Wednesday, January 23, 2013

விரல் நுனிகளையும் சீராக்க நாம் ஆற்றல் பெற்றுள்ளோம்


விரல் நுனிகளையும் சீராக்க நாம் ஆற்றல் பெற்றுள்ளோம்
______________________________________________________


மனிதனின் எலும்புகளை ஒன்று திரட்ட மாட்டோம் என்று அவன் எண்ணுகிறானா? அவ்வாறில்லை! அவனது விரல் நுனிகளையும் சீராக்க நாம் ஆற்றல் பெற்றுள்ளோம்'

75 : 3, 4 - குர்ஆன்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அன்றைய மக்கள் கேட்டனர் நாங்கள் இறந்த பிறகும் எங்களை உயிர்பிக்க முடியுமா?? எங்கள் எலும்புகள் மக்கி மண்ணான பிறகும் இறைவன் எங்களை உயிர்பிப்பானா??

அதற்கு பதில் அளிக்கும் முகமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் இறக்கிய வஹி (செய்தி) உங்களுடைய எலும்புகள் அல்ல விரல் நுனிகள் வரை சீராக்குவோம் என்று....


விரல் நுனிகளை குறிப்பிட்டு கூற காரணம் என்னவென்றால் மனிதனுடைய எந்த உறுப்பாக இருந்தாலும் அதை வைத்து இந்த நபருடையது தான் என்று குறிப்பிட்டு கூற முடியாது. ஆனால் விரல் ரேகை அவ்வாறல்ல ஒரு நபரிலிருந்து மற்றொரு நபருக்கு வேறுபடும் இன்று வரை அராசங்க துறைகளில் அனைத்திலும் ஒருவரை அடையாளபடுத்த விரல் ரேகைகளையே பயன் படுத்துகின்றனர்.

இவ்வாறு வேறு படும் விரல் ரேகைகளையே திரும்ப கொண்டு வந்து விடுவோம்,எலும்புகளை ஒன்று திரட்டுவது தனக்கு பெரிய விசயமல்ல என்ற அறிவியல் உண்மையை அல்லாஹ் கூறுகின்றான்.

No comments:

Post a Comment