Thursday, January 24, 2013

ஒரு அப்பாவி பெண்ணின் அழுகுரலை செவிதாழ்த்தி கேளுங்கள்

தமிழக அரசே! தமிழக மக்களே! ஒரு அப்பாவி பெண்ணின் அழுகுரலை செவிதாழ்த்தி கேளுங்கள்

பெயர் வினோதினி வயது 23 படிப்பு தகவல் தொழில்நுட்ப்ப பட்டதாரி ஊர் காரைக்கால் தந்தை பெயர் ஜெயபாலன்

வினோதினி மீது ஒருதலை காதல்கொண்ட மனிதமிருகம் சுரேஷ் என்பவன் விநோதினியால் காதல் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த நவம்பர்மாதம் 14ஆம் தேதி ரோட்டில் நடந்து சென்ற அவர்மீது ஆசிட்வீசியுள்ளான் இதில் முகம் மற்றும் உடலின் அனைத்து பாகங்களும் கருகி உருகுழைந்துபோன வினோதினி கடந்த இரண்டுமாதங்களாக சென்னை தனியார் மருத்துவமனையில் உயிருக்கு போராடிவருகிறார்.
தனியார் நிறுவத்தில் காவலாளியாக பணிபுரியும் அவர்தந்தை மருத்துவசெலவிற்கு பணமில்லாமல் மகளை காப்பாற்ற பெரிதும் அவதிப்பட்டுவருகிறார்.இன்றுவரை அரசிடமிருந்து சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.
டெல்லி மாணவிக்காக நீலிக்கண்ணீர் வடித்த சமூக(?)ஆர்வர்களும் டெல்லிக்கே சென்று ஆர்ப்பாட்டம் நடத்திய நம்முடைய தமிழ் நடிகர்நடிகைகளும் இந்த சகோதரிக்காக எந்தகூப்பாடும் போடவில்லை.
நள்ளிரவுவரை காதலனுடன் ஊர்சுற்றிய டெல்லிமாணவியைவிட ஒருபாவமும் அறியாத இந்த தமிழச்சி எந்தவிதத்தில் குறைந்துபோய்விட்டாள்.ஆசிட் அடிப்பவர்களுக்கு கடும்தண்டனை கொடுக்க இந்தியசட்டதில் எங்கும் இடமில்லை.இலகுவாக ஜாமீனில் வெளிவரும் வகுப்பே இவர்கள்மீது பதியப்படுகிறது.
இந்த அநியாத்திற்க்காக குரல்கொடுக்காதவர்கள் டெல்லிக்குசென்று குரல்கொடுப்பதை பார்த்தால் அடுத்தவீட்டுக்காரன் பட்டினிகிடக்கும் போது பக்கதுமாநிலத்திர்க்கு சென்று அன்னதானம் செய்வதுப்போலுள்ளது.
இந்த அநியாயத்தை செய்தவனுக்கு கடுமையான தண்டனை கொடுக்கவும்,இந்த சகோதரிக்கு அரசு முழு மருத்துவவசதி செய்துதரவும் தயவுசெய்து குரல்கொடுங்கள்…..
 http://www.youtube.com/watch?v=HJm-pvdlyA0

No comments:

Post a Comment