும் அறிந்தவர்கள் ஆவார்கள்.
    /
    ஏன் அவ்வாறு சொல்கிறேனென்றால், புகைவண்டி நிலையத்திலிருந்து நாம் குதிரை வண்டியில் வீட்டுக்கு
    வருகிறோம். நாம் முதலில், இறங்க வேண்டிய இடத்தைச் சொல்லி வண்டிக்காரரிடம் வாடகை பேசுகிறோம்.
    வண்டிக்காரர் நாம் குறிப்பிட்ட தூரம் வந்ததும், தாம் நினைத்ததை விட தூரம் அதிகமாக இருப்பதாகக் கருதி
    வாடகையைக் கொஞ்சம் அதிகம் கேட்கிறார்; அப்பொழுது கூறுகிறார்கள்  ”அப்பா! கடவுளுக்குப் பொது
    வாக நட!’ என் கிறார்கள்; ஆனால், உண்மையாகவே அதிக தூரம் வந்து, நாம் வாடகை யைக் குறைத்துக் கொடுத்தால், அப்பொழுது அவர், “ஐயா! கடவுளுக்குப் பொதுவாக
    நடவுங்கள்!” என்றால் அதை எத்தனை பேர் பின்பற்றுகிறோம்? உங்களை மனதார எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்  ”கடவுளுக்குப் பொதுவாக’ என்பதை எத்தனை பேர் பின்பற்றுகிறோம்?
    /
    ஆகையினாலேதான், நமது நாட்டைப் பொறுத்த வரையில் கீழேயிருப்பவர்கள் மேலேயிருப்பவர்களுக்கு
    உபதேசம் செய்ய வேண்டும் என்கிறேன்.
    /
    மார்க்கத்தில் யாருக்கும் மாறுபாடு இருக்க முடியாது; ஆனால், மார்க்கம் நடைமுறையில் வரும் போது அது
    மக்களுக்குப் பயன்பட வேண்டும். சூழ்நிலையை மனிதன் உண்டாக்குகின்றான். நல்ல சுற்றுச் சார்பும், சூழ்நிலையும் அமைய வேண்டும். சுற்றுச் சார்பு எப்படி இருக்கின்றதோ,அப்படியே  அதன் வழியே செல்பவர்கள் கொஞ்சம் சுற்றுச் சார்பு அறிந்தவர்கள். ஆனால் சுற்றுச் சார்புக்கு மாறாக நாம் நடந்தால் தமக்குத் தீமையை அளிக்கும் என்பதைத் தெளிவாக அறிந்தும், கெட்டிருக்கின்ற சுற்றுச் சார்புகளை அழித்து, நல்ல சுற்றுச் சார்புகளை ஏற்படுத்துகின்றார்களே அவர்களைத் தாம் “மகான்கள்’ என்று சொல்லுகின்றோம்.
    /
    ஆனால் அவர்கள் எப்பொழுதும் நமக்குக் கிடைப்பதில்லை; அவர்கள் கிடைக்கும் போது நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அப்படிப்பட்ட மகான்களில் ஒருவர் நபிகள் நாயகம்  அவரைப் போன்ற மகான்கள் நம்மிடையே அடிக்கடி தோன்றுவதில்லை. ஆகையினால், அத்தகையவரின் சிறந்த
    கருத்துகளை நாட்டில் பரப்ப நல்ல சுற்றுச் சார்புகள் உருவாக வேண்டும். சுற்றுச் சார்பு நல்ல முறையிலே
    அமைய மக்களிடத்திலே நல்ல அறிவுத் தெளிவும், அத்தெளிவு ஏற்பட நல்ல கல்வி முறையும், நல்ல கல்வி முறை ஏற்பட நல்ல ஆட்சியும் நல்ல ஆட்சி முறை ஏற்படுவதற்கு நல்ல ஆட்சியாளர்களும் வேண்டும்; நல்ல ஆட்சியாளர்களை ஏற்படுத்த நல்லவர்களை வாழவிட வேண்டும்.
    இவ்வுயரிய மார்க்கம் அக்கிரமத்தை அழிக்கப் பயன்படவேண்டும்; உலகத்தில் நல்ல தோழமையை உண்டாக்கு
    வதற்குப் பயன்பட வேண்டும். என்றைக்கு இந்நோக்கங்களுக்கு இம்மார்க்கம் பயன்படுகின்றதோ அன்றைக்குத்தான் மார்க்கத்தின் முழுப் பலன்களையும் அடைய முடியும்.
    /
    (7.10.1957இல் சென்னை திருவல்லிக்கேணி
    கடற்கரையில் நடைபெற்ற நபிகள் நாயகம் விழாவில்
    அறிஞர் அண்ணா ஆற்றிய உரையின் சில பகுதிகள்)
    வாசிக சேகரம் :  ”சௌந்தர்ய முத்திரை’
    தண்ணன் மூஸா