மது விலக்கை அமல்படுத்தக் கோரி கடந்த 33 நாட்களாக சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வந்த காந்தியவாதி சசி பெருமாளை போலீஸார் வலுக்கட்டாயமாக உண்ணாவிரத இடத்திலிருந்து அப்புறப்படுத்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இவர் கடந்த 33 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார், இவருடைய போராட்டத்திற்கு எந்த ஊடகமும் முக்கியத்துவம் கொடுத்தது போல் தெரியவில்லை,
அதேவேளையில் அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்ட போது ஒட்டுமொத்த ஊடகமும் அன்னா ஹசாரேயை ஃபோகஸ் செய்து நேரடி ஒளிபரப்பு வெளியிட்டு அவர் தான் இந்தியாவிற்கே வழிகாட்டி என்ற அடிப்படையில் சித்தரித்தது,
ஆனால் அதே அகிம்சை வழியில் போராடி கொண்டிருக்கும் சசி பெருமாளை எந்த ஊடகமும் முக்கியத்துவம் கொடுத்த செய்தி வெளியிடவில்லை,
அதேபோல் அன்னா ஹசாரேக்கு ஆதரவாக ரஜினி, விஜய் உள்ளிட்ட அரிதாரம் பூசிய கூட்டம் ஆதரவு தெரிவித்திருந்தது,
இன்னும் சொல்ல போனால் சென்னையிலிருந்து டெல்லி சென்று அன்னா ஹசாரேக்கு ஆதரவு தெரிவித்த விஜய், அதே சென்னையில் நடைபெறும் சசிபெருமாளின் போராட்டத்திற்கு எட்டி கூடபார்க்கவில்லை, ரஜினியோ ஆதரவு அறிக்கை கூட வெளியிடவில்லை,
ஒன்று மட்டும் நன்றாக விளங்குகிறது, நாட்டு மக்கள் மத்தியில் முழுமையான அக்கறை இல்லாதவர்கள் தான் ஊடகத்துறையிலும், சினிமாதுறையிலும் மிகைத்து காணப்படுகிறார்கள் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.
No comments:
Post a Comment