Monday, January 7, 2013

டெல்லி மாணவி வன்புணரப்பட்ட சம்பவத்திற்கு அந்தப் பெண்ணும் ஒரு காரணம்தான்:-சாமியார் அஷ்ரம் பாபு பேட்டி


டெல்லி மாணவி வன்புணரப்பட்ட சம்பவத்திற்கு அந்தப் பெண்ணும் ஒரு காரணம்தான்:-சாமியார் அஷ்ரம் பாபு பேட்டி 


"இரவில் ஓடும் பேருந்தில் 6 நபர்களால் கூட்டாக டெல்லி மாணவி வன்புணரப்பட்ட குற்றச் சம்பவத்திற்குக் குற்றவாளிகள் 6 பேர் மட்டுமல்ல அந்தப் பெண்ணும் ஒரு காரணம்தான்" என்று சாமியார் அஷ்ரம் பாபு பாதிக்கப்பட்ட மாணவி மீதே குற்றம்சுமத்தி கூறியுள்ளார்

டெல்லியில் 6 நபர்களால் மருத்துவ துணை மாணவி கூட்டாக வன்புணரப்பட்டு கொல்லப்பட்ட குற்றச் சம்பவம் நாட்டில் பெண்களுக்கு எதிராக வன்முறைகளுக்கு எதிராக பெருத்த பிரளயத்தை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட அம்மாணவிக்கு ஆதரவாக, குற்றவாளிகள் 6 பேரையும் தூக்கிலிட வேண்டுமென நாடு முழுவதும் கோரிக்கைகள் எழுந்தன.

இந்நிலையில், அத்துயரச் சம்பவத்துக்கு அந்த 6 குற்றவாளிகள் மட்டும் காரணமல்ல; அம்மாணவியும் காரணம்தான் என குஜராத்தைச் சேர்ந்த சாமியார் அஷ்ரம் பாபு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்காளிடம் கூறும்போது,
"டெல்லி மாணவி வன்புணர்வு சம்பவத்துக்கு அந்த 6 பேர் மட்டும் தான் குற்றவாளிகள் என்று கூற முடியாது. அவர்களைப் போல் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணும்அக்குற்றத்துக்கு ஒரு காரணமாக இருந்துள்ளார். சம்பவத்தின் போது அந்தப் பெண் அவர்களைச் சகோதரர்கள் என்று அழைத்திருக்க வேண்டும். என்னை விட்டுவிடுங்கள் அண்ணா என கெஞ்சியிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் அவள் தனது மானத்தையும், வாழ்க்கையும் காப்பாற்றி கொண்டிருக்க முடியும்.

வன்புணர்வு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கக் கூடாது. கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் பட்சத்தில் அது வரதட்சணை கொடுமைக்கான தண்டனையைப் போல் தவறான முறையில் பயன்படுத்தப்படலாம்." என்று தெரிவித்துள்ளார்.

அவரின் இக்கருத்துக்குப் பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன.
 ஏற்கனவே மதுரை ஆதீனம் சாமியார்  பெண்கள் பர்தா அணிய வேண்டுமென கூறியதும் குறிப்பிடதக்கது,
பி கு:- முற்றும் துறந்த சாமியார்களுக்கு இப்போது தான் புத்தி வருகிறது போலும் 

No comments:

Post a Comment